Saturday, September 18, 2010

""அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்!'' - வைகோ!



""ஒரு சிறிய அமைப்பை நடத்துவதற்கு நாங்கள் எத்தனை கஷ்டப்படுகிறோம்?''

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவை திறந்தவெளி ம.தி.மு.க. மாநாடாக காஞ்சிபுரத்தில் நடத்திய வைகோ வெளிப்படையாகவே வேதனையைக் கொட்டிவிட்டார். ""அண்ணா பிறந்த மண்ணில் சத்திய வார்த்தை மட்டுமே பேசுவேன். என் பின்னால் வந்தால் துன்பங்களையும், துயரங்களையும் தாங்க வேண்டியிருக்கும். எதுவும் கிடைக்காது'' என குமுறிவிட்டார்.

வைகோவின் இந்த வேதனை பின்னணியை ஆய்ந்தறிந்து நம்மிடம் பேசினார் அக்கட்சியின் சீனியர் ஒருவர்-

""ம.தி.மு.க. ஆரம்பிச்சப்ப இவரை நம்பி நெறயப் பேரு வந்தாங்க. அப்ப இருந்த மொழிப் போர் தியாகி அண்ணன் எல்.ஜி.இப்ப இந்த மேடைல இல்ல. தொண்டர்களோடு தொண்டராக வாழும் செஞ்சியார் மேடையில இல்ல. மிசா காலத்துலயும் அத்தனை நெஞ்சுரத்துடன் இருந்த கண்ணப்பனும் இல்ல. கலைஞரோ, நாவலரோ, எம்.ஜி.ஆரோ, எஸ்.எஸ்.ஆரோ அத்தனை பேரையும் அனுசரிச்சு கட்சி நடத்திய அண்ணா எங்கே? அத்தனை சீனியர்களையும் கொத் தாக விரட்டி விட்டு தனக்கு "ஆமாம்' போடறவங்கள மட்டுமே கட்சில வச்சி ருக்குற வைகோ எங்கே? பல மாவட் டங்கள்ல கட்சியே கரைஞ்சு ஒண்ணுமில் லாமப் போச்சு. இந்த மாநாடு எதுக்கு? அங்கீ காரத்தையும் இழந்து நிற்கிற ம.தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. தலைமை எத்தனை சீட்டு கொடுக்குமோங்குற பரிதவிப்பு. என் பின் னாலயும் ஒரு கூட்டம் இருக்குன்னு காட்டு னாத்தான் அங்க மரியாதை. இன்னொரு கட்சித் தலைவிய திருப்திப் படுத்த மாநாடு நடத்துற ஒரே தலைவன் எங்க வைகோதான். பிறகு, மனு ஷன் புலம்பத்தானே செய் வாரு...'' என்றார் நிதர் சனத்தை.

"வாழும் அண்ணா' என வைகோவை சித்தரிக்க மெனக்கெட்ட அந்த மாநாட்டு மேடையில் கலைஞரையும், அவரது குடும்பத்தையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் கட்டுப்பாடே இல்லாமல் திட்டித் தீர்த்தார்கள். அமர ராகிவிட்ட முரசொலி மாறனையும் கூட வசை பாடத் தவறவில்லை. கண் ணியம் இழந்த இந்த பேச்சு களை ஜெ. ஸ்டைலில் ரசித்துச் சிரித்தார் வைகோ. ""அண்ணாவுக்குப் பின் வைகோதான்'' என சந்தடி சாக்கில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வைகோவை மல்லை சத்யா முன்னிறுத்திப் பேசியபோது முகத்தில் இறுக்கம் காட்டினார் ஜெ. தூதராக வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ""அரசியல் அதிகாரத்தைக் கைப் பற்றும் இடத்துக்கு ஒருநாள் ம.தி.மு.க. வரும்'' என்று முதலமைச்சர் நாற்காலியை வைகோவும் குறிவைத்துப் பேசிய போது ரொம்பவே நெளிந்தார் ஜெயக்குமார்.


அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வது, மாநில சுய ஆட்சியை வலியுறுத்துவது, ராஜ பக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தமிழீழத்தை வென்றெடுப்பது என மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது இம் மாநாடு.

வைகோ ராசியோ என்னவோ, அவர் மைக் பிடித்த போது வானமே அதிர வெடி போட்டு அவரை டென்ஷன் ஆக்கி னார்கள். "பேச்சைத் தொடங்கும்போதே தடங்கலா?' என வைகோ முகத்தில் எள்ளும் கொள் ளும் வெடிக்க... பதறி னார்கள் மேடையிலிருந்தவர்கள். அந்தக் கோபத்துடனே பேச எழுந்தவர், வழக்கம் போல யுவான் சுவாங்கிலிருந்து ஆரம்பித்து, ""கொடும்பழி சுமத்தப்பட்டு தி.மு.க.விலிருந்து தூக்கி எறியப்பட்டேன்...'' என்ற பழைய பல்லவியையே பாடி, ""எனக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என்று கலைஞரே என்னிடத்தில் சொன் னார்'' என புதிய தகவல் ஒன்றை எடுத்துவிட்டு, ""நாள்தோறும் நான் தவறாமல் படிப்பேன் முரசொலி. அதில் "அறியாமையில் அரற்றுகிறார் அம்மையார்' என ஜெயலலிதாவை விமர்சித்து கலைஞர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். 100 வயது வரை கலைஞர் நலமுடன் வாழவேண்டும்'' என தன்னையுமறியாமல் வாழ்த்திவிட்டு, ""கலைஞ ருக்கு கொள்கைக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்காக நான் பரிதாபப்படுகிறேன்'' என்று வாய் கொள்ளாச் சிரிப்பு ஒன்றை உதிர்க்க... "ஒரு மணி நேரம் கடந்தும் இத்தனை இழுவையாகப் பேசிக் கொண்டேயிருக்கிறாரே...' என கூட்டம் கலைய... ""நான் பேச்சை முடிக்கப் போவதில்லை. இப்போது தான் பேசவே ஆரம்பித்திருக்கிறேன். இனிமேல் தான் பேசவே போகிறேன்...'' என்று மோடி மஸ்தான் பாணியில் "இடையில் யாரும் எழுந்து செல்லக்கூடாது' என கண்டிப்புடன் எச்சரித்தார்.

தலைவரின் கோபமறிந்து, எழுந்த கூட்டத்தை நோக்கி பிரம்பை நீட்டி ஆங்காங்கே அமர வைத் தது ம.தி.மு.க. தொண்டரணி. சொன்னது போலவே உற்சாகத் துள்ளலுடன் மீண்டும் பேச ஆரம்பித்தார் வைகோ. ""யாரைப் பார்த்தாலும் பேசாமல் விட மாட்டேன். இது என்னோட குணம். ஸ்டண்ட் பார்ட்டிக இத்தனை பேரு எம்.ஜி.ஆருக்கு பக்கத்துல இருந்தும் எப்படிச் சுட விட்டீங்கன்னு அவங்ககிட்டயே கேட்டேன். அண்ணா இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது எனக்குச் சரியான தலைவலி. நியூஸ் பேப்பரை விரிச்சுத் தரையில படுத்துக்கிடந்தேன். அண்ணா செத்துட்டதாச் சொன்னாங்க. இதைக் கேட்டதும் எஸ்.எஸ்.ஆரு கூப்பாடு போட்டாரு, சிவாஜி வந்தாரு. கதறி அழுதாரு. அப்புறம் மூக்கைச் சிந்திக்கிட்டேயிருந் தாரு. எம்.ஜி.ஆரு அங்கயே மயங்கி விழுந்தாரு'' என அழுவது போல் முகபாவனை காட்டி வைகோ சீரியஸாகப் பேச... கூட்டத்தில் ஒரு பகுதி விசி லடித்து, கைதட்டி அவருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. ஒருவர் பொறுக்க முடியாமல் பத்திரி கையாளர் பகுதிக்கே வந்து, கை தட்டியபடியே இருந்தார். ஆனாலும் பேச்சைத் தொடர்ந்த வைகோ உமர்முக்தார் சினிமாவில் தனக்குப் பிடித்த காட்சிகள், லிபியாவின் விடுதலை, ரானடேயின் தியாகம், கோவா போராட்ட வரலாறு, போர்ச்சுக லின் அட்டூழியம், பிரெஞ்சு நாட்டுத் தளபதி ட்ரைபஸ், எமிலி ஜோலா, தொல்காப்பிய சூத்திரம், மகேந்திர பல்லவன், சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி, ஹர்ஷ வர்த்தனன், நரசிம்ம பரஞ்சோதி, ஜான் எஃப்.கென்னடி, போப் ஆண்டவர், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள் என வாழ்நாளில் தான் அறிந்து வைத்திருந்த அத்தனையையும் ஒன்று விடாமல் ஒப்பிக்க... "இவரு பேச ஆரம்பிச்சு 2 மணி நேரம் ஆச்சு...' என வேகமாக கலைய ஆரம்பித் தது கூட்டம். ஆனாலும், இன்னொரு வரலா றைச் சொல்லி ""அவனுக்கு பைத்தியம் பிடிக்கிற நிலை ஏற்பட்டது. அவன் தனக்குத்தானே பேசிக் கொண்டான். தான் பைத்தியக்காரனாகி விடக்கூடாது என்று ரொம்பவே கவலைப்பட் டான்'' என்று கூட்டத்தின் மனநிலையை அறியாமல் பேசி ஒரு இடைவெளி விட, மொத்த கூட்டமும் எழுந்து நின்றது. பிறகு ஒரு வழியாக ""என் பேச்சைக் கேட்க இவ்வளவு நேரம் ஒதுக்கித் தந்திருக்கின்றீர்கள்'' என தலைக்கு மேலே கைகளை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டே ஓய்ந்தார் வைகோ.

-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: ராம்குமார்

""அரசியலுக்கு லாயக்கு இல்லை''
-தொண்டர்களின் கருத்து!



"மற்ற கட்சிகளைப்போல தொண்டர்களை மாநாட்டுக்கு அழைக்க திட்டமிடவுமில்லை. நிதி ஒதுக்கவுமில்லை' என குறைபட்டுக் கொண்டாலும், வியாபாரிகள், செல்வந்தர்கள், பெரிய கம்பெனி களிடம் வசூலித்தே மாநிலம் முழு வதிலுமிருந்து ஓரளவு கூட்டத்தைச் சேர்த்திருந்தார்கள் பொறுப்பாளர் கள். அப்படி வந்திருந்த தொண் டர்களின் கருத்தறிய பேச்சுக் கொடுத்தோம்.



தென்னரசு என்பவர், ""இந்தக் கூட்டமே போதும். அம்மா 50 சீட் தருவாங்க. ஒரு 35 இடத்துல ஜெயிப்போம். அப்புறம் தானா கட்சி வளரும். மத்த தலைவர்கள் மாதிரி முதலமைச்சர் ஆகணுங்குற ஆசை வைகோவுக்கு இல்ல'' என்றார்.


அறுபதைக் கடந்து விட்ட காவேரி, ""வடபழனியிலிருந்து கூட்டி வந்திருக்காங்க. என் கூட வந்தவங்க இன்னும் ஏழு பேரு இருக்காங்க. நாங்க எந்த கட்சியுமில்ல. சும்மா வந்தோம். வேணும்னா சமூக சேவகின்னு போட்டுக்கங்க...'' என்று சிரித்தார்.


""திருநெல்வேலில கட்டிட சென்டரிங் வேலை பார்க்கிறேன். நிஜாம் கூட்டியாந்தாரு. நான் கட்சி கிடையாது. வைகோ பிடிக்கும். ஆனா, கலைஞர் அளவுக்கு வைகோவுக்கு "நாலெஜ்' இல்ல'' என்றார் இளைஞரான சம்பத்குமார்.


""பணம் செலவழிச்சு கட்சி நடத்த முடியவில்லை. எத்தனை காலத்துக்குத்தான் கைக்காசைச் செலவழிச்சுக்கிட்டு இருப்பான் தொண்டன். வைகோ அரசியலுக்கு லாயக்கில்ல. அதான் கட்சில உறுப்பினர்கள் குறைஞ்சு கிட்டே போறாங்க. தலைவர்களும் வெளியேறிகிட்டே இருக் காங்க. நாஞ்சொல்லுறது நெஜம். அதான், மாநாட் டுக் கூட்டம் எட்டா யிரத்தைக்கூட தாண்டலை'' என்று கவலைப்பட்டார் பாண்டியன்.

No comments:

Post a Comment