Friday, August 27, 2010

திரைக்கூத்து!

ஷங்கரின் ‘"த்ரீ இடியட்ஸ்' ரீ-மேக்கில் விஜய், மாதவன், ஜீவா நடிக்கிறாங்களாம். ஹீரோயின் நாற்காலிக்கு பலரும் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் இலியானாவும், சமீரா ரெட்டியும். ஆனால் ஷங்கரின் பார்வை தமன்னா மீதாம். கிட்டத்தட்ட தமன்னா ஒப்பந்தம் ஆகிவிட்டார். ஆனால் யாருக்கு ஜோடி என்பது முடிவாகவில்லை. ஆனால் விஜய்க்கு ஜோடியாக வேண்டும் என்பதுதான் தமன்னாவின் விருப்பமாக இருக்கிறது. இந்த விருப்பத்திற்கு காரணம்.... நம்பர் ஒன் நாயகியாக இருக்கும் தமன்னா பெரிய ஹீரோக்களுடன் நடித்த படங்கள் எல்லாமே ஹிட். ஆனால் விஜய்யுடன் நடித்த ‘"சுறா' மட்டும் சொதப்பிவிட்டது. அந்த அவப்பெயரை துடைக்க வேண்டும் என்றுதான் விஜய்யோடு டூயட் போட விருப்பப் படுகிறார் தமன்னா.


அநியாயமா இருக்கே?


"சிந்தனை செய்' டைரக்டர் யுவன் இயக்கி நடிக்கும் படத்தில் சந்தியாவை நாயகியாக கேட்டனர். "படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்க. படிச்சிட்டு ரிசல்ட் சொல்றேன்' எனச் சொல்லி விட்டாராம் சந்தியா. மேலும் சில கண்டிஷன்களை போட்டிருக்கிறார். அதனால் சந்தியாவிற்கு பதில் ஷம்முவை பேசியிருக்காங்களாம். ‘"கதையை கேக்காம நடிச்சாலும் குத்தம் சொல்றாங்க. கதையை கேட்டு நடிக்கலாம்னா அதுக்கும் பொல்லாப்பு சொல்றாங்க. என்னதான் செய்றது?' என நொந்து கொள்கிறார் சந்தியா.



நெல்லுக்கு நோ!


சத்யா, பாக்யாஞ்சலி நடித்திருக்கும் "நெல்லு' படம் விவசாயிகளின் பிரச்சினையைப் பற்றியது. அத்துடன்... கூலி உயர்வு கேட்ட விவசாயத் தொழிலாளர்கள் சுமார் நாற்பது பேர்களை குடிசையில் தூங்கும்போது பண்ணையார்கள் தீவைத்துக் கொளுத்திக் கொன்றார்கள். 1968-ல் தஞ்சை கீழவெண்மணியில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தை "நெல்லு' படத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் தணிக்கைக்குழு அந்த காட்சி உட்பட சில காட்சிகளை நீக்கச் சொன்னது. இதற்கு டைரக்டர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்ததால் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பச் சொல்லீட்டாங்களாம்.



வில்லங்க சப்ஜெக்ட்?


"என்னா கோழி இது அநியாயமா இருக்கு?' எனக் கேட்டபடியே லைனுக்கு வந்தார் இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன். அவரே தொடர்ந்தார்.

""ஏற்கனவே கொழுந்தன் மேல ஆசப்பட்டவ தன் குழந்தை மீது கொதிக்கிற பாலை ஊத்துற மாதிரி வில்லங்கமா ‘"உயிர்' படம் எடுத்தார் டைரக்டர் சாமி. இப்படிப்பட்ட கலாச்சார சீரழிவு படங்களால்தான் பூவரசி மாதிரி ஆளுங்க குழந்தைகள கொடூரமா கொல் றாங்க. இப்ப "மாமனார்-மருமகள்' கள்ளத் தொடர்ப வச்சு "சிந்து சமவெளி' படம் எடுக்குறார்.

இந்த மாதிரி படங்கள சென்ஸார் அனுமதிக்கக் கூடாதுனு கோரிக்கை மனு கொடுக்கப்போறோம். மீறி அனுமதிச்சா சென்ஸார் அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்தப் போறோம்'' என ஆவேசப் பட்டார் கண்ணன்.

அப்படியா!



அந்த தானியப் படத்தின் படப்பிடிப் பின் போது அந்த வளரும் ஹீரோ படத்தின் நாயகியான புதுமுகத்திற்கு ரூட் விட்டார். ஆனால் அம்மணி மசியவில்லை. ‘ஏதாவது இருந்தா ரெடி பண்ணு' என நடிகையின் உதவிஆளிடம் சொன்னாராம் ஹீரோ. "பத்தாயிரம் வெட்டுங்க. இந்த படத்து ஹீரோ யினவே ஓகே பண்ணீரலாம்' எனச் சொல்ல ஹீரோவுக்கு ஷாக். பணத்தை கொடுத்தவர் "நான்' என்பதை நடிகை யிடம் சொல்லாதே' எனச் சொல்லிவிட்டாராம். நடிகை கொடுத்த அப்பாயின்மெண்ட் நேரத்திற்கு சரியாக ஆஜரானார் நடிகர். அவரை பார்த்ததும் நடிகைக்கு அதிர்ச்சி. அதன்பின் அசடு வழிந்தாராம் நடிகை. அதன்பின் சுபகாரியம் சுப முகூர்த்தத்தில் சுபமாக முடிந்த தாம்.

No comments:

Post a Comment