Saturday, September 4, 2010

காவி தீவிரவாதம்! எள்ளு தெளித்த இந்து முன்னணி!


உள்துறை அமைச்சர் ப.சிதம் பரத்தின் வார்த்தைச் சேர்க்கை எதிர்க் கட்சி-சொந்தக் கட்சி என பல தரப்பிலும் எதிர்ப்புக் கொடியை உயரவைத்திருக்கிறது. டெல்லியில் நடந்த போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பேசும் போது, "காவி தீவிரவாதம் குறித்து எச்சரிக் கையுடன் இருக்கவேண்டும்' என்றார் ப.சி. அவரது இந்த வார்த்தைச் சேர்ப்பு, நாடாளு மன்றத்தில் பா.ஜ.க.வை கொந்தளிக்க வைத்தது. சுஷ்மா ஸ்வராஜில் தொடங்கி பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். அதன் தொ டர்ச்சியாக இந்துத்வா அமைப்புகள் ப.சி.க்கு எதிராக கொடிபிடித்தன.

டெல்லியிலிருந்து 1-ந் தேதி இரவு ப.சி. சென்னை திரும்புகிறார் என்பதை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் 50 பேர், அதன் மாநில நிர்வாகி இளங்கோவன் தலைமையில் நுங்கம் பாக்கத்தில் உள்ள ப.சி வீட்டின் முன் மாலையி லேயே திரண்டு கருப்புத்துணியுடன் முற்றுகை போராட்டத்திற்குத் தயாராயினர். அதற்கு போலீஸ் அனுமதிக்கவில்லை. உடனே, இந்து முன்னணி யினர் சிலர் எள்ளு தெளித்து, இறந்தவர் களுக்கு செய்யும் சடங்கு களை ப.சி. வீட்டருகே செய்ய ஆரம்பித்து விட்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ஏ.சி. ஜாபர் அலி, அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இரவு 7.30 மணிக்கு சென்னையில் தரையிறங்கத் திட்டமிட்டிருந்த ப.சிக்கு, இந்த விஷயம் தெரிவிக்கப் பட, கைது செய்தவர்களை விடுதலை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்ள, அதன்படி இ.மு.வினர் விடுவிக்கப்பட்டனர். அதன் பின் 8 மணிக்கு டெல்லி யிலிருந்து ஃப்ளைட்டில் புறப்பட்டு சென்னை வந் தார் ப.சி. இதனிடையே, ப.சியின் காவி தீவிரவாதம் என்ற கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. கட்சியின் பொதுச் செய லாளர்களான ஜனார்த்தன திவிவேதியும் திக்விஜய்சிங்கும், ''ஒரு மதத்தினர் புனித மாகக் கருதும் நிறத்தின் பெயரால் தீவிரவாதத்தைக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது. சாதி, மதம், நிறம் இவற்றை தொடர்புபடுத்துவதை எதிர்க்கிறேன்'' என பேட்டியளித்தார்கள்.

ப.சி.யோ, ""சமீபத்தில் நடந்த சில குண்டுவெடிப்புகளில் மதவாதிகளுக்கு இருந்த தொடர்பைக் குறிப்பிட்டுத்தான் அப்படிச் சொன்னேன். என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது. காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை 2001-லேயே நாடாளுமன்றத்தில் பலரும் பயன்படுத்தியுள்ளனர்.

எங்கள் கூட்டணிக் கட்சியினரும் இது பற்றி பேசியிருக்கிறார்கள். என் கருத்து பற்றி கட்சித்தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி முடிவு. மற்றவர்கள் கருத்து சொல்ல அதிகாரம் இல்லை'' என உறுதியாகச் சொல்லி விட்டார்.

காவி தீவிரவாதம் என்ற கருத்தில் ப.சி உறுதியாக இருப்பதால், அவருக்கும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பும் வலுவாக இருக்கிறது.

No comments:

Post a Comment