Saturday, August 28, 2010

நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி


செப்டம்பர் 3, 2010 !

ரஜினி வீட்டின் மிகப்பெரியவிழா. இளைய மகள் சவுந்தர்யாவை அஷ்வின் குமாருக்கு கன்னிகாதானம் செய்து தரப்போகிறார் ரஜினி.

“கடைசி பிள்ளையின் கல்யாணத்தை கடலை உடைத்து கொண்டாடு” என்று கிராமப்புறங்களில் கூறுவர். அதற்கு பிறகு பெரிய விசேஷம் எதுவுமில்லை என்பதால் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் எனபதே இதன் பொருள்.

கிராமத்திலேயே இப்படி கொண்டாடப்படும் என்றால்... தமிழ்த் திரையுலகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் ’கொண்டாடப்படும்’ சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் வீட்டு திருமணம்.... அதுவும் செல்ல மகள் திருமணம்...எப்படி இருக்கும்னு சொல்லணுமா என்ன?

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் திருமணத்திற்கு நண்பர்கள் உறவினர் தவிர்த்து அரசியல் அளவில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப் பட்டிருந்தனர்.

ஆனால் இந்தத் திருமணத்திற்கு எந்தப் பாகுபாடோ, வேறுபாடோ இன்றி திரைத்துறை, அரசியல், பத்திரிக்கைத்துறை என்று முடிந்தவரை அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார் பொறுப்பான அப்பா ரஜினி!

தமிழக முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு ரஜினி நேரில் சென்று அவரை திருமணத்திற்கு அழைத்தார். அதே போல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் மனைவி சகிதமாக சென்று அழைப்பிதழ் வழங்கினார். இப்படி ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்பது மட்டுமில்லாமல் அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து வருகிறார்.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனையும் நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்தார்.

ரஜினி திரைப்படங்களில் ஸ்டைலாக புகைப்பிடிப்பது இளைஞர்களிடையே தீய பழக்கத்தை தூண்டுகிறது என்று விமர்சித்தார் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சரான அன்புமணி.


அதற்குமுன்பு... ரஜினியுடன் இருந்த மோதல் காரணமாக, பாபா திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கட்சி பா.ம.க. ஒரு கட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் பாபா படப்பெட்டியையே தூக்கிக் கொண்டு போய் பரபரப்பு கிளப்பியவர்கள் பா.ம.க.வினர்.

அப்படிப்பட்ட பா.ம.க.வின் எதிர்காலம் என்று கொண்டாடப்படும் டாக்டர் அன்புமணியையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ரஜினியும், அன்புமணியும் நெகிழ்ந்து போனார்களாம்.

இப்படி தன்னை எதிர்த்தவர்களையும் நேரில் சென்று தன் வீட்டு விசேஷத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்.

நக்கீரன் ஆசிரியரோடு நீண்ட பல வருடங்களாக நட்பு பாராட்டி வரும் ரஜினி, கடந்த வெள்ளிக்கிழமை (27ந் தேதி) நக்கீரன் அலுவலகத்திற்கே வந்து ஆசிரியர் உள்ளிட்ட நக்கீரன் குடும்பத்தினரை மகள் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு கொடுத்தார்.

சிங்கம் சிங்கிளாதான் வரும் - சிவாஜியில் தான் பேசிய வசனத்தை சொல்லாமல் சொல்வதாக இருந்தது அவரின் வருகை.


துணைக்கு யாரையும் அழைத்து வராமல்... சிம்பிளாக...தனி மனிதராக நக்கீரன் அலுவலகம் வந்தவர்.... பைண்டிங் ஊழியர்கள் தொடங்கி எடிட்டோரியல் வரை எல்லோரிடமும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.

லிப்ட் எல்லாம் எதுக்கு... அப்படியே நாலு ஸ்டெப் நடந்துடுவோம் என்று நாலு மாடியையும் நடந்தே ஏறினார் ரஜினி’ ஃபெண்டாஸ்ட்டிக்கா இருக்கு ஆபீஸ் அட்மாஸ்பியர். வாழ்த்துகள் கோபால்’ என்றபடி ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தவர்... கல்யாண பரபரப்புக்கு இடையிலும் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நக்கீரன் அலுவலகத்தில் இருந்த ரஜினி ஒரு மினி ஃபோட்டோ செஷனையே நடத்தி முடித்து விட்டார்.

வயசானாலும் உன் இளமையும்... ஸ்டைலும் மாறவே இல்லை படையப்பா....!

No comments:

Post a Comment