Monday, August 16, 2010

இளங்கோவனின் தடாலடிக்கு காங்கிரஸ் பதிலடி!


தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் அதிரடிப் பேச்சுக்களால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில், "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு எப்படி இருக்கிறது?' என்று காங்கிரஸுக் குள் ஒரு ரவுண்ட் வந்தோம்.

மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவுமான பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ.விடம் பேசியபோது, ""2004 பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க.-காங்கிரஸ் உறவு ஆத்மார்த்தமாக உருவானது. அந்த உறவின் பிணைப்புகள் தளர்ந்து போவதற்கோ, அந்த கூட்டணி உறவு ஏற்பட்ட அன்றிருந்த அரசியல் அவசியங்கள் இன்று நீர்த்து போவதற்கோ எவ்வித காரணமும் இல்லாத சூழலில், இந்த கூட்டணி பலவீன மடையும் என்று எதிர்பார்ப்பது அறிவின்மை.

அரசியல் தோழமை என்பதும் தேர்தல் கூட்டணி என்பதும் அதிகாரத்தையும் ஆட்சியையும் பங்கு வைத்துக் கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல. மேலும் சில தனிநபர்களை அமைச்சராக்கப்படுவ தற்காகவும் இந்த கூட்டணி உரு வாக்கப்படவில்லை. மதசார்பற்ற அரசியல் சக்திகளை தேசம் முழுவதும் ஒருங்கிணைப் பதற்கும் ஜன நாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களை நாடு முழுவதும் இணைப்பதற்கும் இந்தியாவையும் பல மாநிலங்களை யும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய அரசியல் சவால்களை முறியடித்து வெற்றி பெறுவதற்கும்தான் இந்த கூட்டணி உருவானது.

இந்த கூட்டணியின் அடித் தளத்தை பற்றி எடுக்கப்படும் சந்தேகங்கள்... இந்த கூட்டணியின் அரசியல் விரோதிகளால் கிளப்பி விடப்படுகிற வதந்திகளைத் தவிர வேறில்லை!'' என்கிறார் ஆணித்தரமாக.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்க பாலு, ""ஆட்சி வழியிலும் கூட்டணி ரீதியாகவும் ஒற்றுமையாக இருப்பதுதான் இந்த கூட்டணி. பரஸ்பர நல்லுறவுகளுடன் அன்னை சோனியா காந்திக்கும் கலைஞருக்கும் இருக்கும் அன்பின் வெளிப்பாடு கூட்டணியை வலிமைப்படுத்திக் கொண்டுதானிருக்கிறது. கூட்டணிக்குள் சிக்கல் என்கிற மாதிரியான எதுவும் டெல்லியில் எதிரொலிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முக்கிய பிரச்சினைகள் எழும்போதெல்லாம்... முதல் ஃபோன் செய்து விவாதிப்பது கலைஞரிடம்தான் என்று வெளிப்படையாக தெரிவித்தவர் அன்னை சோனியாகாந்தி. அந்த செயல்களில் தற்போது வரை எவ்வித மாற்றமும் இல்லாதபோது... கூட்டணிக்குள் விரி சலா? என்கிற கேள்வியே அர்த்த மற்றது!'' என் கிறார் அழுத்த மாக.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப் பினரான கார்த்தி சிதம்பரம், ""தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. இந்த கூட்டணி உறவு எதிர்காலத்தில் இன்னும் வலிமையாகவும் சமமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!'' என்கின்றார்.

அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொதுச் செய லாளர்களில் ஒருவரும் எம்.எல். ஏ.வுமான டாக்டர் காயத்ரி தேவி, ""2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானபோது, யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்தது. சோனியாதான் பிரதமர் என்று இந்திய அளவில் முதலில் குரல் கொடுத்தவர் கலைஞர். இதனை அன்னை சோனியாகாந்தி மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. நான் டெல்லி செல் கிறபோது கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், குலாம் நபி ஆசாத், வயலார் ரவி ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். அப்போது அவர்கள் கலைஞரின் அரசியல் ஆளுமையையும் மத்திய அரசுக்கு அவர் கொடுத்து வரும் ஒத்துழைப்பையும் விவரிப் பார்கள். தி.மு.க.-காங்கிரஸ் உறவு வலிமையாக இருப்பதை அப்போது உணர முடியும். அதேபோல, ராகுல்காந்தியை நான் சந்தித்தபோது கூட மகிளா காங்கிரஸின் நிலை குறித்து நிறைய விவாதித்தாரே தவிர... கூட்டணி உறவு மாறும்ங்கிற மாதிரியான எந்த சமிக்ஞையும் அவரிடமிருந்து வெளிப்படவே இல்லை. ஜெய லலிதாவின் ஆசையை நிறை வேற்ற ஓரிருவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர... கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை என்பதே இங்கும் டெல்லியிலும் எதிரொலிக்கும் நிதர்சனம்'' என்கிறார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் நம்பிக்கைக்குரியவரும் பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ.வுமான இ.எஸ்.ராமன், ""மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி... உறவு முறிவுக்கான சம்பவங்களும் காரணங்களும் இல்லாதபோது... இப்படிப்பட்ட பேச்சுக்களே ஒரு ஹம்பக்தான். சோனியாகாந்தி-கலைஞர் நட்பில் எவ்வித விரிசலும் எப்படி இல்லையோ அதேபோலத்தான் கூட்டணியிலும். மக்கள் பிரச்சினைக் காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைக்கிற கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார் கலைஞர். உதாரணமாக, கைத்தறி நெச வாளர்களுக்காக சிட்டா நூலின் விற்பனை வரி 2 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டுமென்றேன். அதனை ஏற்று ரத்து செய்தார் கலைஞர். இப்படி நிறைய விஷயங்களை விவரிக்க முடியும். ஆக, ஆட்சி ரீதியாகவும் இப்படி உறவு கள் சுமுகமாக இருக்கும்போது... கூட்டணி உறவில் எங்கிருந்து சிக்கல் எழும்? அதனால், சோனியா உருவாக்கிய கூட்டணி உறுதியாகவே இருக்கிறது'' என்கின்றார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் கோபண்ணா, ""மத்திய அரசின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், உறுதுணையாகவும் இருப்பவர் கலைஞர். அதனால்தான் "ஐ.மு.கூட்டணியின் சிற்பி' என கலைஞரை புகழ்ந்துரைத்தார் சோனியா. அந்த நிலை இன்றளவும் நீடிக்கிறது. அதனால் கூட்டணியில் சிக்கல் என்பதெல்லாம் அபத்தம். தனி நபர் ஒருவரின் சுயநலன்களுக்காக பேசப்படுகிற பேச்சுக்களை வைத்தெல்லாம் கூட்டணி முறியும் என்கிற அளவுக்கு தி.மு.க.-காங்கிரஸ் உறவு பலகீனமானதல்ல. "தமக்கு முக்கியத்துவம் இல்லாத கூட்டணியை உடைத்துவிட வேண்டும்' என்று பகல் கனவு காண்பவர்களின் எண்ணம் நிறைவேறாது!'' என்கிறார் சூடாக.

No comments:

Post a Comment