Thursday, September 9, 2010

திரைக்கூத்து!


என்னாதான் பண்றது?


ரம்பாவின் அண்ணன் வாசு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும் மொழியில் எடுக்கப்பட்ட படம் ‘"விடியும்வரை காத் திரு'. ரம்பா, பிரகாஷ்ராஜ், முமைத்கான் என நிறைய்ய நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடி. ஆனால்... குடும்ப வாழ்க்கைக்கு திரும்பி விட்ட ரம்பா திரும்பவும் சினிமாவுக்கு வந்தது போல இருக்கும். அதனால் "இந்தப் படத்தை வெளியிட வேண்டாம்' என்கிற மனநிலையில் இருக்கிறார் ரம்பாவின் கணவர் இந்திரன். "படம் வெளியாகாவிட்டால் கடன் பிரச்சனை விசுவரூபம் எடுக்கும்' என ஃபீலாகிறார் ரம்பாவின் அண்ணன் வாசு. கணவருக்கும், அண்ணனுக்கும் நடுவில் யாருக்கு சப்போர்ட் பண்ணுவது? என்கிற குழப்பத்தில் இருக்கிறார் ரம்பா. ஒக்காந்து பேசி நல்ல முடிவா எடுங்க.

இன்னொரு கூடுதல் செய்தி... கனடாவில் இருக்கும் ரம்பா இப் போது முழுகாம இருக்காராம்.


சேலகட்ட சொல்றாங்க!


தயாநிதி அழகிரி தயாரிப்பில் "வ-குவாட்டர், கட்டிங்' படம் ஸைலண்ட்டாக தயாராகிவிட்டது. "வ' என்றால் கால்பங்கு. அதாவது... குவாட் டர்னு அர்த்தமாம். இந்தப் படத்தில் லேகா வாஷிங்டன் நாயகி வேஷம் கட்டியிருக்கிறார். லேகாவப் பத்தி "வ' இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா சூப்பரா ஒரு தகவல் சொன்னாரு. ""லேகா எனக்கு நல்ல தோழி. திடீர்னு கோலிவுட்டை விட்டுட்டு பாலிவுட் போய்ட்டாங்க. ஏன்?னு கேட்டேன். ‘"கோலிவுட் ரொம்ப மோசம்.... சேலை கட்டி நடிக்கச் சொல்றாங்க... அழச் சொல்றாங்க... அதான் பாலிவுட் போயிட்டேன்'னு சொன்னார். "லேகா விரும்பிய காஸ்ட்யூம் "வ' படத்தில் கிடைச்சிருக்கு'' என கவர்ச்சிக் கதையைச் சொல்லி குவாட்டர், கட்டிங் அடிக்காமலேயே கிக்கேத்தினார்.


நல்லபுள்ளயா மாறீட்டாக!




முதன்முதலாக ஜீவா டபுள் ரோலில் மீன் வெட்டுபவராகவும், வக்கீலாகவும் நடித்து வரும் படம் "சிங்கம்- புலி'. டபுள் ஆக்ஷன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் சாய் ரமணி. சிங்கம்புலிக்கு கால்ஷீட் டேக்கா கொடுத்து வந்த திவ்யா பந்தனாஸ் இப்போ நல்ல புள்ளயா... சிங்கம்புலிக்கு இரை போடும் கவர்ச்சிமானாக கலக்கி வர்றாராம்.


அத மாத்த யாரால முடியும்!


இந்த முறை டார்க் ஏரியாவுக்குள் போகப் போறதில்லை. "அவன்-இவன்' ஜாலியான படம் என சொல்லியிருந்தார் பாலா. ஆனால் கடந்த ஒரு வாரமாக கீழ்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் பாலா.


அழ வச்சிருக்காங்க!


அடிதடி, அதகள ஸ்பெஷலிஸ்ட்டான டாக்டர் ராஜசேகரை தமிழ்-தெலுங்கில் தயாராகும் ‘"மருதாணி' படத்தில் பாசமலர் கதையில் உருக உருக நடிக்க வச்சிருக்காங்க. டாக்டரும் செமயா சோக ஆக்டிங் குடுத்திருக்காராம்.


நக்கல் விட்ருக்காங்க!


"ஊமைவிழிகள்' புகழ் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சத்யராஜ், கரண் நடித்திருக்கும் படம் ‘"இரண்டு முகம்'. "எதிர்க்கட்சித் தலைவி அடிக்கடி ஓய்வெடுப்பதில் தொடங்கி, ஆளுக்கொரு செல் போன் குடுத்தா மக்கள் ஓட்டுப் போட்டுட்டுப் போறாங்க' என்கிற இலவச அறிவிப்புகள் வரை சமகால அரசியலை நக்கல் விட்டிருக்கிறது ரூபன். ஜே. பேனா. இயற்கை விவசாயத்தின் அருமை, அந்நிய நாடுகளின் விபரீத ஆராய்ச்சிகளுக்கு இந்தியர்களை பரிசோதனை எலி யாக்குவது... என சமூக விஷயங்களை போகிற போக்கில் சொல்லி சிந்திக்க வைத்திருக்கிறார் டைரக்டர்.

அப்படியா!



காட்டன் வீரன் நடித்து சமீபத்தில் வந்த படம் மீடியாக்களிடம் பாராட்டைப் பெற்றாலும் கூட, வசூலில் மந்தம் காட்டுகிறது. இந்தப் படத்தை பெரிய இடத்து பேனரில் வெளியிட்டிருந்தாலும் கூட அந்த பேனருக்கு சம்பந்தமில்லை. பெர்மிஷன் வாங்கி அந்த பேனரை பயன்படுத்தி வெளியிட்டி ருக்கிறார்கள். ஆனால் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் தியேட்டர்-டிஸ்ட்ரி பூட்டர் தரப்பு ரீ-ஃபண்ட் கேட்டு ஹீரோவின் அப்பாவிடம் பேசி வருகிறார்கள்.

No comments:

Post a Comment