Thursday, August 26, 2010

குவியும் பக்தர்கள்! -அலட்சிய சுகாதாரத்துறை!


உலகத்திலுள்ள அத்தனை பகுதிகளிலிருந்தும் சாதி, மத பாகுபாடு இல்லாமல் மக்கள் கூட்டம் குவியும் திருவிழா, புனித வேளாங் கண்ணி கோயிலில் ஆயத்தமாகிக் கொண்டி ருக்கிறது. ஆகஸ்ட் 29-ந் தேதி தொடங்கி... பிரார்த்தனைகள், வாண வேடிக்கைகள், அங்க பிரதட்சணம், தேர் இழுத்தல் என செப்டம்பர் 8-ந் தேதிவரை கோலாகலமாகவும், குதூ கலமாகவும் கொண்டாடப்படும்.
அப்பேர்ப்பட்ட கோலாகலமான வேளாங் கண்ணி திருவிழாதான் சில சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் தீனி போட்டிருக்கிறது.

""எங்க குடும்பம் நிம்மதியா சந்தோஷமா வாழணும், பணம், பொருள் சேரணும், பிள் ளைங்க படிச்சு முன்னேறணும். -இப்படி பலவிதமான வேண்டுதல்களோடு புனித வேளாங் கண்ணி மாதாவை தரிசிக்க வர்றவங்கள்ல பெரும்பாலும் நோய்கள் குணமாகணும்னுதான் அதிகம்பேர் வருவாங்க. இப்படி பலவிதமான நோய்களோடு வர்றவங்க, அந்த நோயையும் இந்தப் பகுதி மக்களிடம் பரப்பிவிட்டு போயிடு றாங்க'' என்று புது குண்டைத் தூக்கிப்போட்ட முக்குலத்துப் புலிகள் அமைப் பின் தலைவர் ஆறு சரவணன், ""அப்படித்தான் போன வருசம் பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியான்னு பீதி கிளப்பிக் கிட்டிருந்த நோய்களோடு பலரும் வேண்டு தலுக்கு வர... அந்த நோய்களெல்லாம் இந்தப் பகுதி மக்களுக்கு தொற்ற ஆரம்பிச்சுடுச்சு. சரி... சிகிச்சை எடுத்துக்கலாம்னா இந்தப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களே இல்லை. இதனால சின்னச்சின்ன வியாதி களுக்குக்கூட நாகப்பட்டினம் போக வேண்டி யிருக்கு.

திருப்பூண்டியை தலைமையாகக் கொண்ட காரப்பிடாகை, சின்னத்தும்பூர், சோழ வித்தியாபுரம், கீழையூர், திருக்குவளை, துணை சுகாதாரநிலையங்கள், விழுந்த மாவடி, வேளாங்கண்ணி, பி.ஆ.புரம், பாலக் குறிச்சியிலுள்ள ஆ.சு.நிலையங்களிலும் டாக் டர்களே இல்லை. ஏற்கனவே பலவிதமான நோய்களோடு பாதிக்கப்பட்டிருக்கும் இப் பகுதி மக்கள்... வேளாங்கண்ணிக்கு வர்ற நோயாளிகளால் பரப்பப்படும் நோய்க் கிருமிகள்னு டபுள் அவஸ்தைப்படுறாங்க. வேளாங்கண்ணி திருவிழா ஆரம்பிக் கிறதுக்குள்ள இப்பகுதி மக்களுக்கு டாக்டர் களையும், மருத்துவ வசதிகளையும் ஏற் படுத்தலைன்னா இப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்'' என்கிறார் கொந்தளிப்பாக.

வருஷா வருஷம் வேளாங்கண்ணிக்குத் தவறாமல் போய்வரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவரான அந்தோணிராஜா, ""இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம்னு எல்லா மதத்துக்காரங்களும் கலந்துக்கிற புனித திருவிழாங்க இது. கை, கால் விளங்காம போனவங்க, மனநிலை பாதிக் கப்பட்டவங்க, தீராத வியாதி யுள்ளவர்கள், பில்லி சூனியம் மந்திரத்தால் கட்டப்பட்டவர்கள்னு 30 சதவீதம் பேர் வேளாங்கண்ணிக்கு போறாங்கன்னா... வேண்டுதல்கள் நிறைவேறி அற்புதம் நடந்தவர்கள் 20 சதவீதம் பேர் நன்றிக்கடன் செலுத்த வருவாங்க. மீதமுள்ள 50 சதவீதத்தில் 35 சதவீதம் பேர் நோய் குணமாக ணும்னுதான் வருவாங்க. அதனால தான் சுகாதாரத்துறை மூலமா போன வருஷம் திருவிழாவுல மருத்துவ முகாம் அமைச்சாங்க. ஆனா எதுவுமே சரியா செயல் படுத்தப்படல. இந்த வருஷமாவது சரியா செயல்படுத்தணும்'' என்கிறார் கோரிக்கையாக.

வேளாங்கண்ணி பகுதி மக்களுக்கு ஆம்பு லன்ஸ் போல் ஓடிவரும் ஆட்டோக்காரர் தம்பி ராஜன் நம்மிடம், ""திரு விழா சமயத்துல மட்டு மில்லீங்க... சாதாரண மாகவே மக்கள் கூட் டம் அலைமோதுற பகுதி இது. வெளியூர்லயிருந்து வர்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீர்னு பிரசவ வலி உண் டாகி, அக்கம் பக்கத்துல டாக்டர்கள் இல்லாம எத்தனை கர்ப்பிணிகள், குழந்தைகள் இறந்துருக்காங்க தெரியுமா? நினைக்கும்போதே அழுகையா வருதுங்க'' -கண் கலங்குகிறார்.

""இந்த வேளாங்கண்ணி திருவிழாவை சுற்றிப் பார்க்க வர்றாங்களே பதினைந்து சதவீதம் பேர்'' -முகம் சுளித்தபடி பேசத் தொடங்குகிறார் வேளாங்கண்ணி திருவிழா வின் ரெகுலர் பக்தரான டேவிட். ""திரு விழாவுல கொடியேத்துற 12:30 மணிவரைக்கும் அமைதியா இருப்பாங்க. முடிஞ்சதுமே பக்கத்துல இருக்கிற வாஞ்சியூருக்கு கிளம்பிடுவாங்க. எப்படிப் பட்ட சரக்கா இருந்தா லும் விலை கம்மியா கிடைக்கிறதால குடியும் கும்மாளமுமா லாட்ஜ் களுக்குப் போயிடுவாங்க. இவங்களையே டார்கெட் டா வெச்சிருக்கிற விபச்சார கும்பல் பொம்பளைங்களை கூட்டிக்கிட்டு வந்து "வா... வா..'ன்னு அழைத்து பணம் கறக்க ஆரம்பிச்சிடும்'' என்று வேதனையுடன் சொன்னவர், ""வேளாங் கண்ணி கோயிலில் பெரிய தேரை இழுக்க பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்து போறவங்களை அனுமதிக்கிறதில்லைங்க. பெங்களூர்க்காரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்'' என்கிறார் வேதனையுடன்.

இந்த ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் நாகை கலெக்டர் முனியநாதனின் கவனத்துக்கு கொண்டு சென் றோம். ""வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை செய்திருக்கோம். டாக்டர்கள் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்றோம். அசம்பாவிதங் கள் நடக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப் படுத்துகிறோம்'' என்கிறார் பொறுப்புணர்வுடன்.

இங்கு மட்டுமல்ல.... தமிழ்நாடு முழுக்க இருக்கும் பிரம்மாண்ட கோயில்கள், மக்கள் அதிகமாக வந்துபோகும் பகுதிகளில் டாக்டர்கள் பற்றாக் குறையை நீக்கி... மருத்துவ சேவையை அதிகப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment