Friday, August 27, 2010

நித்யானந்தாவுக்கு இன்னமும் திமிர் அடங்கவில்லை போலும்.


பரபரப்பு வீடியோ, வழக்கு, கைது என்று தொடர்ந்து சரிந்து வரும் தன் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்த பல முயற்சிகளை எடுத்து வரும் நித்யானந்தா... தமிழகத்திலும் தன் செல்வாக்கை திரும்ப பெற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கர்நாடக ஆசிரமத்துக்கு சில டி.வி. நடிகைகளை அழைத்து பூஜைகள் நடத்தியது போன்று தமிழகத்தில் சில பிரபலங்களை கொண்டு செல்வாக்கை மீட்கும் திட்டத்தை வகுத்து வருகிறார் என்கிறார்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வரும் கர்நாடக காவல்துறை அதிகாரிகள்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் காமெடி நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரை வரவழைத்தாராம். அடுத்த கட்டமாக தமிழக இந்து அமைப்புகள் சிலவற்றை தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்படி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாகவே இப்படி பலர் நித்யானந்தாவை சந்தித்து செல்கிறார்கள்.

"இதோடு ரத யாத்திரை ஒன்றை தமிழகம் முழுக்க நடத்தவும், வினாயகர் சதுர்த்தி ஊர்வலத் தின் போதும், ரத யாத்திரை யின் போதும் இந்து மத வெறியை தூண்டிவிடவும் திட்டமிட்டிருக்கிறது நித்யா னந்த ஆசிரமம்'’ என அதிர்ச்சி தகவலைக் கொடுக் கிறார் கர்நாடக மாநில தி.மு.க. பிரதிநிதியாக உள்ள சுரேஷ்!

""சமீப காலமாக நித்யானந்தா ஆசிரமத்துக்கு தமிழகத்தில் இருந்து பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கிறார்கள். அப்படி வந்து போகிறவர்களில் தமிழக சிவசேனா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நாகூரை சேர்ந்த தங்க. முத்துக் கிருஷ்ணன், பழனி சந்திரசேகர், தஞ்சை சசி உள்ளிட்ட பலரும் முக்கியமானவர்கள். நாகூர் தங்க. முத்துக்கிருஷ்ணனை தலைவராக கொண்டு புதிதாக இந்து அதிரடிப்படை என்கிற அமைப் பையே இதற்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அமைப்பின் மூலமாகத்தான் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப் போகிறார்கள். முதலில் கும்பகோணத்தில் இருந்து திருவண்ணா மலை வரை மட்டும் இந்த ரத யாத்திரையை நடத்துவதாக இருந்தார்கள். இப்போது தமிழகம் முழுக்க ஒரு மாதத்துக்கு மேல் இந்த ரத யாத்திரையை நடத்த இருக்கிறார்கள்.

இதற்காக 25 லட்ச ரூபாய் கொடுப்பதாக நித்யானந்தா ஆசிரம தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதுவரை 18 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டி ருக்கிறது. இந்த ரத யாத்திரையின் போது திட்ட மிட்டு சில இடங்களில் பிரச்சினை ஏற்படுத்தப் போகிறார்கள். இதன் மூலம் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தி.மு.க. அரசுக்கும் நெருக்கடி கொடுப்பதுதான் அவர் களின் திட்டம். தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு நெருக்கடியை ஏற்படுத்த இப்போதே தயாராகி விட்டார்கள். இது மட்டுமின்றி வினாயகர் சதுர்த்தி தினத்தில் சென்னையில் ஒரு ஊர்வலம் நடத்தி பிரச்சினை உண்டாக்கவும் திட்டமிட்டிருக்கிறார் கள்'' என்று அதிரடித் தகவல்களை சொல்லிக் கொண்டே போன சுரேஷிடம், "உங்களுக்கு எப்படி இந்த தகவல்கள் கிடைத்தன' என்றோம்.

""நித்யானந்தா ஆசிரமத்தின் தரப்பில் இருந்து செல்கின்ற இ-மெயில்களை ஆராய்ந்தாலே எல்லாம் தெரியவரும். அவர்கள் போட்ட திட்டங் கள், பணம் கொடுத்தது எல்லாமே நிரூபணமாகும். நித்ய பிராணானந்தா என்கிற சாமியாரின் இ-மெயிலில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயில் கள் ஒரு சிலரின் மூலம் எங்களுக்கும் வந்தது. அதன் பிறகே இதைப்பற்றி முழுமையாக கவனிக்க ஆரம்பித்தோம்'' என்ற சுரேஷ், ""தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக இப்படி ஒரு சதி செய்யப்படு கிறது என்பதை எங்கள் கர்நாடக மாநில தி.மு.க. தலைவர் பெரியசாமி.. துணை முதல்வர் அலுவல கத்தின் பார்வைக்கு இந்த தகவல்களை கொண்டு சென்றிருக்கிறார். கூடவே தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இந்த ரத யாத்திரை பற்றி அலர்ட் செய்து இ-மெயிலும் அனுப்பியிருக்கிறோம். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக விட்டுவிடக் கூடாது என்கிற அக்கறையோடு செயல் படுகிறோம்'' என்று முடித்தார்.

நித்யானந்தாவுக்காக ரதயாத்திரை நடத்தப்போகிறார் என்று சொல்லப்பட்ட நாகூர் தங்க.முத்துக்கிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். விஷயத்தை கேட்டதுமே, ""ஆமாம்... விரைவில் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போகிறோம். இந்து துறவியர்களே மோசம் என்பது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றவே ரத யாத்திரைக்கு திட்டமிட்டிருக் கிறோம். நான் ஏற்கனவே இரண்டு முறை ரத யாத்திரை நடத்திய அனுபவம் உள்ளவன். 42 நாட்கள் இந்த ரதயாத்திரையை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இன்னும் தேதி முடிவு செய்யவில்லை. இதற்காக இந்து அதிரடிப்படை என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டிருப்பது உண்மைதான். நான்தான் அந்த அமைப்புக்கு தலைவர்'' என்ற முத்துக்கிருஷ்ணனிடம்,

""நித்யானந்தாவுக்காகத்தான் இந்த ரத யாத்திரை நடத்தப்படுவதாகவும், அதற்காக 25 லட்ச ரூபாய் நிதி கொடுக்கப்படுவ தாகவும், ரத யாத்திரையின் மூலம் தமி ழகத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கர்நாடக மாநில தி.மு.க.வினர் புகார்கள் அனுப்பியிருக்கிறார்களே?'' என்று கேட்டோம்.

""நான் இப்போ பெங்களூர்ல இருந்துதான் உங்ககிட்ட பேசறேன். 4 நாட்கள் நித்யானந்தா ஆசிரமத்தில்தான் இருந்தேன். ரத யாத்திரையில் என்னோடு பங்கெடுக்க போகிற பழனி சந்திரசேகர் போன்றவர்களும் எனக்கு முன்பே ஆசிரமத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். வினாயகர் சதுர்த்திக்கு பிறகுதான் ரத யாத்திரையை தொடங்குவோம்.

ஆனால் வினாயகர் சதுர்த்தியின் போது நித்யானந்த வினாயகர் சிலையை உருவாக்கி சென்னையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்போகிறோம். இந்த ரத யாத்திரையால் எந்த பிரச்சினையும் வராது. ரத யாத்திரைக்கான செலவு முழுவதையும் மக்களிடமே கையேந்தி பெற இருக்கிறோம்'' என்கிறார் முத்துக் கிருஷ்ணன்.

ஆசிரம வட்டாரத்தில் விசா ரித்தபோது, ""தமிழகத்தில் தர்மா னந்தா (எ) லெனின் தந்த புகாரை வைத்து வழக்கு பதிவானது. இதன்பிறகு கர்நாடக மாநிலத்துக்கு நித்யானந்தா-ரஞ்சிதா சி.டி.வழக்கு மாற்றப்பட்டு நித்யானந்தா சிறைக்கு செல்லும் அளவிற்கு நிலைமை மாறியது. இதற்கு காரணம் சென்னையில் வழக்குப் பதிவானது தான். அதனால் தி.மு.க. அரசுக்கு எதிராகத்தான் நாங்கள் செயல் படுவோம்'' என்றார்கள்.

No comments:

Post a Comment