Tuesday, August 24, 2010

சமுத்திரக்கனியின் போராளி


‘நாடோடிகள்’என்னும் வெற்றிப் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் “போராளி”. இதில் சகிக்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சசிக்குமார் இயக்கிய முதல் படமான சுப்ரமணியபுரத்தில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்திருப்பார். இதில் நாயகியின் சித்தப்பாவாக வந்து அமைதியான வில்லத்தனத்தை வெளிப்படுத்தினார் சமுதிரக்கனி.அதே மாதிரி இவர் இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிக்குமாரை நாயகனாக நடிக்கவைத்திருப்பார்.நாடோடிகள் படத்தை “சம்போ சிவசம்போ” என்றப் பேரில் தெலுங்கிலும் இயக்கினார் சமுத்திரக்கனி. இதில் சசிக்குமாரும், சமுத்திரக்கனியும் ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள்.

சுப்ரமணியபுரத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பை பார்த்து மலையாளத்தில் நடிக்க அவருக்கு அழைப்புவந்தது. தமிழிலும் வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அப்போது நாடோடிகள் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்ததால் அவற்றை எல்லாம் தவிர்த்து வந்தார்.

அவரின் நாடோடிகள் படம் மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. இதன் பிறகும் அவருக்கு தொடர்ந்து வந்த மலையாளப்பட அழைப்பை ஏற்று மலையாளத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமுத்திரக்கனி போராளி எனும் படத்தை இயக்கவுள்ளார். இதில் அல்லரி நரேஷ் (தெலுங்கு கதாநாயகன்), அஞ்சலி, சுப்பிரமணியபுரம் சுவாதி நடிக்கிறார்கள். சசிக்குமாரும் முக்கியமான கதாப்பாத்திரத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பும் இவரே.

சமுத்திரக்கனி, சசிக்குமாரின் சென்டிமெண்டான கூட்டணியில் இந்தப் படமும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது.

தற்போது சசிக்குமார் முழுக்க முழுக்க நகரத்து வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துவரும் படத்திற்கு “நகரம்” என்றே தலைப்பும் வைத்துள்ளார். (கிராமத்து ட்ரெண்ட் இப்போ நகரத்துக்கு மாறுதோ...) இந்தப் படத்தை நடிகர் விக்ரம் தயாரிக்கிறார்.

No comments:

Post a Comment