Thursday, August 5, 2010

வெளிவராத எந்திரன் படக்கதை!


ரஜினிகாந்த், ஷங்கர், கலாநிதிமாறன், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, வைரமுத்து என வியத்தகு வித்தகர்கள் ஒண்ணுகூடி உருவாக்கி வரும் ‘"எந்திரன்'’படத்திற்கு ஏற்கனவே உள்நாடு, வெளிநாடு என ஏகப்பட்ட இண்டர்நேஷனல் எதிர்பார்ப்பு. இந்நிலையில் கடந்த 31ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புத்ர ஜெயா நகரின் மாநாட்டு மண்டபத்தில் ‘"எந்திரன்'’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாய் நடந்தது. இதனால் உலக சினிமா மார்க்கெட்டில் ‘"எந்திரன்' ஃபீவர்’ ஏகத்துக்கும் ஏறிப்போயிருக்கிறது.

ஐங்கரன் நிறுவன தயாரிப்பில் தொடங்கப் பட்ட "எந்திரன்'’ பொருளாதார பிரச்சினையால் நின்று போக... 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப்படத்தை சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறனால் மட்டுமே தயாரிக்க முடியும் என முடிவு செய்த ரஜினி, கலாநிதிமாறனிடம் பேசினார். சன் குழுமத்தின் நேரடி முதல் தயாரிப்பாக ‘"எந்திரன்'’ உருவாகிவிட்டான்.

தமிழில் உருவாகி வரும் இந்த மெகா படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியாக விருக்கிறது. ‘சினிமாவின் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படம் ‘என எந்திரனின் நாயகி ஐஸ் அளித்து வரும் பேட்டி களால் வடக்கிலும் இந்தப்படத்திற்கான மவுசு கூடிக்கொண்டே இருக்கிறது.

அப்படி என்ன கதை எந்திரனின் கதை?

ஆபத்தான விஷயங்களில் இருந்து மக்களை மீட்பது உள்ளிட்ட நல்லகாரியங்களுக்காக தனது தோற்றத்தை பிரதிஎடுத்து இயந்திர மனிதனை உருவாக்குகிறார் விஞ்ஞானி ரஜினி. ஆனால் எதிர்பார்ப்பை மீறி மனிதனுக்கு உரிய காத லுணர்ச்சி, பகையுணர்ச்சியெல்லாம் எந்திரனுக்கும் வந்துவிடுகிறது. விஞ்ஞானியின் காதலியான ஐஸ்வர்யா பச்சனை எந்திர ரஜினி காதலிக்க... இதனால் பல குழப்பங்கள். இந்த காதல் கிறுக்கால் உள்ளே இருக்கும் சர்க்யூட்டில் கோளாறு ஏற்பட்டு வில்லனாக மாறு கிறான் எந்திரன். ஒரு பெரிய கப்பல் முழுக்க அதி பயங்கர நவீன ஆயுதங்களோடு சென்னையை அழிக்க வருகிறது எந்திரன். அந்தக் கப்பலை நடுவழியில் மறித்து பெரும் போராட்டம் நடத்தி கப்பலை மூழ் கடிக்கிறார் விஞ்ஞானி. சென்னைக்கு வந்த ஆபத்து நீங்குகிறது. இதுதான் எந்திரன் கதை.

ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ்தான் விவாதமாகியதாம். எந்திரன் ரஜினி வில்லனாக இருந்தாலும் அந்த ரஜினியை அழிப்பதை ரசிகர் கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்கிற தயக்கம் எந்திரன் யூனிட்டுக்கு. இதனால் இரண்டு க்ளைமாக்ஸ் ரெடி. ஒன்று எந்திரனை விஞ்ஞானி அழிப்பது. இன்னொன்று... சர்க்யூட்டில் கோளாறு ஏற்பட்டதால் தாறுமாறாக செயல்படும் எந்தி ரனை தந்திரமாக கட்டுக்குள் கொண்டுவரும் விஞ் ஞானி அந்த சர்க்யூட்டை சரி செய்து, எந்திரனை நல்லவனாக்கி நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த அனுப்பி வைப்பது. இப்படி இரண்டுமுடிவில் எதை படத்தில் சேர்ப்பது என்பதை படம் வெளியாகும் நேரத்தில் முடிவு செய்துகொள்ள தீர்மானித்திருக்கிறார்கள்.

எந்திரனுக்காக விதவிதமான தோற்றம் கொண்ட பல வாகனங்கள் உருவாக்கி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதில் ரொம்பவும் விசேஷமானது முன்பக்கமும், பின்பக்கமும் ஓட்டக்கூடிய பைக்.

படத்தில் எந்திரனின் தோற்றம் இரும்பு மனிதனாக இருக்கும். அது நடந்தால் என்ன மாதிரியான சத்தம் வரும்? இரும்பு மனிதனின் குரல் எப்படி இருக்கும்? அதை எந்த மாதிரி உருவாக்குவது... என்கிற யோசனைக்கு அதிரடி தீர்வு கண்டவர் ரசூல் பூக்குட்டி. "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக ஸ்பெஷல் சவுண்ட் மிக்ஸிங்கிற்காக ஆஸ்கர் விருது வென்ற பூக்குட்டி பெரிய ஆராய்ச்சிக்குப் பின் ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கி எந்திரனின் குரலுக்கும், நடைக்குமான ஒலியை உருவாக்கினாராம். ஹாலிவுட் தொழில்நுட்பத்திற்கு இணையான படைப்பாக ‘"எந்திரன்'’ வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறது ஷங்கரின் யூனிட்.

இனி... எந்திரவிழா சங்கதிகள்....

ஷங்கர் தயாரித்த ‘"ரெட்டைச்சுழி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த ஐஸ்ஸை சரிவர ரிஸீவ் பண்ணவில்லை. மேடைக்கு அழைப்பதற்கு முன்... கீழே ஐஸ் அமருவதற்கு ஒருத்தர் கூட எழுந்து இடம் தரவில்லை. அதனால் ‘எந்திரன்’ விழாவில் மேடைக்கு பின் வழியாக மேடைக்கு வர ஏற்பாடு செய்யும்படி ஐஸ் தரப்பில் கேட்டார்களாம். ஆனால் அந்த வசதி செய்து தரப்படவில்லை. ஐஸின் மேக்-அப் கிட் பாக்ஸையும் யாரோ கூட்டத்தில் ஆட்டயப் போட்டுட்டாங்களாம். ரகஸியாவும், மேக்னா நாயுடுவும் கலக்கலாக குத்தாட்டம் போட்டு குஷிப்படுத்தினார்களாம். வெள்ளிப்பனித் தலையர் போல விழாக்களுக்கு மேக்-அப் இல்லாமல் வரும் ரஜினி டை அடித்து செம ஸ்மார்ட்டாக வந்தார்.

வடிவேலு ‘அவிய்ங்க இவிய்ங்க’ பாணியில் ரஜினியின் மாஸ் குறித்து ஒரு குட்டிக் கதை சொல்லி கைதட்டல் வாங்கினார். ரஜினியின் பாடல்களுக்கு சிம்பு ஆட்டம் போட்டார். "படையப்பா' வசனத்தை மேடையில் பேசினார் ரம்யாகிருஷ்ணன். சீன கலைஞர்கள் நடத்திய நிகழ்ச்சியை ரசித்து கைதட்டி பாராட்டினார் ரஜினி. விழாவில் மலேசிய தமிழ் அமைச்சர்களும், கட்சித்தலைவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆனால் அவர்கள் யாரையும் மேடைக்கு அழைக்கவில்லை. தொகுத்து வழங்கிய விவேக்கும், மலேசியாவைச் சேர்ந்த புன்னகைப்பூ கீதாவும் கூட விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்களின் பெயரையோ, விழாவை ஏற்பாடு செய்து நடத்திய ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரையோ சொல்லவில்லை. இதனால் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் டத்தோ.எம்.சரவணன் "இங்குள்ள இந்திய தலைவர்களுக்கு உரிய மரியாதை தராதது கண்டனத்திற்குரியது' எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் விழாவை நடத்திய ஆஸ்ட்ரோ நிறுவனமோ ‘ரஜினி, ரஹ்மான், ஐஸ்வர்யா என முக்கிய பிரமுகர்கள் வந்ததால் ஒரு பரபரப்பும், பதட்டமும் இருந்ததால் எங்களால் உங்களை சரிவர உபசரிக்க முடியவில்லை. இதை ஒரு பிரச்சனையாக்க வேண்டாம்’ என மந்திரியை சமாதானப்படுத்தியதாம்.

பிரமாண்ட விழாக்களில் இந்த மாதிரி சிறுசிறு வருத்தங்கள் சகஜம்தான். அதப் போயி நாம எதுக்கு பெருசுபடுத்த ணும்?

கடந்த சில வருடங்களாக உலகம் வியக்கும் ஹாலிவுட் படங்களுக்கான தொழில்நுட்ப வேலைகள் சென்னையில்தான் நடக்கிறது. இந்த நிலையில் ‘எந்திரன்’ தமிழ்ப்படம் மூலம் நமது கலைஞர்கள் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்க்கப் போகிறார்கள் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment