Sunday, August 8, 2010

""ஜெ.'' சொத்து குவிப்பு வழக்கில் நடப்பது என்ன? -"ஜவ்' ரிப்போர்ட்!


தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 14 வருடங்களாக ஜெயலலிதா, இழு... இழு... என இழுத்தடிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. இளைஞரணியினருக்கு உத்திரவிட்டிருந்தார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து 4-ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. இளைஞரணியினர், ஜெ.வை கண்டித்து ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு காரணமான, ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 14 வருடங்களாக என்னதான் நடக்கிறது என்பதை விசாரித்தோம்.

18-09-1996

முதல் தகவல் அறிக்கை வழக்கு. குற்ற எண்: 13 ஏ.சி./96/ஹெட்குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/w 13(2) of the P.C.Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் இந்தியாவிற்குள் உள்ளவை.)

04-06-1997

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

05-06-1997

நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை விசா ரணைக்கு ஏற்றுக் கொண்டு குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பியது.

21-10-1997

2, 3 மற்றும் 4-ம் குற்றவாளி களான சசிகலா, சுதாகரன், இளவரசி தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து 4 குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

02-09-2000

இரண்டாவது வழக்கு. குற்ற எண்: 2 ஏ.சி./2000/ஹெட் குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/w 13(2) of the P.C.Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் லண்டனில் உள்ளவை.)

23-03-2001

2-வது வழக் கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.

17-04-2001

குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. (முதல் குற்றவாளி ஜெயலலிதாவை தலைமையாகக் கொண்ட அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. முதல் குற்றவாளி ஜெயலலிதா மே 2001-ல் முதலமைச்ச ரானார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கண்டனத் தால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 21-09-2001-ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதே சமயம், முதல் குற்றவாளி ஜெயலலிதா 02-03-2002-ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.)

நவ 2002-பிப் 2003

76 சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர். அவர்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்திலிருந்து பல்டி அடித்தனர்.

21-02-2003

அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.

24-02-2003

குற்றவாளிகளிடம் 313 சி.ஆர்.பி.சி. படி கேள்விகள் கேட்கப்பட்டது.

27-02-2003

குற்றவாளிகள் தரப்பில் சாட்சிகள் 1 மற்றும் 2 விசாரிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.

28-02-2003

கடந்த தேதியில் நடைபெற்ற விவாதம் தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் டிரான்ஸ்பர் பெட்டிஷன் 77-78/2003-ல் இந்த வழக்கிற்கு தடைவிதித்தது. 18-11-2003 இரண்டு வழக்குகளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு சிறப்பு வழக்கு எண்.208/2004 மற்றும் 209/2004 ஆக உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டது.

28-03-2005

சாட்சிகளின் வாக்குமூலங்களும் வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளுக்கும் மற்றும் தமிழக அரசிற்கும் வழங்கப்பட்டது.

27-06-2005

முதல் குற்றவாளி ஜெயலலிதா 11-02-2002-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் விசாரித்து 2 வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.





ஜூலை 2005

2 வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் எஸ்.எல்.பி. 3828/2005 என்ற மனு பேராசிரியரால் தாக்கல் செய்யப்பட்டது.

05-08-2005

உச்சநீதிமன்றம் 3828/2005 வழக்கில் பெங்களூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்தது.

07-12-2009

உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண்:938/2009-ஐ ஏற்றுக் கொண்டு 2-வது வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது.

30-01-2010

சிறப்பு அரசு வழக்கறிஞர் 45 சாட்சிகளை திரும்ப அழைப்பதற்கு அனுமதி கேட்டு மனு எண்.: 321/2010 தாக்கல் செய்தார். அதே நாளில், குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்த உத்தரவில் காட்டப்பட்டிருந்த 2 அறிக்கைகள் வழக்கில் தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு மனு எண்: 322/2010 தாக்கல் செய்தது.

25-02-2010

சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு எண்:321/2010 நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனு எண்: 322/2010 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

03-03-2010

அரசு தரப்பு சாட்சிகள் 42 பேரும் நேரில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சாட்சிகள் விசாரணை 18-03-2010 முதல் 26-03-2010 வரை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் மனு எண்: 340 மற்றும் 341 தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் சம்மன்களை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்று குற்றவாளிகள் கோரினர்.

04-03-2010

03-03-2010-ல் 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி (மனு எண்: 346) குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் 340, 341 மற்றும் 346 அனைத்திலும் விவாதம் நடைபெற்றது.

05-03-2010

மனு எண்: 340, 341, 346-ஐ தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்

மார்ச் 2003

05-06-1997-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மனு எண்: 79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் குற்றவாளிகள்.

10-03-2010

79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

19-03-2010

மனு எண்: 79/2010 தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 2248/2010 குற்ற வாளிகள் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பற்றி சில கருத்துக்களை தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

22-03-2010

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 03-05-2010-க்கு வழக்கை மீண்டும் துவக்க நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.

18-04-2010

இந்த வழக்கின், விசாரணை அதிகாரிக்கு அனு மதி வழங்கப்படவில்லை. அதனால் இதன் விசாரணை முழுவதும் சட்டவிரோதமானது என்றும் வழக்கு விசாரணை முழுவதையும் இத்துடன் நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு எண்: 359-ஐ தாக்கல் செய்தனர்.

27-04-2010

ஆனால் இந்த மனுவை (மனு எண்: 359) விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

07-05-2010

11-05-2010-ல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வருகிறது அதனால் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் முதல் குற்றவாளி ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனால் வழக்கு 11-05-2010-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

11-05-2010

விசாரணை நீதிமன்றத்தில் மனு எண்: 359 தள்ளுபடி செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி.3836/2010 மனுவை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறை சட்டம் 482-ன் படி தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

மே 2010

70,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கண்ட ஆவணங்களில் 3 நகல்கள் தேவையென முதல் குற்றவாளி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

21-07-2010

3-ம் குற்றவாளி சுதாகரன் சார்பிலும் அதே மனு தாக்கல் செய்யப்பட்டது.

22-07-2010

மனு எண்: 396, விசாரணை நீதிமன்றத்தால் சில வழிகாட்டுதல்களுடன் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்தபோதிலும் குற்றவாளிகள் வழக்கை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணை 6-8-2010, 9-8-2010, 11-08-2010 மற்றும் 13-08-2010 ஆகிய தேதிகளில் சாட்சிகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

29-07-2010

மனு எண்: 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முதல் குற்றவாளி ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ( வழக்கு எண்: 3748/2010 ).

30-07-2010

மனு எண்: 396-ல் வழங்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதிக்கு அரசு சார்பில் அரசின் சிறப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார் (வழக்கு எண்: 3766/2010). கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 16-08-2010-ல் மேற்படி இரண்டு மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.

இப்படி கடந்த பதினான்கு வருடங்களாக பல்வேறு காரணங்கள் கூறி விசாரணையை ஜெயலலிதா இழுத் தடித்துக் கொண்டேயிருந்தாலும் இறுதியில் இவ்வழக்கில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும் இந்த வழக்கிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதை ஜெயலலிதா உணர்ந்தே இருப்பதாலும்தான் மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண் டிருக்கிறார் என்று வழக்கறிஞர்கள் வட்டாரம் கூறுகின்றது.

No comments:

Post a Comment