Sunday, August 8, 2010

ராகுல் வியூகம்! தமிழக காங்கிரசை கரையேற்றுமா?



காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரசை சொந்தக்காலில் நிற்கவைக்கும் ஆற்றல் மிக்க தலைவர் யாரு மில்லை என்பதை அரசியல் பார்வையாளர்கள் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். காங் கிரசுக்கான பாரம்பரிய செல் வாக்கைக் காப்பாற்றும் விதத்தில் செயல்பட்ட தலைவர் ஜி.கே. மூப்பனார். அவரைப்போலவே வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இதில் பங்கு உண்டு. தமிழக காங்கிரஸ் தலைவர்களாக மேலிடத்தால் நியமிக்கப்பட்ட மற்ற அனைவருமே தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காகப் போராடவேண்டியிருந்ததால் காங்கிரசின் செல்வாக்கை வளர்க்க முடியவில்லை.


இந்திய அளவில் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரம்புவதற்கு சில ஆண்டுகள் ஆனது. சோனியாவின் அரசியல் வருகைக்குப்பிறகே காங்கிரசுக்கு புத்துயிர் கிடைத்தது. தற்போது , ராகுல் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களும் புதிய வியூகங்களும் காங்கிரசை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் மீது அவர் செலுத்தும் கவனமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது



காமராஜர் காலத்திலிருந்து ராகுல்காந்தி காலம்வரை தமிழகத் தில் காங்கிரசின் செல்வாக்கு என்ன என்பதை வரைபடம் காட்டுகிறது.

காமராஜர் ஆட்சிக்காலத் திற்குப்பிறகு காங்கிரசின் செல்வாக்கு மெல்ல மெல்லத் தேய்ந்து வந்திருப்பதையே வரைபடம் சுட்டிக்காட்டுகிறது. திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி இதற்கொரு முக்கிய காரணம் என்றாலும், காங்கிரசில் ஆளுமைமிக்க தலை வர்கள் இல்லாமையும் அதற் கான அடிப்படைக் கார ணங்களில் ஒன்றாகும். மேலிடத்தால் நியமிக்கப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் குறித்த அச்சமும், கட்சிக்குள் தலைமை அங்கீகரிக்காத தலைவர்கள் பலர் உருவாகி கோஷ்டிகளை உருவாக்கியதும் காங்கிரஸை தொடர்ந்து பலவீனப்படுத்தி வந்திருக்கிறது.



இரு கழகங்களை காங் கிரஸ் நம்புவதும், காங்கிரஸை இரு கழகங்களும் நம்புவதும் இன்றளவில் தமிழகத்தின் தேர்தல் சூத்திரமாக இருக் கிறது. எனினும், காங்கிரசால் தனித்து நிற்கமுடியாமல் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டே செயல்படவேண்டியுள்ளது. 1996 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மேலிடத்தின் கூட்டணி முடிவுக்கு எதிராக வெளிப்பட்ட உணர்வே மூப்பனார் தலைமையிலான த.மா.காவை உருவாக்கியது. காங்கிரசின் பெரும்பாலான தொண்டர்கள் மூப்பனார் பக்கம் நின்றனர். காங்கிரஸ் வாக்குவங்கியும் அவர் பக்கம் இருந்தது. எனினும், அவராலும் அத்தேர்தலில் தனித்து நிற்க முடியவில்லை. தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தார். 1999 எம்.பி. தேர்தலில் தனித்து நின்று வெற்றிபெற முடியாததால், 2001-ல் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. மூப்பனார்-வாழப்பாடி ஆகியோரின் மறைவுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி என்ற கடைசி நம்பிக்கையும் பொய்த்துவிட்டதாலும், புதிய கட்சிகளின் வளர்ச்சியாலும் காங்கிரசின் பாரம்பரிய வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டு தற்போது 12% என்ற அளவில் உள்ளது.


இந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரசின் செல்வாக்கை வளர்த்து, அதன் தலைமையிலான அணி மூலம் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்கிற நீண்டநாள் கனவை ராகுலின் வியூகங் கள் செயல்படுத்தும் என காங்கிரசின் புதிய தலைமுறை எதிர்பார்க்கிறது. 2009 நாடாளுமன்றத் தேர்தல் வெற் றிக்குப்பிறகு, காங்கிரஸ் கட்சி யை முழுமையாக தன் கையில் எடுத்துக் கொண்ட ராகுல், கட்சியை கீழ்மட் டத்திலிருந்து வளர்க்கும் பொறுப் பை மேற்கொண்டி ருக்கிறார். கட்சியின் நிலவரத்தை தொ டர்ந்து கண்காணித் தும் வருகிறார். அதன் அதிர்வுகள் தமிழகத் திலும் தென்பட ஆரம்பித்துள்ளது.



இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக உறுப் பினர்களைச் சேர்த்து, அதன் நிர்வாகிகளுக்கான தேர்தலையும் நடத்தி முடித்திருப்பது ராகுலின் ஆளுமையை வெளிப்படுத்து கிறது.


அவர்களுக்கான பயிற்சி முகாம்களை தொ டர்ந்து நடத்திவருவதும் புதிய அணுகுமுறையாக இருக்கிறது. அதே நேரத்தில், காங்கிரசின் மாநில-மாவட்ட நிர்வாகிகளுக்கானத் தேர்தலை நடத்த முடியாமல் திணறுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தாகும்.


கட்சியின் மாநிலத் தலைவ ராக தங்கபாலு இருந்தாலும் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் என பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கி றார்கள். இந்தக் கோஷ்டிகளை ஒருங்கிணைத்து, காங்கிரஸ் தலைமையில் புதிய அணியை உருவாக்கி, மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது என்ற கனவை நிறைவேற்றுவது அத்தனை எளிதல்ல என்கிறார்கள் அரசியல் ஆய் வாளர்கள். நமது கள ஆய்விலும் அதனை அறிய முடிந்தது.


தமிழக காங்கிரசில் தொண் டர்களின் செல்வாக்கைப் பெற்றவராக ஜி.கே.வாசனும் மதிப்பிற்குரியவ ராக ப.சிதம்பரமும் இருக்கின்றனர். மற்ற கோஷ்டிகளின் தலைவர் களுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு ஏதுமில்லை. வாசன் இளையவர் என்பதாலும் கட்சித் தொண்டர் களைக் கடந்து அவர் பொது மக்களை ஈர்க்கவில்லை என்ப தாலும் காங்கிரஸ் மேலிடம் அத்தனை சுலபமாக அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடாது.


அனுபவமிக்கவரான ப.சி.யோ இந்தியாவின் நிதி யமைச்சர், உள்துறைஅமைச்சர் என முக்கிய பொறுப்புகளை வகித்து சிறந்த நிர்வாகி எனப் பெயர் எடுத்திருக்கிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அரசியல்-பொருளாதாரம் பற் றித் தெளிவாகப் பேசி எக்கட்சியையும் சாராத படித்த- நடுத்தர இளைஞர்களை கவர்ந்துள்ளார். ஆனால், மக்களிடமும் கட்சித் தொண் டர்களிடமும் அவரால் தலைவர் என்ற பெயரை எடுக்கமுடிய வில்லை. கடந்த எம்.பி. தேர்தலில் 2000 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று கடைசி ரவுண்டில் கரை யேறினார் ப.சிதம்பரம். எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்ட மன்றத் தொகுதிகளில் நான்கில் அவருக்குப் பின்னடைவே ஏற்பட்டது.



மூப்பனாரை முன்னி றுத்தி தமிழகத்தில் காங் கிரஸ் ஆட்சி என 1989-ல் ராஜீவ்காந்தி மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. தற்போது, காங்கிரசில் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சி என்ற ராகுலின் திட்டம் நிறை வேறுவது கடினமானது. இரண்டு திராவிட கட்சி களைத் தாண்டி வேறெதை யும் ஆட்சியில் அமர்த்தும் மனநிலை தமிழக வாக் காளர்களிடம் இன்னும் வளரவில்லை. மூன்றாவது கட்சியைத் தேடும் மனநிலையில் உள்ளவர்களிடம் தே.மு.தி.க.வுக்கு உள்ள செல்வாக்குகூட காங்கிரசுக்கு இல்லை. இந்தநிலையில், காங்கிரசின் பாரம்பரிய வாக்குகளைக் காப்பாற்றி, புதிய வாக்காளர்களைக் கவர்ந்து, கீழ்மட்டத்திலிருந்து கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் ராகுல் ஃபார்முலா முழுமையாக வெற்றிபெற்று, கட்சி பலமடைந்து ஆட்சியைப் பிடிப்பதென்பது பகீரத முயற்சியாகும். திராவிட கட்சிகளைக் கடந்து காங்கிரசை வளர்த்து, ஆட்சியில் அமர்த்துவதென்பது அடுத்த 5 ஆண்டுகளில் நடைபெறுவதற் கான நடைமுறை சாத்தியம் இல்லை. அதன் பிறகு, தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தும், அவற்றை காங்கிரஸ் எப்படி கையாளப் போ கிறது என்பதைப் பொறுத்துமே சாத்திய மாகும்

No comments:

Post a Comment