Sunday, August 8, 2010

காங்கிரஸ் டீலிங்! ஜெ. சொன்ன ரகசியம்!


""ஹலோ தலைவரே... .... கார்டனில் அ.தி.மு.க. வோட முக்கிய நிர்வாகி கள்கிட்டே ஜெ. பேசியிருக் கிறார். காங்கிரஸ் கூட்டணி பற்றித்தான் சில விஷயங் களை சொல்லியிருக்கிறார். நாம காங்கிரஸ் கூட்டணிக்குப் போறோமோ இல்லையோ, கூட்டணி வரப்போறதா செய்தி வெளியிலே போய்க்கிட்டே இருக்கணும்னு ஜெ சொன்னாராம்.''

""புரியலையே...?''

""அ.தி.மு.க. நிர்வாகிகளும் இதே வார்த்தையைத் தான் ஜெ.கிட்டே சொல்லியிருக்காங்க. அதற்கப்புறம்தான் ஜெ. விளக்கமா பேசியிருக்கிறார். அதாவது, சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேல், பார்லி மெண்ட்டில் தம்பிதுரை பக்கத்தில் திடீர்னு வந்து உட்கார்ந்து, உங்க மேடம் எப்படி இருக்காங்கன்னு கேட்டி ருக்காரு. அதாவது என்னைப் பற்றி விசாரித்தாருக் காருன்னு சொன்ன ஜெ., தி.மு.க. எம்.பி.க்கள் பார்த்துக்கிட்டிருக்கும்போதே அகமது பட்டேல் வந்து விசாரித்ததையும் சொல்லியிருக்காரு.''

""நலன் விசாரிப்புங்கிறது கூட்டணிக்கான அச்சாரமா!''

""இன்னும் சில விசாரிப்புகள் பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் ஜெ. சொல்லியிருக்கிறார். சோனியா வின் நெருக்கமான தோழியான அம்பிகா சோனி, தி.மு.க. எம்.பி.க்கள் பார்க்கும்படி அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன்கிட்டே பார்லிமெண்ட்டில் பேசியிருக் காராம். சோனியா-ராகுல் இருவரோட எம்.பி. தொகுதிகளையும் கவனித்துக்கொள்ளும் ஒருவரும் தம்பிதுரைகிட்டே சகஜமா பேசிகிட்டி ருக்காராம். ராஜீவ்காந்திக்கிட்டே விசேஷ அதிகாரியா இருந்த ஒருவர் தன் கிட்டே அப்பாயிண்ட் மெண்ட் கேட்டிருப்பதாகவும் கட்சி நிர்வாகிகளிடம் சொன்ன ஜெ., இதனாலெல் லாம் காங்கிரஸ் நம்ம கூட்டணிக்கு வந்தி டும்னு நினைச்சிடக்கூடாது. அவங்க இந்த எலக்ஷனில் தி.மு.க. பக்கம்தான் இருப் பாங்கன்னும் சொல்லியிருக்கிறார்.''

""அப்புறம் இந்த நலன்விசாரிப்பு, அப்பாயிட்மெண்ட் கேட்பதற்கெல்லாம் என்ன காரணமாம்?''

""இப்படியெல்லாம் தி.மு.க. எம்.பி.க்கள் முன்னாடி பேசுறதன் மூலமா, அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் ரெடிங்கிற மாதிரி சிக்னல்காட்டி, தி.மு.க.விடம் எலெக்ஷன் நேரத்தில் பிஃப்டி, பிஃப்டி ஷேர் வாங்குவதும், சுழற்சி முறையில் முதல்வர் பதவின்னு வலியுறுத்துவதும்தான் காங்கிரஸின் நோக்கம். அதற்காகத்தான் நம்மோடு டீலிங் போடுவது போல காங்கிரஸ் நாடகம் போடுதுன்னு சொன்ன ஜெ., 50% சீட் கொடுக்க கருணாநிதி என்ன அரசியல் தெரியாதவரா? அங்கே கிடைக்கலைன்னு இங்கே வந்து கேட்டா, 50% கொடுக்க நாம என்ன இளிச்சவாயங்களா? அதற்குப் பேசாம, அ.தி.மு.கவைக் கலைச்சிட் டுப் போயிடலாம். ஆனாலும், நாம காங் கிரசோட இந்த டீலிங்கை சாதகமா பயன்படுத்திக்கிட்டு, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிங்கிற தோற் றத்தை உருவாக்கிக்கிட்டே இருக்க ணும்னு சொல்லியிருக்கிறார்.''

""எதற்காக அப்படியொரு தோற்றமாம்?''

""அந்த ரகசியத்தையும் ஜெ.வே சொல்லியிருக்கிறார். எவ்வளவுக்கெவ்வளவு அ.தி.மு.க. பக்கம் காங் கிரஸ் நெருங்கி வர்ற மாதிரி தெரியுதோ, அந்தளவுக்கு தி.மு.க.வும் கூடுதல் இடங்களை காங்கிரசுக்கு கொடுத்து கூட்டணியை மெயின்டெய்ன் பண்ணும். காங்கிரசுக்கு கிடைக்கிற இடங்களெல்லாம் நமக்கு பாசிட்டிவ்வா அமையும். எம்.பி. எலக்ஷனில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில்தான் நம்ம கூட்டணி அதிக இடங்களை ஜெயித்தது. அதுபோல, எம்.எல்.ஏ. எலக்ஷனிலும் காங்கிரசுக்கு கிடைக்கிற இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவைத்தால் நம்ம வெற்றி ஈஸியாயிடும். நமக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும். இதுதான் நம்ம ப்ளான். இதற்குத் தகுந்தமாதிரி நம்ம அரசியல் மூவ் இருக்கணும்ங்கிறதுதான் நிர்வாகிகளிடம் ஜெ. சொல்லியிருக்கும் விஷயம்.''

""கூட்டணி விஷயமா யாரும் பேசக் கூடாதுன்னு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சொன்னபிறகும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசாமல் இருக்கப்போறதில் லைன்னு போனமுறைதான் நாம பேசிக்கிட் டோம். அதற்குள்ளே, ஈரோட்டில் நடந்த கட்சிக் கூட்டத்தில் மறுபடியும் பரபரப்பா பேசியிருக்காரே இளங்கோவன். மத்திய அரசின் 45ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு கட்டப்படுற வீடுகளுக்கு கலைஞரின் பெயரால் திட்டத்தை உருவாக்குவதான்னும், இப்படி பேசுவதெல்லாம் கூட்டணியை வலிமைப் படுத்தத்தான்னும் சொல்லியிருக்காரே?''

""முன்னாள் மத்திய அமைச்சரா இருந்த இளங்கோவன் சொல்ற திட்டம் வேற, கலைஞர் வீட்டு வசதி திட்டம்ங்கிறது வேறன்னு விளக்கமா பதில் சொல்லியிருக்கும் முதல்வர், அது ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம்ங்கிறதையும், கலைஞர் வீட்டு வசதி திட்டம்ங்கிறது மண்சுவரால் ஆன 21 லட்சம் கூரை வீடு களை மாநில அரசின் நிதியில் 6 ஆண்டுகளில் நிரந்தர வீடு களாகக் கட்டித் தரும் திட்டம்ங் கிறதையும் சொல்லியிருக்கிறார். இந்த நிதியாண்டில் மட்டும் 1800 கோடி ரூபாய் செலவில் 3 லட்ச நிரந்தர வீடுகள் கட்ட மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் பட்டிருக்குதுன்னு விளக்கியிருக்கும் கலைஞர், இரண்டு திட்டங்களுக்கும் வித்தியாசம் புரியா மல் இளங்கோவன் பேசுவது, வலுப்படுத்துகிற செயல் அல்ல, வலிப்படுத்துகிற காரியம்னு பஞ்ச் வச்சிருக்காரு.''

""அடுத்த மேட்டர்?''

""புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பி வைத்த பணமெல்லாம் ராஜபக்சே கைக்குப் போன செய்தியை போன முறை பேசிக்கிட்டோமே.. அதன் தொடர்ச்சி யான விஷயத்தைத்தான் சொல்லப்போறேன். இலங்கை அரசாங்கத்தின் புனரமைப்பு பணிகள் துறையின் அமைச்சரான குணரத்னா அந்த நாட்டு பார்லிமெண்ட் டில் பேசும்போது, கே.பி.ங்கிற பெயரிலோ குமரன் பத்மநாபாங்கிற பெயரிலோ யாரும் அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களிலோ சிறைச்சாலையிலோ இல் லைன்னு ஒப்புதல் வாக்குமூலம் போல சொல்லி யிருக்காரு. அதாவது, மலேசியாவில் இன்டர்போல் போலீஸ் துணையோடு பிடிபட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி. இப்ப சுதந்திரமாகவும் அனைத்து வசதிகளும் பெறக்கூடிய ஸ்பெஷல் கெஸ்ட்டாகவும் இலங்கையில் நடமாடிக் கிட்டிருக்கிறார்ங்கிறதுக்கு அமைச்சரோட பதில்தான் சாட்சியம். இந்த நிலையில், புனரமைப்புக்காக உருவாக்கப் பட்டிருக்கும் நேர்டோ அமைப்பிற்கு கே.பி.யையே தலைவரா நியமிச்சி ருக்கிறாரு ராஜபக்சே.''

""விடுதலை உணர்ச்சியோடு, வியர்வையை காசாக்கிக் கொடுத்தாங்க உலகத் தமிழர்கள். அந்தப் பணத்தை ராஜபக்சேவிடம் விலையா கொடுத்து, தன்னோட விடுதலை யையும் புதுப்பதவியையும் பெற்றிருக்கிறார் கே.பி. தமிழர்கள் வரலாற்றில் எட்டப்பன்கள் கதை தொடர்ந்துகிட்டுத்தான் இருக்குது.''

""தலைவரே... அடுத்த மேட்ட ருக்கு வர்றேன். சென்னையில் கருத்துரிமை சம்பந்தமான ஒரு கூட்டத் திற்கு சமீபத்தில் ஏற்பாடானது. இதில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் கலந்துக்கணும்னு சிறை யில் இருக்கும் சீமான்கிட்டே கேட்டாங்க. எந்த அரசியல் கட்சியும் கலந்துக்காம, அரசியல் சாயம் பூசாமல் இருந்தா எங்க கட்சி பிரதிநிதிகள் கலந்துக்குவாங்கன்னு சொல்ல, கூட் டத்தை ஏற்பாடு செய்தவங்களும் சரின்னாங்க. ஆனா, கருத் துரிமை கூட்டத்தில் அ.தி.மு.க., ஆதரவுக் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்ததை அறிந்ததும், சீமானுக்கு அவரோட கட்சியினர் தகவல் தெரிவிக்க, தன் கட்சியின் பிரதி நிதிகள் கலந்துக்க மாட்டாங்கன்னு சீமான் சொல்லிட்டார். புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களிடமும், இங்கேயுள்ள தமிழ் உணர்வாளர்களிடமும் சீமானுக்குத்தான் இப்ப முதல் வர வேற்பு. இதே பிரச்சினைக்காக புயலாகச் சீறும் தலைவருக்கு இது பிடிக்கலையாம். அதனாலதான் சீமான் மீது அ.தி.மு.க. சாயத்தைப் பூசிட்டால் அந்த வரவேற்பு குறைஞ்சிடும்ங்கிற திட்டத்தோடுதான் கருத்துரிமை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்குது. சீமானுக்கு இது தெரிஞ்சதால தன் கட்சி பிரதிநிதிகளை அனுப்பலையாம்.''

""ஜெயலலிதாவுக்கு வாய்தா ராணின்னு மு.க.ஸ்டாலின் கொடுத்த புதுப் பட்டத்தையே முழக்கமா எழுப்பி தமிழகம் முழுக்க தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தி யிருக்குதே?''

""எழுச்சியோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு கூட்டம் வந்ததுங்கிற ரிப்போர்ட்டை இப்ப கலைஞரும் ஸ்டாலினும் பார்த்துக் கிட்டிருக்காங்க. திருச்சியிலும் திருவண்ணாமலையிலும்தான் மற்ற எல்லா இடங்களைவிட அதிக கூட் டம். 40 ஆயிரத்துக்கு மேலே தொண்டர் கள் திரண்டு இரண்டு நகரங்களையும் திணறடிச்சிட்டாங்க. கரூரில் 15ஆயிரம், சேலத்திலும் கிட்டதட்ட அதே அளவு, வடசென்னையில் 10ஆயிரம் பேர், தென் சென்னையில் 8ஆயிரம் பேர். தென்மாவட் டங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு இருக்காதுன்னு எதிர்க்கட்சிகள் எதிர்பார்த் துக்கிட்டிருக்க, மதுரையில் 15 ஆயிரத்துக் கும் அதிகமான தொண்டர்கள் கூடிட் டாங்க. மக்கள் தொகை குறைந்த சின்ன மாவட்டமான கன்னியாகுமரியில்கூட 2000 பேர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்தாங்க. பெரிய மாவட்டமான ஈரோட்டில் இரண் டாயிரத்துக்கும் குறைவான அளவில் ஆட் கள் கலந்துக்கிட்டாங்க. இதுபோல குறை வான கூட்டம் கூடிய மற்ற மாவட்டங்கள் பற்றியும் லிஸ்ட் எடுக்கப்பட்டிருக்குது.''

""சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி கள் கவலைப்பட வேண்டிய விஷயம்...''

""தலைவரே... ... பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷனோடு தமிழ்நாட்டுக்குள்ளே ஓடிக்கிட்டிருக்கிற வாகனங்களுக்கு, இங்கே டாக்ஸ் கட்டணும்ங்கிறதில் போக்கு வரத்துத் துறை ஸ்ட்ரிக்ட்டா இருக்குது. துறை மந்திரியின் உத்தரவுப்படி ஆர்.டி.ஓ ஆபீஸ் அதிகாரிகள், பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் வாகனங்களை வெரிஃபை பண்றாங்க. அப்படித்தான் போன சனிக்கிழமையன்னைக்கு கள்ளக்குறிச்சி கடைவீதியில் நின்ற, பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் இன்னோவாவை மோட்டார் வாகன ஆய்வாளர் செக் பண்ணினார். வண்டிக்குள் இருந்தவர் ஆதிசங்கர் எம்.பி. அவ்வளவுதான். எம்.பி. வண்டியையே செக் பண்ணுவீங்களான்னு அவர் சூடாக, ஆய்வாளர் ஸாரி கேட்க, விஷயம் உடனே மந்திரி நேருவுக்கு செல்போன் மூலம் போயிடிச்சி. நேரு வோ ஆதிசங்கர் கிட்டே, நாங்கதான் செக் பண்ணச் சொல்லியிருந்தோம். உங்க வண்டின்னு தெரிஞ்சிருக்காதுன்னு சொல்லி நிலைமைய கூல் பண்ணி யிருக்கிறார். அதற்கப்புறமும் ஆய்வாளரை எம்.பி. வறுத்தெடுத்ததால கள்ளக்குறிச்சி கடைத் தெருவே பரபரப் பாயிடிச்சி.''

""திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க. பொதுக் குழுவில் அன்புமணி பேசியதும் பரபரப்பாயிடிச்சாமே?''

""மாவட்டவாரியா பா.ம.க. பொதுக்குழு நடத்திக்கிட்டிருக்குது. திருவண்ணாமலையில் அன்புமணி பேசுறப்ப, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தையே மத்திய சுகாதார அமைச்சரா இருந்த நான்தான் கொண்டு வந்தேன்னு சொன்னதோடு, நம்மை இழிவா பேசுறவங்களை அடிங்க. அப்படி அடிக்கிற கைக்கு நான் தங்கமோதிரம் போடுறேன்னு டென்ஷனா பேசினாரு. என்ன விஷயம்னா, பென்னாகரம் இடைத்தேர்தலின்போது, அங்கே பொறுப்பாளரா இருந்த அமைச்சர் எ.வ.வேலு பா.ம.க. பற்றி கடுமையா விமர்சனம் செய்தாராம். அதை மனசிலே வச்சுதான் அன்புமணி பேசியதா பா.ம.க. நிர்வாகிகள் சொல்றாங்க.''

""மத்திய அமைச்சர் அழகிரிகிட்டேயிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வந்திருக்குதே?''

""தென்மாவட்ட தி.மு.க.வினர் பற்றி வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்னு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருப்பதோடு, வதந்தி பரப்புறவங்க யாருன்னும் விசாரிக்க சொல்லியிருக்காரு அழகிரி. அவரோடு கூட இருக்கிற மிக முக்கியமான ஒருத்தரை அடிச்சிட்டதா வெளியான வதந்தியை யடுத்துதான் இந்த அறிவிப்பு வந்திருக்குது. அழகிரியை ஆஃப் பண்ணனும்னா, அவ ரோட இருப்பவங்களை முடக்கணும்னு கார்டனில் உள்ள ஒரு உதவியாளரும், மதுரையில் சிறை சென்று மீண்ட பத்திரிகையாளரும்தான் இப்படி வதந்தி பரப்புவதா அழகிரிக்கு தெரிய வந்திருக்குது. அதோடு, வேற சிலரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதா அழகிரிக்கு சந்தேகம் இருப்பதாலதான் விசாரிக்கச் சொல்லியிருக்காரு.''

""எதிர்பார்ப்புக்குரிய ஒரு விஷயத்துக்கு எதிர்பாராத எதிர்ப்பு வந்திருப்பது பற்றி நான் சொல்றேன்... "எந்திரன்' படம் ரொம்பவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்குது. இந்தப் படம் ரிலீசாவதற்கு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்பு காட்டும் மனநிலையில் இருக் காங்க. இந்த எதிர்ப்பை ஒருங் கிணைக்கும் முயற்சிகளும் வெளிநாடுகளில் நடந்துக் கிட்டிருக்குது. காரணம் என்னன்னு விசாரித்தேன். ரஜினி தன்னோட இரண்டாவது மகள் சவுந்தர்யா கல்யாணத்துக்கு சோனியாவை அழைத்திருப்பதா ஒரு தகவல். அந்தத் தகவல்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்ப் புணர்வுக்கு காரணம்.''

மிஸ்டுகால்!

ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வடக்கன்குளம் எஸ்.ஏ.ராஜாவை சுப்ரீம்கோர்ட் விடுவித்ததில் அருணா குடும்பம் ரொம்பவும் அப்செட். விடுதலையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் விரைவில் ரிவியூ பெட்டிஷன் போடத் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களை ரொம்பவும் கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறது காவல்துறை.

கடல்வழியே வரும் தீவிரவாதிகளைப் பிடிக்கும் வகையில் போலீசார் அலர்ட்டாக இருக்கிறார்களா என கமாண்டோ படையினர் அண்மையில் நடத்திய பரிசோதனை 80% அளவுக்கு வெற்றிகரமாக நடந்தது. ரயில்வே ஸ்டேஷனிலும், மாயாஜாலிலும் தீவிரவாதிகள் போல நுழைந்த கமாண்டோக்களை மட்டும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒத்திகையில் 80% வெற்றி என்றாலும், உண்மையான தீவிரவாதிகள் வரும்போது, ஒத்திகை என்று அலட்சியமாக காவல்துறையினர் இருந்துவிடக்கூடாது.

சாத்தூரில் அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, மு.க.அழகிரியைப் பற்றி கூட்டத்திலிருந்து விமர்சனக் குரல் கிளம்பியது. இதைக் கவனித்த ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக மைக்கைப் பிடித்து, "அவர் அப்படியெல்லாம் நடந்துக்கிட்டதை நீங்க பார்த்தீங்களா? அவர் அப்படிப்பட்டவரா இருந்திருந்தா இந்நேரம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாம பண்ணியிருப்பாரு. அழகிரி ஒண்ணும் ரவுடி கிடையாது. யாரும் இப்படித் தப்பா பேசக்கூடாது' எனப் பேசி, அரசியல் நாகரிகத்தைப் பாதுகாத்தார்.

No comments:

Post a Comment