Thursday, August 5, 2010

இப்படியும் ஒரு அப்பா-மகன்!

அந்த விலங்கியல் ஆசிரியரின் வில்லங்கத்தை நினைத்தாலே பதறுகிறது மனம்.

குமரி மாவட்டத்தில் ஒரு கிழமையின் பெயரில் இருக்கும் ஊர் அது. அங்குள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில்தான்... தன் பெயரில் ’தோணி’யை வைத்திருக்கும் அந்த விலங்குமனம் கொண்ட ஆசிரியர் வேலைபார்க்கிறார். தான் வகுப்பெடுக்கும் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 வகுப்புகளில் வசதியான குடும்பத்து மாணவி யாராவது படித்தால் போதும் அக்கறை காட்டும் சாக்கில்... தன் ரூபமான மகனை அவர் களுக்கு அறிமுகப்படுத்துவார். எப்படி?

""ஏம்மா செல்லம். நிறைய மார்க் வாங்கி உங்க அப்பா-அம்மா மனசை நீ குளிரவைக்கணும். உனக்கு பிராக்டிகலில் மார்க்கை அள்ளிப்போட நான் இருக்கேன். என் பையனை அறிமுகப்படுத்தறேன். எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து அவங்கிட்ட டியூசன் படிச்சிக்க. அபாரமா பாடம் சொல்லித் தருவான். அப்புறம் பாரு. செண்டம் மார்க்குதான் உனக்கு’’ என்பார் உரிமையாய் முதுகில் தட்டி.

அவரின் மகனோ ஒரு ப்ளேபாய். அம்மாக் காரர் வேறு ஊரில் ஆசிரியையாக இருப்பதால் பகல் முழுக்க வீடு ப்ரீயாகத்தான் இருக்கும். பிறகென்ன.. ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பார்த்து வீட்டுக்கு அழைத்துப்போய்... செல்லச்செல்ல சீண்டல்கள் விளையாட்டுக்கள் மூலம் அந்த மாணவியின் உணர்வைத் தூண்டி... தன் ஆசையைத் தணித்துக்கொள்வான். காதல்போதையை அந்த மாணவிக்கு ஏற்றி.. அடிக்கடி பணத்தையும் வீட்டில் இருக்கும் நகையையும் கொண்டுவரச் செய்வான். பணமும் நகையும் அப்பாக்காரருக்கு. மாணவியின் தேகம் இவனுக்கு. அப்பாக்காரர், அடுத்த மாணவியை அறிமுகப்படுத்தியதும்... முதல் மாணவியைக் கழற்றிவிட்டு விடுவான். ஏமாந்த மாணவி பிரச்சினை செய்தால்... "பெயில் போட்டுவிடுவேன்' என அப்பாக்கார ஆசிரியர் அவளை மிரட்டி ஆஃப் செய்துவிடுவார்.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக... நகை நட்டுக்காகவும் பணத்துக்காகவும் தனது மாணவி களை தன் மகனுக்கே தாரைவார்த்து வருகிறாராம் அந்த மீசைக்கார ஆசிரியர். "இவருக்கு... நேசராக இருக்கும் வேதிவினை ஆசிரியர் உடந்தையான உடந்தை' என்கிறார்கள் பலரும்.

கடந்த ஆண்டு பாதிக்கப் பட்ட அந்த மாணவியைச் சந்தித்தோம். விழி ஈரத்தோடு பேச ஆரம்பித்த அவள்...

""ஸுவாலஜி சார்... அடிக்கடி எங்க வீட்டுக்கு போன் பண்ணி.. உங்க பொண்ணு வீட்டில் எப்படி படிக்குதுன்னு விசாரிப் பார். அதனால எங்க வீட்டில் இருக்கும் அத்தனைபேருக்கும் அவர்மேல் மரியாதை. அந்த நம் பிக்கையில்தான் அவர் சொன்னபடி அவர் பையனுடன் பழக ஆரம்பிச்சேன். அவங்க வீட்டுக்குப்போக நான் தயங்கினப்ப... அவன் உனக்கு ஃபிரண்டுதாம்மா. ஏன் தயங்கறேன்னு வாத்தியார் சொல்வார். இப்படிப்போய்... அவர் மகன்கிட்ட மாட்டிக்கிட்டேன். அவனது உளறலைக் காதல்னு நம்பி ஏமாந்தேன். அவன் என்னிடம் எல்லா அசிங்கமும் பண்ணினான். நிறைய பணம்காசைக் கொடுத்திருக்கேன். அதோட ரெண்டு மோதிரம், ஒரு நெக்லஸ்னு நகைகளையும் வாங்கிக்கிட்டான்.

பிறகுதான் இது அவனும் அவன் அப்பாவும் சேர்ந்து நடத்தும் மோசடித்தனம்னு புரிஞ்சிது. அவன் கூட பழகி ஏமாந்ததை இப்ப நெனைச்சாலும் உயிரே போறமாதிரி இருக்கு. இதை யார்கிட்ட சொல்லமுடியும்? இந்த மோசக்கார வாத்தியாரைப் பத்தியும் அவர் மகனைப் பத்தியும் எல்லோருக்கும் நீங்க வெளிச்சம்போட்டுக் காட்டணும். அப்பதான் அவங்க வலையில் விழாம மற்ற மாணவி களாவது தப்பிப்பாங்க''’என்றாள் வேதனைக் குரலில்.

புனிதமான ஆசிரியர் தொழிலில் இப்படியும் ஒரு களங்கமான மனிதரா? ச்சே!

No comments:

Post a Comment