Sunday, August 1, 2010

தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அ.தி.மு.க.வுக்கு நான் ஆனா ஒரு கண்டிஷன்'' -விஜயகாந்திடம் அதிர்ந்த ஜெ.!


""ஹலோ தலைவரே... தமிழகத்தில் தேர்தல் கூட்டணி எப்படி அமையும்ங் கிறதை தேசிய அளவில் உள்ள கட்சிகளும் எதிர் பார்த்துக்கிட்டு இருக்குது.''

""எப்படி சொல்றே? டெல்லி வட்டாரத்தில் இது பற்றி ஏதாவது பேச்சு நடந்ததா?''

""சி.பி.எம்.மின் மத்திய கமிட்டி கூட்டத்தில் பிரகாஷ்காரத்தைப் பார்த்து சீதாராம் யெச்சூரியும் பிமன் போசும், காங்கிரசோடு கூட்டணி அமைக்கப் பேசிக்கொண்டிருக்கிற ஜெயலலிதா வுடன் தமிழ்நாட்டில் எப்படி உறவைத் தொடருறீங்கன்னு கேட்டாங்க. காரத் அதற்குப் பதிலளிப்பதற்கு முன்னாடி, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.எம். எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் சட்டென பதில் சென்னார்.''

""என்ன சொன்னாராம்?''

""ஜெ. நமக்கு ரொம்பவும் நம்பிக்கைக்குரியவர்னு சொன்ன டி.கே.ஆர்., காங்கிரசோடு அ.தி.மு.க. பேசுவதாக சொல்வதும், ராகுல்காந்தியோடு பேசு வதா சொல்வதும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்கும் வேலை கள்தான். நம்ம முயற்சியால தமிழ் நாட்டில் அ.தி.மு.க. -தே.மு. தி.க கூட்டணி உருவாகும்னு சொல்லியிருக்கிறார். ''

""அப்படின்னா அ.தி.மு.க.வின் கூட்டணி டார்கெட் தே.மு.தி.க.தானா?''

""2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கும்னும், இது சோனியா ஏற்கனவே கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதின்னும் டெல்லியிலிருந்து ஜெ.வுக்கு தகவல் கிடைத்திருக்குது. தன்னை சந்திக்க வரும் சின்னக் கட்சிகளின் தலைவர்கள்கிட்டே ஜெ.வே இதைச் சொல்றாராம். அதே நேரத்தில், ராகுல் தரப்பினரைத் தூண்டிவிட்டு, மகாராஷ்ட்ரா பாணியில் தமிழ் நாட்டிலும் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி கேட்டு சிக்கலை ஏற்படுத்தணும்ங்கிறதில் ஜெ மும்முரமா இருக்கிறார். தி.மு.க. சீட் தரமறுத்தால் காங்கிரசுக்கு நாங்க தர்றோம்னு சொல்லி அ.தி.மு.க. தரப்பு சீன் போட்டாலும் கூட்டணியைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வின் தற்போதைய முக்கிய சாய்ஸ் தே.மு.தி.க.தான்.''

""அதுசம்பந்தமாகத்தான் ஜெ.வையும் விஜயகாந்த்தையும் தவிர, இரண்டு கட்சிகளிலும் உள்ள முக்கிய தலைகளெல்லாம் மும்முரமா பேசிக்கிட்டிருக் காங்களே!''

""கூட்டணிக்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவிக்கட்டும், அப்புறம் பேசலாம்ங்கிறதுதான் ஜெ.வின் நிலைங்கிறதை நாம ஏற்கனவே சொல்லியிருக்கோம். இது சம்பந்தமா விஜயகாந்த்கிட்டே தே.தி.மு.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாஃபா பாண்டியராஜன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா மூணுபேரும் தொடர்ந்து பேசி யிருக்காங்க. கூட்டணி இல்லைன்னா தே.மு. தி.க. காணாம போயிடும்னு பண்ருட்டியார் வலியுறுத்திச் சொன்னதையடுத்து, அப்போதைய மனநிலையில் கூட்டணிக்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.''

""அடுத்த கட்டம்?''

""தே.மு.தி.க. தங்கள் அணிக்கு வந்தால் என்ன லாபம்ங்கிறதை அ.தி.மு.க. நிர்வாகிகள், ஜெ.கிட்டே நோட் போட்டுக் கொடுத்திருந் தாங்க. எம்.ஜி.ஆர். விசுவாசிகளின் ஓட்டுகளில் 10% விஜயகாந்த் பக்கம் போயிட்டதாகவும், எம்.பி. தேர்தல் போல பூத்துகளை விட்டு அ.தி.மு.க. ஏஜெண்ட்டு கள் பாதியிலேயே ஓடினாலும் விஜய காந்த் கட்சிக்காரங்க உறுதியா நிப்பாங் கன்னும் தெரிவிக் கப்பட்டிருக்குது. எல்லாம் சரியாகத் தான் இருக்குன்னு யோசித்த ஜெ, சீட் விஷயமாகவும் பேசச் சொல்லியிருக்கிறார்.''

""என்ன நிலவரமாம்?''

""அ.தி.மு.க. தரப்பிலிருந்து தே.மு.தி.க.விடம் இதுபற்றி பேசப்பட, அவங்க விஜயகாந்த் கிட்ட சொல்லியிருக்காங்க. விஜயகாந்த் உடனே, தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் எப் படி முக்கியமோ அதுபோல அ.தி.மு.க அணிக்கு நான் முக்கியம். காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் என்ன ஓட்டு பலம் இருக்குதோ அதற்கு இணையாக நம்ம கட்சிக்கும் ஓட்டு பலம் இருக்குது. அதனால, தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படுதோ அதே அளவு சீட்டுகளை நமக்குத் தரவேண்டும்னு உறுதியா சொல்லியிருக்கிறார். இது ஜெ. காதுக்குப்போக, அவர் கடும் அதிர்ச்சியில் இருக்காரு.''

""அ.தி.மு.க. கூட் டணியில் தே.மு.தி.க. இணையும் சூழல் ஏற்பட்டால் பா.ம.க.வின் கூட்டணி நிலைப்பாடு என்ன வா இருக்கும்?''

""இப்ப பா.ம.க. வோட கவனமெல் லாம் வன்னியர் சமுதாயத்தின் ஓட்டு களை தக்கவைப்பது தான். அதற்காக வன்னியருக்கு 20% இட ஒதுக்கீடு கோரி 28-ந் தேதி மாநிலம் முழுக்க பா.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவங்க கலந்துக்கிட் டாங்க. அதிகபட்சமா சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமா மதுரையில் 19 பேரும் இருந்திருக்காங்க. சென்னையில் ராமதாசும், காஞ்சிபுரத்தில் அன்புமணியும், அரியலூரில் குருவும் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, தனி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் 1987-ல் நடந்த போராட்டத்தைவிட கடுமையான மறியல் போராட்டம் நடக் கும்னு பேசினாங்க. வழக்கம்போல் அதிகமா கொந்தளித்த குரு, குஜ்ஜார் இனமக்களைப் போல தண்டவாளங் களை தகர்ப்போம். ரயில், பஸ்களை ஓட விடமாட்டோம்னு பேசியதை மாநில உளவுத்துறையினர் கவனமா குறிப்பெடுத் துக்கிட்டாங்க.''

""போராட்டம் னதும் ஆகஸ்ட் 4-ந் தேதி ஜெ.வுக்கு எதிரா தி.மு.க. இளைஞரணி மாநிலம் தழுவிய அள வில் நடத்தப்போற போராட்டம் ஞாபகத் துக்கு வருதுப்பா...''





""தலைவரே... மு.க.ஸ்டாலின் அறிவித்த போராட்டம் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருக்குன்னும் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க ணும்னும் ஹைகோர்ட்டில் கேஸ் போட அ.தி.மு.க வழக்கறிஞர் அணி ஒரு டிராஃப்ட் ரெடி பண்ணி, அதை ஜெ.வின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்காங்க. அரசாங்கத்தின் அங்கமாக துணை முதல்வர் பொறுப்பில் இருப்பவரே , நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு வழக்கை எதிர்கொள்ளும் ஒருவருக்கு எதிராக எப்படி போராடலாம்ங்கிறது தான் அ.தி.மு.க தரப்பு வாதம். ஸ்டா லினோ, ஜெ. ஸ்டேட்மெண்ட் பற்றி யெல்லாம் கவலைப்படமாட்டோம்னும், திட்டமிட்டபடி போராட்டம் நடத்துவோம்னும் பத்திரிகையாளர் கள்கிட்டே சொல்லியிருக்கிறார். போராட்டத்துக்கு கோர்ட் ஸ்டே கொடுக்காதுன்னு ஸ்டாலின்கிட்டே தி.மு.க. வழக்கறிஞர்கள் நம்பிக்கையா சொல்லியி ருக்காங்களாம்.''

""ம்...''

""கோவையில் 100 கோடி ரூபாயில் கட்டப் படும் புதிய மேம் பாலத்திற்கு அருகில் தீரன் சின்ன மலை சிலையை வைக்கணும்னு ஸ்டாலினிடம் கொங்கு முன்னேற்றக்கழக நிர்வாகி கள் கோரிக்கை வைத்திருக்காங்க. ஆகஸ்ட் 2ந் தேதி கோவையில் டை டல் பார்க் திறக்க வருகை தரும் கலைஞரிடமும் இதை வலியுறுத்தப் போறாங்களாம். கோவையில் ஜெ கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கூட்டத்தை மீடியாக்கள் பிரம்மாண்டப் படுத்தியதால, கலைஞர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு அதைவிட அதிக கூட்டம் கூடும்னு சொல்லும் கட்சிக்காரர்கள் அதற் கான ஏற்பாடுகளில் இறங்க, கோவை பொதுமக்களும் கலைஞர் வருகையை ஆவலோடு எதிர்பார்த் திருக்காங்க.''

""திருவாரூர், தஞ்சாவூரில் கலைஞர் கலந்துகொண்ட கூட்டங்களிலும் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தாங் களே?''

""ஆமாங்க தலைவரே... திருவா ரூரில் அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்த முதல்வர், சொந்த மண்ணில் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தார். மாணவ-மாணவிகள் திரண்டு வந்திருந்ததில் அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. தஞ்சாவூரில் கலைஞர் அறிவாலயத்தை திறந்துவைத்து திலகர் திடலில் அவர் பேசும் போதும் செம கூட்டம். அந்த மேடையில் காரசாரமா பொளந்து கட்டியவர் மந்திரி பொன்முடிதான். கலைஞரை விமர்சித்து ஜெ. வெளி யிட்டிருந்த அறிக்கைக்கு சுடச்சுட பதில் கொடுத்த பொன்முடி, கள்ள ரயில் ஏறி சென்னை வந்தார்னு கலை ஞர் பற்றி சொல்கிறார் ஜெ. நாகரிக மாகப் பேசினால் நாகரிகமாகப் பதில் சொல்லமுடியும். இவருக்கு வெற்றி கொண்டான் பாணியில்தான் பதில் சொல்லணும்.பெங்களூரிலிருந்து தகர டப்பா, கிழிந்த பாயோடு வந்தவர்தானே இவர். ஒரு ரூபாய்க்கு அரிசி போட வக்கில்லாத ஜெ.வே நாக்கை அடக்கிப் பேசு. நகைகள் ஏது என்று கேட்டால் மைசூர் மகாராஜா எங்கம்மாவுக்கு தந்தது என்கிறார். அப்படின்னா மைசூர் மகாராஜா உனக்கு மாமனா, மச்சானா, சித்தப்பனான்னு போட்டுத்தாக்கினார்.''

""அவர் தாக்கியது இருக்கட்டும். துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான ஸ்டாலின் நீ சொன்ன தகவல் தப்புன்னு பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்காரே. அதற்கு என்ன சொல்றே?''

""ஸாரிங்க தலைவரே... மு.க. அழகிரி மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி மாநில அரசியலில் ஈடுபடப் போகிறார்னு சொல்லியிருந்தேன். அப்படி எதுவுமில்லைன்னு ஸ்டாலினே சொல்லும்போது அதுதானே உண்மையாக இருக்கும்.''

""சரி... சரி... என்னோட தகவலைச் சொல்றேன்... செப்டம்பருடன் கவர்னர் பர்னாலாவின் பதவிக்காலம் முடி வடையுது. அவருக்கு எக்ஸ்டென்ஷன் இல்லைன்னு மத்திய அரசு முடிவெடுத்து விட்டதால் அடுத்த கவர்னர் பற்றிய பேச்சுகள் கிளம்ப, ரிடையர்டு தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லாதான் கவர்னர்னு யாரோ கொளுத்திப்போட்டிருக்காங்க. ப.சிகிட்ட சிலர் இதைப்பற்றி கேட்க, சாவ்லாதான் கவர்னர்னா அதற்குப்பதில் மதுசூதனனையே நியமிச்சிடலாமேன்னு சாவ்லாவின் அ.தி.மு.க விசுவாசத்தை மறைமுகமா குறிப்பிட்டு கமெண்ட் அடித்தாராம். ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங், மக்களவை முன்னாள் சபாநாயகர் பல்ராம்ஜாக்கர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதில் பல்ராம் ஜாக்கர் தான் சரியான சாய்ஸ்னு முடிவாகி யிருக்குதாம்''

No comments:

Post a Comment