Thursday, August 26, 2010

ரயில் பணம் வாபஸ்! சாதித்த தமிழர்!


ரயில்வே துறையில் இருந்து தனக்கு வந்த கடிதத்தைப் பார்த்த ஹோட்டல்காரர் சென்னை வேலப்பன்சாவடி ராமசாமிக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.

""தங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலைய கமர்ஷியல் பிரிவுக்குச் சென்றார். கடிதத் தைப் பெற்றுக்கொண்டு 450 ரூபாயை எடுத்து நீட் டிய காசாளர், ""ஓப்பன் டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில்ஏறி... தொடர்ந்து பயணம்செய்ய முடியாமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, அந்த டிக்கெட்டுகளை அந்த ஸ்டேஷனில் ஒப்படைத்து, டிக்கெட்டுக்கான பணத்தை பெற்ற முதல் இந்தியர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்'' என்றார்.

""நான் செய்தது மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமைந்துவிடட்டும்'' -பணத்தைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு கிளம்பினார் வேலப்பன்சாவடி ராமசாமி. சென்னை பூவிருந்த வல்லிக்கு அருகிலுள்ள வேலப்பன்சாவடியில் ஹோட்டல் வைத்திருப்பவர் ராமசாமி. இவ ருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகிலுள்ள வடக்கம்பட்டி கிராமம்.

ஒரு விசேஷத்திற்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்குச் சென்ற ராமசாமிக்கு, திரும்பி சென்னை வருவதற்கு ரிசர்வேஷன் டிக்கெட் கிடைக்கவில்லை.

"சரி ஓப்பன் டிக்கெட் எடுக்கலாம், ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் பய ணிக்கலாம்' என்று 5 பேருக் கும் டிக்கெட் எடுத்தார். விருதுநகர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.

""கரெக்ட் டயத்துக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து விட்டது. அன்-ரிசர்வ்டு பெட்டியில் பயங்கர கூட் டம். எப்படியோ முண்டியடித்து ஏறிவிட்டோம். உள்ளே கால் வைக்க இடமில்லை. மிகுந்த அவஸ்தை யோடு பயணம் செய்து எப்படியோ மதுரை வரை வந்துவிட்டோம். அதற்குமேல் அதே நெருக்கடியில் பயணிக்க முடியுமா? மதுரையில் ஐந்துபேரும் இறங்கிவிட்டோம். அதன்பிறகு அந்த டிக்கெட்டு களை கேன்சல் செய்துவிட்டு பணத்தை வாபஸ் பெறவேண்டும் என்று முடிவு செய்தேன். டிக்கெட் கவுண்ட்டருக்கு சென்று கேட்டேன். ரிசர்வேஷன் செய்த டிக்கெட்டை மட்டும்தான் ரத்து செய்து இங்கே பணம் பெற முடியும் என்றார் அங்கிருந்தவர். வாக்குவாதம் ஆகிவிட்டது. ரெண்டே ரெண்டு சாதா பெட்டிகளை போட்டு, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை கொடுத்தால் எப்படி? மூச்சு முட்டி சாகணுமா? என்று சத்தம் போட் டேன். அதற்குள் மதுரை ஸ்டேஷன் உதவி மேலா ளர் அங்கே வந்துவிட்டார். டிக்கெட்டை பிற ஸ்டே ஷனிலும் மாற்ற முடியும் என்ற விஷயம் எங்கள் அலு வலர்களுக்கே தெரிவதில்லை. உங்க டிக்கெட்டுடன் மனு எழுதிக் கொடுத்துவிட்டு போங்கள் என்றார். எழு திக் கொடுத்துவிட்டு வந்தேன். இரண்டு வருடத்திற் குப் பிறகு இப்போதுதான் அந்த டிக்கெட்டிற்கான கேன்சல் பணம் வந்திருக்கிறது'' என்றார் ராமசாமி.

எப்படியோ... காலதாமதமானாலும் நுகர்வோர் என்ற உரிமையோடு ஒரு ஸ்டேஷனில் வாங்கிய ஓப்பன் டிக்கெட்டை இன்னொரு ஸ்டேஷனில் கொடுத்து, பணத்தைப் பெற்று மற்ற பயணிகளுக்கு விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறார் வேலப்பன்சாவடி ராமசாமி.

No comments:

Post a Comment