Thursday, September 9, 2010

""நிறை வாழ்வு வாழ்க!''


இளையமகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பித ழோடும், அகம் காட்டும் கொள்ளைச் சிரிப்போடும், ஆகஸ்ட் 27 வெள்ளி அன்று நக்கீரன் அலுவல கத்திற்கு வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சூப்பர் ஸ்டாரை, நமது ஆசிரியரும், நக்கீரன் மேலாண் இயக்குநர் குருசாமியும் வாசலில் நின்று வரவேற்று, 3/4 மணி நேரம் பிரிண்டிங், பைண்டிங், கம்ப்யூட்டர், விநியோகம், நிர்வாகம், செய்திப் பிரிவு மற்றும் ஓம் சரவணபவ, இனிய உதயம், சினிக்கூத்து, பொதுஅறிவு உலகம், பாலஜோதிடம் என அனைத்துப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று, நக்கீரன் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தி னார்கள். ""ரஜினி ரசிகன் வந்தபோது பார்த்தேன். இப்போது வயதாகி விட்டதோ...'' என ஒவ்வொரு வரையும் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார், நக்கீரன் இணையாசிரியர் காமராஜை சந்தித்து உரையாடினார். நிறைவாக, ஆசிரியர் அறைக்கு வந்ததும், தாம்பூல மரவையில் அழைப்பிதழை வைத்து, ஆசிரியரிடம் தந்து ""இது உங்க வீட்டுக் கல்யா ணம் கட்டாயம் வரணும்...!'' மிகுந்த உரிமையோடு அழைத்தார்.

3.9.10 வெள்ளி காலை 5 மணிக்கே சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை மண்டபத்திற்கு இருவீட்டாரும் வந்துவிட்டனர். 6 மணிக்கு ஹோமம் தொடங்கியது. நமது ஆசிரியர் உட்பட, மணவிழாக் காண வந்த அத்தனைபேரையும் முகப்பில் நின்று கரம் கூப்பி வரவேற்று, அழைத்துச் சென்று இருக்கைகளில் அமர வைத்துக்கொண்டிருந்த ரஜினி, 7.30-க்கு மராட்டியத் தலைப்பாகையுடன் மணவிழா மேடையேறினார். பாதபூசை சடங்குகள் நடந்தன. 8 மணிக்கு தந்தை ரஜினியின் மடியில் மகள் சௌந்தர்யா அமர, கெட்டி மேளம் முழங்கியது. மணமகன் அஸ்வின் மணமகள் சௌந்தர்யாவிற்கு திருப்பூட்டினார். மணமக்களை அழைத்து வந்து நமது ஆசிரியர் உட்பட தமிழக வி.ஐ.பி.க்கள் அனைவரிடமும் வாழ்த்து பெற வைத்தார் ரஜினி.

""நிறைவாழ்வு வாழ்க!'' என வாழ்த்தினார் ஆசிரியர்.

No comments:

Post a Comment