Friday, August 27, 2010

பிரபல நடிகையுடன் டேட்டிங்! -மாட்டிய புரோக்கரின் அதிர்ச்சி வாக்குமூலம்!


கோவை மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள பிரபல தொழிலதிபர்கள் தங்கள் டென்ஷனை குறைக்க நினைத்தால் வலைய தளத்தில் அந்த இணைய தள முகவரியைத்தான் உடனே விரல் நோக அடிக்கிறார்கள்.

இந்த முகவரியை விரல் நோக அடித்தால் அதில்... ""உங்களை மகிழ்விக்க, உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்த இளம்பெண்கள் தயாராக இருக்கிறார்கள். எந்த மொழி பேசும் பெண் வேண்டு மானாலும் தயாராக உள்ளனர். இன்றைய இரவை இனிதாக்கிக் கொள்ளுங்கள்'' என்ற வாசகத்திற்கு பின்னால்...

கோவை என்றால் எந்த கல்லூரி பெண்கள் உங்களை மகிழ் விக்கப் போகிறார்கள் என்ப திலிருந்து அவர்களின் செல்ஃபோன் நம்பரும் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த இணையத்தில். இப்படி தொழிலதிபர்களுக்கு பெண்களை சப்ளை செய்யும் இந்த கும்பலைப் பற்றியான தகவல்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபுவுக்கு வர... அவரின் உத்தரவின் பேரில் ஏ.சி.முத்துராஜ் தலை மையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு விபச்சாரத் திற்கு பயன்பட்ட இரண்டு சொகுசு கார்களையும், ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்ததோடு...

அந்த விபச்சார கும்பலின் புரோக்கரான சீனி என்ற சீனிவாசனையும், அவன் தம்பியான தர்மா என்பவனையும், கொல்கத்தா அழகி சொப்னா, பெங்களூர் அழகி வைஷ்ணவி என்ற இரண்டு விபச்சார அழகிகளையும் துடியலூரில் உள்ள ஆடம்பர பங்களாவில் வைத்து கையும் களவுமாய் கைது செய்திருக்கிறது அந்த தனிப்படை.

அதற்குப் பிறகு கோவை பி-3 ஸ்டேஷனில் தனிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாசலு தலைமையிலான டீம் இணைய தள விபச்சார புரோக்கர் சீனியிடம் விசா ரணை நடத்த, அவன் சொன்ன தகவல்கள் போலீஸாரையே அதிர்ந்து போக வைத்திருக்கிறது. இனி அவன் வாக்குமூலம்.


""நான் பழனியத் தாண்டி இருக்கற கணக்கம்பட்டி யைச் சேர்ந்தவன். பெரிசா எந்த வேலையும் கிடைக்காம அலைஞ்ச போது ஆஷாங்கிற திருச்சியில் இருக்கிற ஒரு பொம்பள புரோக்கர்கிட்ட எடுபுடியா வேலைக்கு சேர்ந்தேன். அப்பதான் விபச்சார உலகத் துல கிங்கான கோவை பாலாஜி, குமார், நவாஸ், சந்தியா, செல்வம்ங்கற ப்ராஸ்டிடியூசன் புரோக்கர்களோட தொடர்பு கிடைச்சது. அப்புறம் கோவை பாலாஜிகிட்ட எடுபுடியா மாறினதுக்குப் பிறகு தான் இந்த உலகம் செக்ஸ்ங்கிற விஷயத்துல எப் படி சபலப்பட்டு கிடக்குதுங்கிறத புரிஞ்சுக்கிட்டேன்.

ஏன்னா கோவை பாலாஜியோட கஸ்டமர்கள் எல்லாம் பெரிய பிஸினஸ்மேன்கள். அவுங்க காலேஜ் பொண்ணுங்க, சினிமா நடிகைங்ககிட்ட உல்லாசமா இருக்கறதுக்காக லட்சக்கணக்குல பணத்த விட்டெறியறத கண்ணாரப் பார்த்தேன். அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டிருக்கற நாம பெரிய ஆளா வரணும்னா இந்த தொழில நம்மளே செய்யலாம்ன்னு முடிவெடுத்து கோவை பாலாஜிகிட்டயிருந்து பிரிஞ்சு வந்து தனியா இந்த தொழில பாக்க ஆரம்பிச்சேன்.

ஒரு சில காலேஜ் பொண்ணுகள யும், தொழிலில் இருக்கும் பெண் களை காலேஜ் பொண்ணுங்கள் னும் சொல்லி பிஸினஸ் பண்ண ஆரம்பிச்ச போது கல்லா கட்ட ஆரம்பிச்சுச்சு. அவுங்களுக்கு ஒரு நாளைக்கு 5000 ரூபாய் கொடுத்துருவேன்'' என்று சொல்ல அதிர்ந்து போன போலீஸிடம் விடாமல் தொடர்ந்தவன்...

""என் இலக்கு பணம்தான். பல பெரிய மனுஷங்களோட இலக்கு பெண்கள்தான். அதனால அதுதான் கிடைக்கும். இது தான் கிடைக்கும்ங்கறதெல்லாம் இந்த உலகத்துல கிடை யவே கிடையாது. நான் நினைச்சா யாரை வேணும்னாலும் சொடக்குப் போடுற நேரத்துல கூட்டிட்டு வந்துருவேன். ஆனா அதுக்கு தேவை பணம்தான்'' என்று தத்துவம் பேசிய சீனி... ""வெப் சைட்ல காலேஜ் பொண்ணுகளோட போட்டாவ போட்டபோது எல்லா பிஸினஸ்மேன்களும் என் காலடியில வந்து விழுந்தாங்க. விபச்சார தொழிலுக்கான என்னோட எல்லை களை விரிவாக்கம் செஞ்சபோது துணை நடிகைங்க என் தொழிலுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் என் பிஸினஸ் வளர்றதுக்கு ரொம்ப உதவி பண்ணது ஒரு முக்கிய நடிகைதான்.

அதுபோலவே நானும் அவுங் களுக்கு பண விஷயத்துல கரெக்டா இருப்பேன். சினிமால முக்கிய நடிகைங் கறதால அவுங்களுக்கு ரொம்பவே கிராக்கி. அவுங்க ரேட் எட்டு லட்சம். அவுங்கள புக் பண்ணணும்னா முதல்ல அவுங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர்ல 5 லட்சத்த போட்டுறணும். அதுக்குப் பிறகு ரெண்டு மாசங்கழிச்சு இந்தியாவ ஒட்டியிருக்கிற ஒரு தீவுக்கு டேட் குடுத்த நாள்ல அந்த நடிகை போயிருவாங்க. அதுக்கப்புறம் பணங்கொடுத்த கஸ்ட மர்களை அங்க கூட்டிட்டுப் போவேன். அவுங்களும் திருப்தியா இருந்துட்டு வருவாங்க.

அவுங்களும் அந்த நடிகையோட இருந்துட்டு மீதி 3 லட்சத்த குடுத்துட்டு போயிருவாங்க. இந்த தொழில்ல நேர்மைதான் சார் ரொம்ப முக்கியம். அதனால நடிகையும் சரி, நம்ம கஸ்டமர்களும் சரி, பண விஷயத்துல கரெக்டா இருப்பாங்க'' என்று அவன் அந்த பிரபல நடிகை பெயரை சொன்னவுடன் அதிர்ச்சி அளவு கடந்து போயிருக்கிறது விசாரித்த தனிப் படைக்கு.

தனிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாசலுவிடம் பேசினோம்.

""அந்த பிரபல நடிகை எவ்வளவு தூரம் இவனுடன் சம்பந்தப்பட்டிருக் கிறார் என்பது அடுத்த கட்ட விசா ரணையில்தான் தெரியவரும். அந்த நடிகையின் அக்கவுண்ட் நம்பரில் பணம் போட்டிருக்கிறேன் என்று சீனி சொல்லியிருப்பதால் அந்த அக்கவுண்ட் நம்பரை அவனிடமிருந்து கிடைத்தபின்பே அந்த நடிகை குறித்து சீனி சொல்லியிருக்கிற விஷயங்கள் உண்மையா என்பதை தெளிவு செய்ய முடியும்'' என்றார்.

No comments:

Post a Comment