Sunday, August 1, 2010

தமிழக கம்யூனிஸ்ட் கட்சி உதயம்?


""மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படும் கட்சி சாராத எம்.எல்.ஏ.வாகிவிட்டார். அவரைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவபுண்ணிய மும் அரசு விழாக்களில் தி.மு.க. அரசை பாராட்டிப் பேசுகிறார். கோவிந்தசாமியும் சிவபுண்ணியமும் இணைந்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சி என்கிற கட்சியை உருவாக்கி தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு கம்யூனிஸ்ட் கொடியை இணைக்கப் போகிறார்கள்'' என்று செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் என்ன நடக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட தோழர்களிடம் கேட்டோம். ""நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் எங்க மாவட்டத்தில் தி.மு.க. சில இடங்களில் தோற்றிருக்கிறது. திருநெய்பேறு என்கிற கிராம ஊராட்சியில் தி.மு.க.வுக்கு டெபாசிட்டே பறிபோனது.

முத்துப்பேட்டை பகுதியில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான 17-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கிரிசாமிக்கும் தி.மு.க.வின் கே.முருகையனுக்கும் இடையே கடுமையான போட்டி. அதில் எங்க பக்கிரிசாமி 30 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வெற்றியை தவிர்க்க தி.மு.க.வை சேர்ந்த கார்த்திகேயன், தேர்தல் அதிகாரியிட மிருந்து வாக்குச் சீட்டுகளை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யையே தள்ளிவிட்டு ஓடினார். அதை கம்யூனிஸ்ட் தோழர் கள் முறியடித்தனர்.

அழகு திருநாவுக்கரசு தி.மு.க.வுக்குப் போகிற விழாவிற்கு சிவானந்தம் என்கிற எங்களது ஒன் றிய கவுன்சிலரை கடத்திக்கொண்டு போகப் பார்த்தார்கள். அதை எங்களது தோழர்கள் முறியடித்தார்கள். இவ்வளவு வேலைகளையும் தி.மு.க.வுக்கு எதிராக களத்தில் நின்று செய்து முடித்தவர் யார் தெரியுமா? சிவபுண்ணியம்தான்.

அவரது சொந்த ஊரான மேலபனையூர் ஒரு கம்யூனிஸ்ட் கிராமம். அந்த ஊரில் இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் தலைவர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் வைத்தியநாதன். அவர் சிவபுண்ணியத்தின் அப்பா. அவரும் அதே கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, அவரது குடும்பம் முழுவதுமே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். அப்படிப்பட்டவர் தி.மு.க.வுக்கு எப்படிப் போவார்'' என எதிர் கேள்வி எழுப்புகிறார்கள்.

சந்தேகத்திற்குரிய சிவபுண்ணியமோ... ""நான் எனது கட்சி முடிவுகளுக்கு மீறி எப்பொழுதும் செயல்படமாட்டேன். அதேநேரம் நல்ல திட்டங்களை பாராட்டவும், நிறைவேறாத கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு விழா, சட்டமன்றம் என அனைத்தை யும் மக்களுக்காக பயன்படுத்துவேன்'' என்கிறார்.

No comments:

Post a Comment