Friday, August 27, 2010

கல்லூரி கலைவிழா! ஏமாற்றப்பட்ட மாணவர்கள்!


""ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. உன் லவ் லெட் டர் கிடைச்சுதுடா.. ஐ டூ லவ் யூ''

-பின்பக்கத்திலிருந்து ஒலித்த பெண் குரலைக் கேட்டதும், அன்டார் டிகா பனியில் மூழ்கி எழுந்ததுபோல ஜில்லெனத் திரும்புகிறான் கல்லூரி மாண வன். அப்படியே ஃப்யூஜியமா எரிமலை யாகிவிடுகிறான். காரணம், ஒலித்தது பெண் குரல் அல்ல. சக மாணவர்களின் மிமிக்ரி இம்சை. ரவுசுதான் என்றாலும் இளவட்டங் களுக்குள் புதைந்திருக்கும் மிமிக்ரி, ஆக்டிங், டான்ஸ், மியூசிக் போன்ற தனித்தன்மைகளை ஒழுங்குபடுத்தி அதை ஒரு கலையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கல்லூரி களில் கலைவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த நோக்கத்தையே சிதைப்பதாக இருக்கிறது திருச்சி பாரதிதாசன் கல்லூரியின் கலைவிழா என்கிறார்கள் மாணவர்களும் கல்லூரி நிர்வாகிகளும்.

கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப் பட்டினம் இத்தனை மாவட்டங்களில் உள்ள கலைக் கல்லூரிகளும் பாரதிதாசன் பல் கலைக்கழகத்தின்கீழ் வருகின்றன. மொத்தம் 103 கல்லூரிகள். இந்தக் கல்லூரிகளுக் கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் மிகப் பெரிய கலைக்கொண்டாட்டத்திற்கு இஆதஉ இஊநப என்று பெயர்.

ஒருங்கிணைப்பாளர் கனகசபையின் ஒருதலைபட்சமான போக்குகளால் கடந்த பல ஆண்டுகளாகவே பல கல்லூரிகள், பாரதிதாசன் பல்கலைக்கழக கலைக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்து வந்தன. இந்த முறை நடந் தது 25ஆம் ஆண்டு கலைவிழா என்பதால் பல கல்லூரிகள் ஆர்வம் காட்டின. எனினும், கனக சபையின் கெடுபிடியால் 35 கல்லூரிகள் மட்டுமே கலந்துகொண்டன. அக்டோபரில் நடத்த வேண்டிய போட்டிகளை ஆகஸ்ட்டிலேயே திடுதிப்பென அறிவித்த பல்கலைக்கழக நிர்வாகம், திருச்சியின் மையப்பகுதியில் உள்ள கல்லூரியில் விழாவை நடத்தாமல் எல்லையில் உள்ள மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை கல்லூரியில் விழா என்றதுமே பல கல்லூரிகள் அப்செட்.

கலைவிழாவில், நாடகம், மௌன நாடகம், நாட்டுப்புறநடனம் ஆகியவை இடம்பெறுவதால் ஒவ்வொரு கல்லூரியும் கிட்டதட்ட 1 லட்ச ரூபாய் செலவு செய்து தங்கள் மாணவர்களை ரெடி பண்ணியது. பல கல்லூரிகள் கலந்துகொள்ளும் கலைக்கொண்டாட்டத்தில் ஜெயித்தது யார் என்பதை முடிவு செய்ய, நடுவர்கள் எழுதிய தீர்ப்புகளை ஒரு பெட்டியில் போட்டு சீல் வைத்து, அதை போட்டியில் கலந்துகொண்ட கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் கள் முன்னிலையில் திறந்து, முடிவுகளை அறி விப்பதுதான் வழக்கம். ஆனால், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் கனகசபையின் நடவடிக்கை களால், நடுவர்கள் என்ன தீர்ப்பு எழுதினாலும், அந்த பேப்பரில் தங்களுக்கு வேண்டிய கல்லூரியின் பெயரை பென்சிலால் எழுதி அதையே அறிவிப்பது வழக்க மாகிவிட்டது. அத்துடன், இந்த முறை இந்தக் கல்லூரிக்கு விட்டுக்கொடுங்கள். அடுத்த முறை உங்களுக்குத் தருகிறோம் என்று ஒருங்கிணைப்பாளர் கெஞ்சுவதும் நடக்கிறது. அப்படியென்றால் இதற்கு உள் அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள் என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு பேராசிரியர் ஒருவர்.

நாடகம்-மவுன நாடகம் இவற்றில் பெரம்பலூர் ரோவர் கல்லூரி மாணவர்களின் தனித்திறமை மற்ற கல்லூரி மாணவர்களாலேயே பாராட்டப்படும். பல முறை விருது பெற்றவர்கள். அந்தக் கல்லூரியை இந்த முறை திட்டமிட்டு ஒதுக்கிவிட்டார்கள். மிமிக்ரி, வாய்ப்பாட்டு போன்றவை நடந்தபோது அவற்றிற்கு மார்க் போட நடுவர்களே இல்லை. திடீரென, அங்கு வந்த ஒரு தமிழாசிரியரைக் கூப்பிட்டு நீங்கள்தான் நடுவர் என்று மிமிக்ரி போட்டிக்கு உட்கார வைத்துவிட்டார்கள். இத்துறைக்கென் றே வல்லுநர்கள் இருக்கும்போது திடீர் நடுவ ரால் மாணவர்கள் மிரண்டுபோய்விட்டார்கள். எஃப்.எம். வானொலிகளில் பேசி அசத்திய மாணவர்கள் பலர் பரிசு எதுவும் பெறமுடி யாமல் வெறுங்கையுடன் திரும்பினர்.

மிமிக்ரி போட்டியில் கலந்துக்கிட்ட 25 பேரையும் வீடியோ எடுத்திருக்கோம் சார். நல்ல நடுவர்கிட்டே போட்டு பார்த்து செலக்ட் பண்ணச் சொல்லுங்க என்கிறார்கள் மாணவர் கள். "போஸ்ட்டர் மேக்கிங், ரங்கோலி, கார்ட் டூன்ஸ், கிளேமாடல் ஆகியவற்றில் திறமை காட்டிய சில மாணவர்களின் ஆற்றலைப் பார்த்துவிட்டு, "எனக்கே இது ரொம்ப புது மையா இருக்கு' என்று பாராட்டியிருக்கிறார் பிரபல ஓவியர் மருது. ஆனால், அந்த மாண வர்களுக்கு பரிசு எதுவும் கிடைக்கவில்லை.

கலைவிழா பேரணி மதியம் 2 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதால் மொட்டை வெயிலில் மாணவ-மாணவியரை நிற்க வைத்துவிட்டனர். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் மீனா 5 மணிக்குத்தான் வந்தார். மயங்கி விழுந்த மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சைகூட கிடைக்கவில்லை. கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்யப்படவில்லை. பேரணி கலைநிகழ்ச்சிகளுக்காக வழங்கப்பட்ட பரிசுகளிலும் சர்ச்சைக்கு பஞ்சமில்லை. சிதம்பரம்பிள்ளை கல்லூரியில் மாணவர்களைச் சேர்ப்ப தற்கு விளம்பரம் செய்யும்வகையில் இந்த கலை விழாவை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு துணைவேந்தரும் ஒத்துழைப்பு என குற்றம் சாட்டுகிறார்கள் மற்ற கல்லூரி நிர்வாகத்தினர்.

தவறான முடிவுகளால், தகுதி வாய்ந்த பரிசு களைப் பெறமுடியாமல் பெயருக்கு சில பரிசுகளை மட்டுமே பெற்ற புனித சிலுவை கல்லூரி மாணவர் களும் ஜோசப் கல்லூரி மாணவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஷீல்டுகளை பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கனகசபை முன்னாலேயே போட்டுஉடைத்தும், சான்றிதழ்களைக் கிழித்தெறிந் தும் அந்த இடத்திலேயே எதிர்ப்பைத் தெரிவிக்க, அதற்கு மற்ற கல்லூரி மாணவர்களிடமிருந்து பலத்த கைதட்டல் வரவேற்பு கிடைத்துள்ளது.

அலங்கோலமான கலை நிகழ்ச்சி குறித்து ஒருங் கிணைப்பாளர் கனகசபையிடம் கேட்டபோது, ""அடிப்படைவசதி களையெல்லாம் செய்திருந்தோம். "துணைவேந்தர் ஒப்புதலோடு நடு வர்களை நிய மித்துதான் முடிவு களை வெளியிட் டோம். ஒரு கல் லூரியின் வெற்றி யை இன்னொரு கல்லூரியின் மாணவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை'' என்றார் வெகு சாதாரணமாக.

இளமைத் திருவிழாவாக நடந்திருக்கவேண்டிய பாரதிதாசன் பல்கலைக்கழக கலைக் கொண்டாட்டம் ரணகளமாகி முடிந்திருக்கிறது.

No comments:

Post a Comment