
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கபபட்டதற்கு காரணமாக, அமெரிக்க ராணுவத்தினால் தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதி ஒசோமா பின்லேடன். இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சைகளும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்ற விளக்கங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பின்லேடன் மாதிரியான வேடத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இயக்குனர் சாமியின் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி தற்போது நடித்து வரும் படம் “அய்யனார்”.
இதில் சந்தானம் பின்லேடன் கெட்டப்பில் வந்து காமெடியில் கலக்கவிருகிறார்.
சந்தானத்தின் பின்லேடன் காமெடி இந்த ஆண்டின் சிறந்த காமடியாக இருக்கும் என்று ‘அய்யனார்’ படக்குழுவினர் கூறுகின்றனர்.
என்ன, சந்தானம் பின்லேடனா...? காமெடி பண்ணாதீங்கப்பா...!
No comments:
Post a Comment