Thursday, August 5, 2010

கலைஞரா, ஜெ.வா -யார் முதல்வர்?


தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கடந்த 40 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், தேர்தல் களப் பிரச்சாரத்தின் கதாநாயகன் கலைஞர்தான். கூர்மையான அரசியல் வியூகம், எதிரி களை எதிர்கொள்ளும் லாவகம், சவால்கள், பதிலடிகள், வாக்குறுதிகள் என கலைஞ ரின் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருந் துள்ளன. பூமழை பெய்வதுபோன்ற மொழிநடை, பூகம்பம் -எரிமலை -இடி -மின்னல் சேர்ந்து வந்ததுபோன்ற பதிலடி கள், தொடக்கம் முதல் இறுதிவரை பேச்சு முழுவதும் விரவியிருக்கும் நகைச்சுவை, சின்னச் சின்ன கதைகள் என அவருடைய பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந் துள்ளது. அண்ணா, ம.பொ.சி, ஈ.வெ.கி. சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், காளிமுத்து, அனந்தநாயகி என மேடைப் பேச்சில் ஜொலித்தவர்கள் இன்றில்லாத நிலையில், கலைஞருடைய பிரச்சாரம் தமிழ்ப் பேச்சுக்கலையின் இலக்கணமாக அமைந்துள் ளது. இந்தக் கலையில் அவரைத் தொடர்ந்துவரும் ஒரே அரசியல் தலைவர் வைகோ மட்டுமே.



நீண்ட அரசியல் அனு பவமும் தேர்தல் களம் பற்றிய நேரடி அனுபவமும் கலைஞ ருக்கு மட்டுமே உரியது. எந்தத் தொகுதியில் போட்டியிட் டாலும் அவர் வெற்றி பெறுகிறார் என்றால், தமி ழகத்தின் 234 தொகுதிகள் பற்றிய தேர்தல் கணக்கையும் அவர் அறிந்திருப்பதுதான் கார ணம். கூட்டணியை அமைப்ப திலும் அதனை தக்கவைப்பதிலும் கலைஞரின் சாமர்த்தியம் தனித் துவம் வாய்ந்தது. அவருடைய தேர்தல் அறிக்கைகள் இந்திய அளவில் பேசப்பட்டிருக்கின்றன. தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் தேர்தலில் தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக கலைஞரே முன் னிற்பாரா, தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் செய்வாரா, துணை முதல்வர் மு.க.ஸ்டா லினை முதல்வர் வேட்பாள ராக்கி, முக்கிய நகரங்களில் மட்டும் கலைஞர் பிரச்சாரம் செய்வாரா என்ற எதிர் பார்ப்புகள் அரசியல் தளத்தில் உள்ளன. மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நம் கள ஆய்வில் தேடினோம்.



கலைஞரா, ஜெ.வா -யார் முதல்வர்? என்ற கேள்விக்கு மக்களிடம் முதலிடம் பெறு பவர் கலைஞர்தான். கட்சிக்கு அப்பாற்பட்ட மூத்த தலைவ ராக, தமிழர்களின் தலைவராக அவரை தமிழக மக்கள் பார்க் கிறார்கள். இந்தப் பார்வை வேறெந்த அரசியல் தலைவர் மீதும் தமிழக மக்களுக்கு இல்லை. இது தி.மு.க அணிக்கு மிகவும் சாதகமான அம்சமாக உள்ளது. எக்கட்சியையும் சாராத வாக் காளர்கள், யாருக்கு வாக்கு என முடிவெடுக்காதவர்கள் ஆகியோ ரையும்கூட இந்த சாதகமான அம்சம், தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யக்கூடியதாக இருக்கிறது. உடல் நிலையைக் காரணமாக வைத்து, ஸ்டாலினை முதல்வர் வேட் பாளராக தி.மு.க. முன்னிறுத்தி னால் ஸ்டாலினா, ஜெ.வா-யார் முதல்வர்? என்ற கேள்வி எழும். முதல்வர் வேட்பாளர் போட்டியில் கலைஞர் இல்லாத நிலையில், ஜெ.வுக்கு சாதகமான சூழல் அமையும் என்பதை நமது ஆய் வில் அறிய முடிந்தது. ஸ்டா லினுக்கு ஆதரவாக கலைஞர் பிரச்சாரம் செய்தாலும் ஜெ. முன்னிலை பெறும் வாய்ப்பு தெரிகிறது.



தி.மு.க.வில் நிகழும் வாரிசு போட்டிகளையும் மக்கள் கவ னித்தபடியே இருக்கிறார்கள் என்பதை களத்தில் நாம் அறிய முடிந்தது. தி.மு.க. அரசின் திட் டங்களை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் ஸ்டாலின் மேற் கொள்ளும் பயணங்களும், அ.தி.மு.க. கோட்டையாக இருந்த தென் மாவட்டங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு மு.க.அழகிரி வகுத்த வியூகங்களும் மக்களின் கவனிப்பிற்குள்ளாகியுள்ளன. இவர்கள் இருவரிடையிலும் ஒற்றுமையை நிலைநிறுத்த கலைஞர் எடுக்கும் முயற்சிகள் பற்றியும் மக்கள் பேசுகின்றனர்.



கலைஞரின் காலம் வரை குடும்பத்திற்குள் எழும் எந்த வாரிசு போட்டியும் கட்சியைப் பாதிக்காது என்றும், கலைஞருக்குப் பிறகு சகோதரர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே தி.மு.க.வின் எதிர்காலம் அமையும் என்றும் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment