Saturday, September 11, 2010

கார், சொத்து எதுவும் இல்லாத அமைச்சர் ஏ.கே.அந்தோணி-பிரபுல் படேலுக்கு ரூ. 25 கோடி சொத்து


டெல்லி: மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் பாதுகாப்பு அமைச்சரான ஏ.கே. அந்தோணியிடம் வெறும் ரூ. 1லட்சம் மட்டுமே உள்ளதாம். சொந்தமாக ஒரு கார் கூட அவரிடம் இல்லை.

மறுபக்கம் பிரபுல் படேல், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோருக்கு தலா ரூ. 25 கோடிக்கும் மேல் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜிக்கு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களே உள்ளனவாம்.

ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் அந்தோணி, எளிமைக்குப் பெயர் போனவர். இவரது பெயரில் சொத்தோ அல்லது வாகனமோ இல்லை. அவரது பெயரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இரு கணக்குகளில் முறையே ரூ. 1.01 லட்சம் மற்றும் ரூ. 16,919 ரூபாய் மட்டுமே உள்ளது. இது 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி வரையிலான கணக்கு.

மூன்று முறை கேரள முதல்வராக இருந்தவரான அந்தோணியின் மனைவி எலிசபெத் பெயரில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு, ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலம் உள்ளது. அவரது மூன்று வங்கிக் கணக்குகளில் ரூ. 3.19 லட்சம் பணம் இருப்பில் உள்ளது.

No comments:

Post a Comment