Saturday, September 11, 2010

மாதவனுடன் காதலா?-சதா டென்ஷன்!


கிட்டத்தட்ட பீல்ட் அவுட் என்ற நிலை வரும்போது நடிகர் நடிகை கள் கையாளும் ஆயுதம் காதல் அல்லது வேறு ஏதாவது ஒரு பரபரப்பு கிசுகிசு.

இந்த முறை அந்த ஆயுதம் சதாவுக்கும் தேவைப்பட்டுள்ளது.

ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே என பல படங்களில் நடித்துள்ளார். 'எதிரி' படத்தில் மாதவனும் சதாவும் ஜோடியாக நடித்தனர். இப்படம் 7 வருடங்களுக்கு முன்பு ரிலீசானது. அதைத் தொடர்ந்து ப்ரிய சகி படத்தில் நடித்தனர். பின்னர் வேறு இரு படங்களில் நடித்துள்ளனர். அவை இன்னும் வெளிவரவில்லை.

இப்போது அவர் கைவசம் புலிவேசம் என்ற ஒரேயொரு படம்தான் உள்ளது.

இந்த நிலையில், மாதவனுடன் அவருக்கு திடீர் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் விருந்து நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்பதாகவும் பரபரப்பு கிளப்பப்பட்டது. மாதவன் ஏற்கனவே சரிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி சதா கூறுகையில், "மாதவனுடன் நீண்ட நாட்களாக எனக்கு தொடர்பு இல்லை. அவரை சந்தித்து பேசவும் இல்லை. அவரை காதலிப்பதாக வந்த செய்திகள் வதந்திதான். நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது கூடவே எனது தாய்தான் வருவார். அவரை விட்டு தனியாக யாரிடமும் நான் பேசுவது கிடையாது..." என்றார்.

மாதவனும் நீங்களும் பெங்களூர் ஓட்டலில் சந்தித்து பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதே என்று ஒரு நிருபர் கேட்ட போது, "அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று கூறி நழுவி விட்டார்.

சரி இந்தப் பரபரப்பால் யாருக்கு நன்மை என்கிறீர்களா?

இருவருக்கும்தான்... காரணம், சதாவின் நிலைதான் இங்கே மாதவனுக்கும்!

No comments:

Post a Comment