Wednesday, September 22, 2010

பாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்!


"மாலையில் யாரோ மனதோடு பேச...' என்று ஒலித்த அந்தக் குரல் இனி நேரில் பேசவோ பாடவோ போவதில்லை. நுரையீரல் பாதிப்பினால் 37 வயது பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணமடைந்ததால் திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் ஏற்பட்ட அதிர்ச்சி இன் னும் முழுமையாக விலகவில்லை. அவ ருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி வருகிறது.

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவின் பெருமைகள் பற்றி சொல்லும் "படத்தொகுப்பாளரும் கதாசிரியருமான சுபாஷ்' ""புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்' படத்தை தமிழில் டப் செய்து "அனார்கலி' என்ற பெயரில் தயாரானது. செங்கம் ஜபார்தான் இதற்கானப் பணிகளை செய்தார். இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். லதாமங்கேஷ்கர் பாடிய பகுதியை தமிழில் பாடுவதற்கு சொர்ணலதாவை தேர்வு செய்தார் இசைச் சேர்ப்பு பணி மேற்கொண்ட சங்கர்கணேஷ். ஷம்ஷாத்பேகம் குரலில் யாரை பாடவைப்பது என்று ஆலோசித்தபோது, அந்தப் பாடலைக் கேட்ட சொர்ணலதா, அந்தக் குரலிலும் தானே பாடுவதாகச் சொன்னார். போட்டிப்பாடலில் இரண்டு வெவ்வேறு குரல்களில் இரு பெரும் பாடகிகள் இந்தியில் பாடியிருந்ததை, தமிழில் சொர்ணலதா மட்டுமே பாடி அசத்தியிருந்தார். இதை அப்போது நவ்ஷாத்திடம் போட்டுக் காட்டினோம். சொர்ணலதாவின் அபார திறமை கண்டு பாராட்டினார் அந்த இசை மேதை. அத்துடன், நாங்கள் வாங்கிச் சென்ற மோதிரத்தையும் சொர்ண லதாவுக்கு விருதுபோல வழங்கினார். "தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது' என்று எப்போதும் சொல்வார் சொர்ணலதா'' என்றார்.





அவரால் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ண லதாவின் பெற்றோருக்கு 10 பிள்ளை கள். 4 பெண்கள், 6 ஆண்கள். ஒன்பதாவது குழந்தைதான் சொர்ண லதா. அவருக்கு இரண்டு அக்கா, 6 அண்ணன், 1 தங்கை. இத்தனை பேர் இருந்தாலும், குடும்பத்தில் வரு மானம் ஈட்டக்கூடிய நபர் சொர்ண லதாதான். அக்காக்களுக்கு திரு மணமாகி அவரவர் கணவருடன் தனியாகச் சென்றுவிட்டார்கள். அண்ணன்களுக்கோ தங்கை சொர்ணலதாவின் வருமானத்தில் தான் வாழ்க்கை.

ரெகார்டிங் என்றால் இரண்டு அண்ணன்கள் எஸ்கார்டு போல கூடவே வருவார்கள். பாட்டு சீன் என்ன என்று மியூசிக் டைரக்டர் விளக்கிச் சொல்வதற்குக்கூட சங்கடமாக இருக்கும். அந்தளவுக்கு பின்தொடர்ந்து கொண்டிருப்பார்கள். யாருடனும் சொர்ணலதா பழகிவிடக் கூடாது. அவருக்கு கல்யாண எண்ணம் வந்துவிடக்கூடாது என்ப தற்காகத்தான் இந்தளவுக்கு கண் காணிப்பு. சில மியூசிக் டைரக்டர்கள் கோபப்பட்டு, அண்ணன்களை விரட் டிய சம்பவமும் உண்டு. சொர்ணலதா அதிகளவில் பாட முடியாமல் போன தற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அண்மைக்காலமாக சொர்ணலதாவை மேடைகளில் கூட பாடவிடவில்லை. அடிக்கடி சொந்த மாநிலமான கேரளாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அங்கு டி.வி. நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக உட்கார வைத்து இவர்கள் செட்டுக்கு வெளியே நின்று கண்காணித்து வந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளில் நல்ல வருமானம் என்கிற அவரது நெருங்கிய வட்டாரத்தினர் மேலும் சில தகவல்களையும் சொல்கிறார்கள்.

குடும்பச் சுமை முழுவதையும் சுமந்து கொண்டு, தனது விருப் பங்களை வெளிப்படுத் தக்கூட முடியாமல் நெருக்கடியில் இருந்த சொர்ணலதா பயங்கர மனஅழுத்தத்தில்தான் இருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டி ருந்ததாக இப்போது சொல்கிறார்கள். சைனஸ், ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா போன்ற நுரையீரல் சம் பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் இத்தனை சிறப்பான பின்னணி பாடகியாக அவர் வந்தி ருக்க முடியாது. அவர் இறப்பதற்கு இரண்டு நாள் முன்னாடிகூட, ஒரு திரைப்பட விழா தொடர்பான அழைப்பிதழை நேரில் கொடுக்க அவர் வீட்டுக்குச் சென்றவர்களிடம், சொர்ணலதா ஊரில் இல்லையென்றும் வருவதற்கு ஒரு மாதமாகும் என்றும் அண்ணன்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இரண்டு நாள்கழித்து நுரையீரல் பாதிப்பால் சென்னை மலர் மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக செய்தி வருகிறது.

""சொர்ணலதாவின் வீடு இருப்பது சாலிகிராமத்தில். விஜயா, சூர்யா போன்ற ஆஸ்பிட்டல்கள் பக்கத்திலேயே இருக்கின்றன. ஆனால், எதற்காக அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்? அந்த மருத்துவமனை ஒன்றும் நுரையீரல் நோய்க்கு ஸ்பெஷாலிட்டி இல்லையே! பாடிப் பறந்த அந்தக் குயிலின் இதய கீதம் ரொம்பவும் சோகமானது. மன அழுத்தமே இதயத்தை நொறுக்கியதா, தற்கொலைக்குத் தூண்டியதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அவரது குரலைப் போலவே உண்மைகளும் ஒரு நாள் உரக்க வெளிப்படும் என்று நினைக்கிறோம்'' என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

No comments:

Post a Comment