Tuesday, September 21, 2010

நக்கீரன் செய்தி! புலவர் குடும்பத்துக்கு முதல்வர் தந்த 10 லட்சம்!


நக்கீரன் செய்தியின் எதிரொலியாக... வறுமையில் வாடிய மேலப்பெருமழை சோமசுந்தரப் புலவரின் வாரிசுகளுக்கு 10 லட்சரூபாய் நிதி உதவிக்கான அரசாணையை தந்தை பெரியாரின் 132-வது பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி பிறப்பித்து... தமிழ் உணர்வாளர்களின் மனதைக் குளிரவைத்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.

சங்க இலக்கிய நூல்களுக்கு உரைகள் எழுதி.. அவற்றைத் தமிழ் சமூகம் எளிதில் படிக்க வழிவகுத்த உரையாசிரியர் சோமசுந்தரப் புலவர்... தன் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் எண் ணம்கூட இல்லாமல்... தன்னை மறந்து தமிழ்ப்பணி ஆற்றியதையும்... தற்போது அவரது வாரிசுகள்.... அர சின் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் வயிற்றைக் கழுவிவந்த சோகத்தையும்... "வறுமையில் மேலப்பெரு மழை சோமசுந்தரப்புலவரின் வாரிசுகள்'’ என்ற தலைப் பில் ஒரு செய்திக் கட்டுரையைத் தந்திருந்தோம்.

இந்தக் கட்டுரையின் எதிரொலியாக தமிழார் வலர்கள்... கடந்த 5-ந்தேதி மேலப்பெருமழையில் கூடி... அவரது நூற்றாண்டு விழாவைக் கொண் டாடி மகிழ்ந்ததோடு... புலவர் குடும்ப நிலவரத் தைத் தெரியப்படுத்திய நக்கீரனுக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ந்தனர். விழாவுக்குத் தலைமை தாங்கிய புலவரின் பழைய நண்பர் ரெங்கசாமி ""நக்கீரனின் செய்திக்குப் பிறகே.. அனைவரின் கவனமும் புலவரின் பக்கம் திரும்பியிருக்கிறது'' என்று உணர்ச்சி வயப்பட்டார். புதுவை பேராசிரி யர் முனைவர் இளங்கோவனோ “என் தமிழறிவை வளர்த்தது புலவரின் புலமை. அவர் வாரிசுகள் வறுமையில் வாடியதை நக்கீரன் மூலம் அறிந்து திடுக்கிட்டேன். செய்தியைப் படித்ததுமே புலவர் குடும்பத் தைச் சந்தித்தேன். அவரது நூற்றாண்டுவிழாவை வருடம் முழுக்க நடத்துவோம்''’என்று முழக்கமிட்டார்.





இந்த நிலையில்தான் புலவரின் குடும்பத்துக்கு நிதி உதவி யை அறிவித்து... அனைவரின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பை யும் நிறைவேற்றியிருக்கிறார் கலைஞர். மேலப்பெருமழை கிரா மத்துக்குச் சென்றோம். ஊர்மக்கள் உற்சாகத்தில் இருந்தனர். செல்போனில் பேசியபடியே எதிர்ப்பட்ட அ.தி.மு.க. மாஜி ஊராட்சிமன்ற தலைவர் ராஜமாணிக்கம்.. நம்மைக் கண்டதும் ‘""வாங்க நக்கீரன் தம்பீ... புலவர் குடும்பத்துக்கு உதவிசெய்த முதல்வர் கலைஞருக்கும்... முயற்சியெடுத்த நக்கீரனுக்கும் நன்றி. புலவர் குடும்பத்துக்கு கலைஞர் உதவிசெய்யும் செய்தியைத் தான் என் நண்பர்களுக்கெல்லாம் போன்ல சொல்லிக்கிட்டு இருக்கேன். எங்க ஊர் ஜனங்க சார்பில் கலைஞருக்கு பாராட் டுக் கூட்டம் நடத்தப்போறோம்'' என்றார் ஏக உற்சாகமாய்.
""கலைஞருக்கு விழா எடுத்தா உங்க கட்சித் தலைமை உங்க மீது நடவடிக்கை எடுக்காதா?'' என்றோம். அ.தி.மு.க. ராஜ மாணிக்கமோ ""நல்ல காரியத்தை செய்யும்போது... மத்த விவ காரங்களை யோசிக்கக்கூடாது. முதல்வரின் தாயுள்ளத்தைப் பாராட்டாட்டி நான் மனுசனே இல்லை'' என்றார் உணர்சிப் பூர்வமாய். புலவரின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. புலவரின் இளையமகன் மாரிமுத்து வயல்வேலைக்குச் சென்றிருக்க... சாதிச்சான்றிதழ் வாங்க திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் போயிருந்தார் மூத்த மகன் பசுபதி. மதியம் 3 மணிக்கு உற்சாகமாக வந்த பசுபதி... ""தம்பீ... தாசில் தார் அலுவலகத்தில் இருந்த ஒரு ஆர்.ஐ.தான் விசயத்தைச் சொன்னார். சந்தோசத்தில் அழுகை வந்துடுச்சி. உடனே நேத்தைய கூலிக்காசில் சாக்லெட் வாங்கி... அங்க எல்லாருக்கும் கொடுத்தேன். இந்தாங்க நீங்களும் எடுத்துக்கங்க. கலைஞரின் உதவியையும்... அவர் கவனத்துக்கு எங்க நிலைமையை கொண்டு போன நக்கீரனையும் எந்தக் காலத்திலும் மறக்கமாட்டோம். புலவரின் மகன்களான நாங்களும் எங்க பிள்ளைகளும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கலை. அதனால் கலைஞரின் உதவிப்பணத்தை வைச்சி எங்க பேரன் பேத்திகளை நல்லா படிக்கவைப்போம்'' என்றார் நெகிழ்ச்சியாய். அடுத்த கொஞ்ச நேரத்தில் வயலிலிருந்து வந்த இளையமகன் மாரிமுத்துவும் நெகிழ்ச்சியோடு நமக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த வீடு முழுக்க குதூகலம் பொங்கியது. பிள்ளைகள்.. சாக்லெட்டு களை அக்கம்பக்கம் குழந்தைகளுக்குக் கொடுத்துக் குதூகலித்தனர். அந்த இருண்ட வீட்டிற்குள் சந்தோச வெளிச் சம் நுழையத் தொடங்கியதைப் பார்த்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து மனநிறைவோடு கிளம்பினோம்

No comments:

Post a Comment