Thursday, August 26, 2010

""இனிமேல் டியூட்டி டயத்தில் சுடிதார் போடாதே... சேலைதான் கட்டவேண்டும்...


""பெண் டாக்டர்கள் என்றால் -அதுவும் கொஞ்ச வயது பெண் டாக்டர்கள், பெண் உதவி மருத்துவர்கள் என்றால் எங்கள் இணை இயக்குநரின் செக்ஸ் டார்ச் சரும், இரட்டை அர்த்த வசனங் களும் எல்லை மீறிப் போய் விடுகிறது...''

""இனிமேல் டியூட்டி டயத்தில் சுடிதார் போடாதே... சேலைதான் கட்டவேண்டும்... ம்... எதுக்காக என்னைப் பார்க்கிறாய்! பசு மாட் டைப் பார்! சினை ஊசி போடப் பட்டிருக்கிறதா பார்! தடுப் பூசி போடப்பட்டிருக்கிறதா பார்! உட்காராமல் நல்லா குனிஞ்சு பசுவின் மடியைப் பார்... பார்த்தால் போதுமா? மடிமார்புக் காம்புகளை இழுத்து, பால் சுரக்கிறதா என்று பார்னு ரெட்டை அர்த்தமாகத்தான் பேசுவார்!''.

""இதையெல்லாம் கூட சகித்துக் கொண்டுவிடலாம்... நாங்கள் குனியும்போது, பக்க வாட்டில் நின்று, தன்னோட பேனா கேமராவால் பட மெடுத்து, அதை அலுவலக கம்ப்யூட்டரில் போட்டு பார்த்து ரசித்து கமெண்ட் அடிக்கிறாராம்... கேட்கும் போதே எங்க உடம்பெல் லாம் கூசுது சார்...!''

திண்டுக்கல் மாவட்ட கால்நடை மருத்துவ இணை இயக்குநர் அறிவழகன் மீது, கால்நடை பெண் மருத்துவர் களும் உதவி பெண் மருத்து வர்களும் மனம் நொந்து கூறும் புகார்களில் சிலவற்றைத்தான் மேலே படித்தீர்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கால்நடை மருத்துவமனைகளும், 118 கால்நடை உதவி மருத்துவ மையங் களும் உள்ளன. இவற்றில் பணியாற் றும் டாக்டர்கள் சரியாக வேலை செய்கிறார்களா? மருத்துவமனை வேலை முடித்து, கிராமங்களுக்குச் சென்று களப்பணி செய்கிறார்களா என்பதை கவனிப்பதே, மாவட்ட கால்நடை இணை இயக்குநரான அறிவழகனின் வேலை.

""செக்ஸ் டார்ச்ச ரோட நிற்பதில்லை. கிராமங்களில் எல்.ஐ.சி. பாலிசி பிடித்துக் கொடுக் கச் சொல்லி கட்டாயப்படுத்துறார். 6 மாதமா எந்த டாக்டருக்கும் லீவு தர மறுக்கிறார். டாக்டர்களுக்குக் கொடுக்கச் சொல்லி வந்த அலவன்ஸ் 2 லட்ச ரூபா யைக் கூட இன்னும் பிரித்துக் கொடுக் கலை. ஆபாசப் படமெடுத்து ரசிக்கிற அசிங்கம்தான் ரொம்ப கேவலமா இருக்கு. வேலூர்ல வேலை செய்யும் போது ஒரு லேடி டாக்டரை பட மெடுத்து, அதுக்காக பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கினவர்தான் இந்த அறிவழகன்... திருந்த மாட்டேன்றார்...!'' என்கிறார்கள் கால்நடை மருத்துவ ஆண் டாக்டர்கள்.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி யிருக்கும் இணை இயக்குநர் அறிவழ கனைச் சந்திப்பதற்காக அவரது அலு வலகம் சென்றோம். நம்மை அறிமுகப் படுத்திக் கொண்டதும், அவர் செய்த முதல் வேலை... தனது கேமரா பேனாவை "ஆன்' செய்து பாக்கெட்டில் மாட்டிக் கொண்டு நம்மை படம் பிடிக்கத் தொடங்கியதுதான்...

""ஏங்க... உங்களுக்கெல்லாம் பேட்டி தரமுடியாது. நான் நேர்மை யானவன் கிளம்புங்க!'' என்றார் இணை இயக்குநர்.

அறிவழகன் மீதான புகார்களை கலெக்டர் வள்ளலாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

""விளக்கம் கேட்டு, இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்... பதில் வரட்டும்...!'' என்றார் கலெக்டர்.

துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் கூறினோம். ""பேனாவில் கேமராவா, புலனாய்வு பத்திரிகையாளர்கள் பயன்படுத்த வேண்டியதை இவர் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறார்? விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன்!'' என்றார் அமைச்சர்.

No comments:

Post a Comment