Sunday, August 1, 2010

நித்தி மீது சீட்டிங் கேஸ்!


""தனது கர்மவினைகள் தனக்கு எதிராக விசுவரூபம் எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தும்... பண பலத்தால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில்.. மீண்டும் பிடதி ஆசிரமத்தில் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார் நித்யானந்தா''’என்று மர்மப் புன்னகை பூத்தார் நித்தியின் வழக்கை விசாரிக்கும் அந்த பெங்களூர் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி.

அவர் ஆட்டம் என்று குறிப்பிட்டது நித்தி நடத்திய குரு பூர்ணிமா நிகழ்ச்சியை.

ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்ச்சியை தன் பிடதி ஆசிரமத்தில் ஏற்பாடு செய்திருந்தார் நித்தி. குரு பூர்ணிமா என்பது பக்தர்களின் பாவங்களை குருவானவர் ஏற்றுக்கொள்ளும் வைபவம். இப்படி தங்கள் பாவ வினைகளை ஏற்கும் குருவிற்கு, பக்தர்கள்... அரிசி, பருப்பு முதலான தானியங்கள் தொடங்கி, கரன்ஸிகள், தங்க, வைர ஆபரணங்கள்வரை காணிக்கையாக செலுத்தி பாதபூஜை செய்வார்கள்.

ரஞ்சிதா சி.டி. வெளியாவதற்கு முன்... இந்த நிகழ்ச்சியில் 15-ல் இருந்து 20 ஆயிரம்பேர் வரை கலந்துகொள்வார்கள். அப்போது காணிக்கையாக... அங்கு வரும் பக்தர்கள் அத்தனைபேரும் நித்தியின் காலடியில் கொட்டும் காணிக்கையின் மதிப்பு 50 கோடி ரூபாய் அளவிற்குக் கூட இருக்கும். இப்படி கோலாகலமாக குருபூர்ணிமாவைக் கொண்டாடி வசூலில் திளைக்கும் நித்யானந்தா... இந்த முறை... சில அரசியல் கட்சிகளைப்போல ஆள்திரட்டும் வேலையில் இறங்கவேண்டியிருந்தது.

வாகனங்கள் மூலம் அங்கங்கே ஆட்கள் திரட்டப்பட்டனர். கர்நாடகா வைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் கூலிகொடுத்துக் கூட்டிவரப்பட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து அமைப்பினர் சிலரும் தருவிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் 1500 பேரைத் தாண்டவில்லை. பாதாபிஷேக வசூலும் ரொம்பவே டல்லடித்தது. இதில் ரொம்பவே நித்தி அப்செட் ஆனாலும்... அடிக்கடி தான் உற்சாகமாக இருப்பதுபோல்... காட்டிக்கொண்டார். தங்கப் பல்லக்கில் ஏறி ஆசிரமத்துக்குள் ரவுண்ட் அடித்த நித்தி.. வழக்கம்போல் பெண்கள் மீது சாக்லெட்களை வீசியெறிந்து ஆனந்தப்பட்டார்.

ஆசிரமத்துக்குள் இருக்கும் மெஹா சைஸ் லிங்கமான வைத்திய சரோவர் லிங்கத்துக்கு 2009-ல்தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இருந்தும் குரு பூர்ணிமா அன்றும் 100 குடம் பால், 100 குடம் சந்தனக் கரைசல் என பலவற்றாலும் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

இதெல்லாம் பத்திரிகைகளில் பெரிதாக வரவேண்டும் என்பதற்காக நித்யாவின் சிஷ்யர்கள் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது நித்தி-ரஞ்சி சி.டி. போலியானது என்று திரும்பத் திரும்பச் சொன்னார் கள்.

நாம் பெங்களூர் சி.ஐ.டி. அதிகாரியிடம்... ""நித்தி-ரஞ்சி சி.டி. காட்சிகளை மறுக்கிறார்களே... எந்த தைரியத்தில்?'' என்றோம்.

அவரோ, ""ரஞ்சிதாவையே சென்னையி லேயே வைத்து 8 மணிநேரம் விசாரித்தோம். அவர் ஆசிரமத் தரப்பால் சரி செய்யப்பட்டி ருக்கிறார். எனவேதான் "அந்த சி.டி. காட்சி பத்தி எனக்குத் தெரியாது... நானும் அவரும் எதுவும் பண்ணலை'ன்னு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அது உண்மையான சி.டி.தான் என்பதற்கான ஆதாரங்கள் பலமாக இருக்கிறது. சிஷ்யர்கள் சொல்வது பொய் என்பது உரிய நேரத்தில் கோர்ட்டில் சி.டி. பேசும். அதேபோல் "என் பெயரில் சொத்துக்களோ பிஸ்னஸோ இல்லை. நான் வெறும் சாமியார்தான். எல்லாச் சொத்துக்களுமே ஆசிரமத்தின் பேரில்தான் இருக்கு' என அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நித்யானந்தா மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது''’என்றார் அழுத்தம் திருத்தமாய்.

அது என்ன மோசடி வழக்கு என்று நாம் துருவத்தொடங்கி னோம்..

நித்யானந்தாவோ அமெரிக்காவில் நித்யா யோக ஃபவுண் டேசன், லைட் ப்ளஸ் ஃபவுண்டேசன் என்கிற பெயர்களில் அறக்கட்டளைகளைத் தொடங்கியிருக்கிறார். இந்த அறக்கட்டளைகள் பொதுமக்களின் சேவைக்காக என்று சொல்லி... அறக்கட்டளைக் குக் குவியும் நிதிகளுக்கு வரிவிலக்கும் பெற்றிருக்கிறார்.

இது ஒருபக்கம் என்றால்... தன்னை சந்நியாசி என்று சொல்லிக்கொண்டு எப்படி ரஞ்சிதாவை படுக்கையில் உருட்டி விளையாடி... சந்நியாசத்துக்கு எதிராக நடந்துகொண்டாரோ... அதேபோல்... ‘"என் பெயரில் எந்த சொத்துக்களும் நிறுவனங்களும் இல்லை. எல்லாமே ஆசிரம அறக்கட்டளையின் பெயரில்தான் இருக் கிறது. நான் ஒரு துறவி'’ என்று எல்லா இடங்களிலும் தன்னைப் பற்றி சுத்தமானவராக அறிவித்துக்கொள்ளும் நித்யானந்தா... தன் அறிவிப்பிற்கு மாறாக அமெரிக்காவில் ஒரு ஷேர் மார்க்கெட் நிறுவனத்தையே பார்ட்னர்களுடன் சேர்ந்து நடத்திக்கொண்டி ருக்கிறார்.

"நித்யானந்தா கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட்'’ என்ற பெயரிலான இந்த ஷேர் மார்க்கெட் கம்பெனியில் மேனேஜர்களாக (எம்.டி) கோபிகாவின் கணவரான ராஜேஷ் கிருஷ்ணன், சுப்பிங்லின் ஆகியோரோடு ’ஸ்ரீ நித்யானந்தா சுவாமி’ என்ற பெயரில்... இந்த நித்தியும் இருக்கிறார். (ஆதாரம் காண்க:)

இந்தியாவில் பங்கு மார்க்கெட் பிஸ்னஸில் ஹர்ஷத் மேத்தா பண்ணிய கோல்மால்கள் போல்... அமெரிக்காவில் நித்யானந்தா மேனேஜராக இருந்து நடத்திவரும் இந்த ஷேர்மார்க்கெட் கம்பெனியிலும் ஏகப்பட்ட ஃபிராடுத்தனங்கள் அரங்கேறியிருக்கிறது. இதை ஆதாரத்தோடு கண்டுபிடித்திருக்கும் அமெரிக்கப் போலீஸ்... நித்தியை தனது விசாரணை வளையத்துக்குள் விரைவில் கொண்டுவர இருக்கிறது என்கிறது அமெரிக்கத் தரப்பு..

ஆக, நித்தியின் மோசமான கர்மவினைகள் அவரை லேசில் விடாது போலிருக்கிறது.

No comments:

Post a Comment