Thursday, August 5, 2010

'காப்பி அடிக்கும் கெளதம் இப்படி பேசக் கூடாது'


சொந்த சரக்கை பயன்படுத்தாமல் எல்லாப் படங்களையும் காப்பி அடித்து இயக்கிக் கொண்டிருக்கும் கெளதம் மேனனுக்கு அஜீத்தை விமர்சிக்கும் அருகதை கிடையாது என்று அஜீத் ரசிகர்கள் காட்டமாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அஜீத் ரசிகர்கள் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது...

சொந்தமாக கற்பனைத் திறனே இல்லாத ஒரு இயக்குநர் இருக்கிறார் என்றால் அது கெளதம் மேனன் மட்டும்தான். மிகப் பெரிய ஏமாற்றுப் பேர்வழிதான் இந்த கெளதம் மேனன். ஹாலிவுட்டில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் காப்பி அடித்தே படம் எடுத்துப் பழக்கப்பட்டவர் இவர்.

இவர் பணியாற்றும் லட்சணத்தைப் பாருங்கள்.

இவரிடம் 15 முதல் 20 உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஆளுக்கு 2 டிவிடிக்களைக் கொடுத்து தினசரி படம் பார்க்கச் செய்கிறார். ஒவ்வொன்றிலிருந்தும் 2 சீன்கலை எடுத்து அவரிடம் கொடுக்கச் சொல்கிறார்.

இப்படித்தான் இவரது படத்தின் சீன்கள் உருவாக்கப்படுகின்றன. சொந்தமாக எதையும் செய்வதில்லை. கெளதம் மேனனை நீங்கள் சந்திக்க விரும்பினால் அவரை அவரது அலுவலகத்தில் பார்க்க முடியாவிட்டாலும் கூட, ஜெமினி மேம்பாலத்திற்கு அருகே உள்ள பார்சன் காம்ப்ளக்ஸில் அடிக்கடி பார்க்கலாம். பர்மா பஜாரில் பார்க்கலாம், அல்லது பிற டிவிடி விற்பனை கூடங்களில் பார்க்கலாம்.

இங்குதான் அவர் அடிக்கடி போய் லேட்டஸ்டாக வந்த ஹாலிவுட் பட டிவிடிக்களை வாங்குவது வழக்கம்.

சினிமா படம் எடுப்பது குறித்து இப்போது உள்ள 5 வயதுக் குழந்தைக்குக் கூட நன்றாகத் தெரியும். படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே ஸ்கிரிப்ட்டை ரெடி செய்ய வேண்டும் என்பது ஒருஅடிப்படை. ஆனால் கெளதம் மேனனுக்கு மட்டும் அது தெரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவாராம், அங்குதான் வசனமே எழுதுவாராம். கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடுவதிலும் இவருக்கு அதிக விருப்பம்.

அவருடைய மேனரிசம் கூட ஒரிஜினல் கிடையாது. பேட்டிகளின்போது அவர் காட்டும் மேனரிசங்கள், குறுக்கிட்டுப் பேசுவது எல்லாமே பல்வேறு டிவிடிக்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்.

பிரபலமான இயக்குநர்கள், படைப்பாளிகளின் பேட்டிகள், பேச்சுக்களைப் பார்த்து காப்பி அடித்து மேனரிசத்தை கற்றுக் கொள்கிறார் இவர்.

கெளதம் மேனன் ஒரு செயற்கையான மனிதர்.

சமீபத்தில் வெளியான ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் டிவிடியைப் பார்த்து விட்ட இவர் உடனடியாக அதேபோல ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காக 15-20 போலீஸ் ஸ்டோரி டிவிடிக்களை வாங்கினார். இப்படித்தான் இவர் கதையை உருவாக்குகிறார். இவர் பார்க்கும் ஹாலிவுட் படங்களை வேறு யாருமே பார்க்க மாட்டார்கள், அஜீத் பார்க்க மாட்டார் என்று நினைத்து விட்டார் போலும்.

தனது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரிடம் ஸ்கிரிப்ட்டை இவர் சொல்வதே கிடையாது. இதனால்தான் தபு போன்றவர்கள் கூட இவருடன் பணியாற்ற மறுத்து விட்டனர்.

நடிகர்கள், டெக்னீஷியன்களுடன் மோதுவதே இவரது வழக்கமாகி விட்டது. முன்பு ஹாரிஸ் ஜெயராஜுடன் மோதினார்.இப்போது அஜீத்துடன் மோதியுள்ளார்.

தனக்கு சரக்கு தீர்ந்து போய் விட்டது என்பதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். தான் காப்பி அடித்த டிவிடிகளின் பெயர்களை பட டைட்டிலின்போது போட முன்வர வேண்டும்.

சூர்யாவுக்காக காத்திருக்கத் தயார் என்று கூறுகிறார் கெளதம். சூர்யாவை விட சிறப்பாக நடிக்கக் கூடிய தகுதி எங்களது அஜீத்துக்கு இருப்பதை அவர் உணர வேண்டும். வாலி, வரலாறு, வில்லன், சிட்டிசன் படங்களில் அஜீத்தின் நடிப்பு எவ்வளவு சிறப்பாக அமைந்தது என்பதை அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கெளதமின் பேச்சைக் கேட்டு அஜீத் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்களாகிய நாங்கள் கெளதமை வன்மையாக கண்டிக்கிறோம். கெளதம் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

இப்போது கெளதம் மேனன் இயக்கி வரும் நடுநிசி நாய்கள் படம் கூட பார்டர் டவுன் படத்தின் டிவிடி காப்பிதான் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகிறோம் என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment