Wednesday, September 22, 2010

கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சாயத்து! தி.மு.க.வுக்கு எதிராக சென்னை? -மேயர் மா.சு.


கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சா யத்துகள் சென்னைக்குள் கட்டுக்கடங் காமல் தலைவிரித்தாடுகின்றன. இந்த நிலை தொ டர்ந்தால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பாதகமாக முடியும் என்கிற தகவல்கள் பரவிக் கிடக்கின்றது. இந்த நிலையில், சென்னை மாநகர மேயரும் தி.மு.க. இளைஞரணி யின் மாநில துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான மா.சுப்ரமணியனை சந்தித்தோம்...


தி.மு.க. கவுன்சிலர்கள் பலரின் கட்டப் பஞ்சாயத்துகளால் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதே?

கவுன்சிலர்கள் சிலரின் போக்குகள் ஆரோக்கியமாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், இதுபற்றி நிறைய புகார்கள் வந்ததை யடுத்து கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து கடுமையாகக் கண்டித்தார் தலைவர் கலைஞர். இந்த கண்டிப்புக்குப் பிறகு கவுன்சிலர்கள் தங்களைத் திருத்திக்கொண்டார்கள். தவறு செய்வதில்லை. அதேசமயம், துணை முதல்வரும் (மு.க.ஸ்டாலின்) கவுன்சிலர்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதால் அவர்கள் தவறு செய்ய நினைப்பது கிடையாது. ஆக, கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதில்லை என்பதுதான் இப்போதைய நிலை. அதனால், அவர்களால் ஆட்சிக்கு கெட்ட பெயர் என்பது தற்போது இல்லை.

கவுன்சிலர்களுக்கு என்னதான் நீங்கள் சப்போர்ட்டாக இருந்தாலும், அவர்களைப் பற்றி மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதுதான் எங்களுக்குத் தகவல். ஏற்கனவே சென்னையில் 7 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் அ.தி.மு.க. வருகிற தேர்தலில் மொத்த தொகுதிகளையும் கைப் பற்றிவிடும் என்கிறார்களே?

இதனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். கடந்த தேர்தலில் 7 தொகுதிகளை அ.தி.மு.க. ஜெயித்ததற்கு முக்கிய காரணம்... வெள்ள நிவாரணத் தொகை 2000 ரூபாயை எல்லோருக்கும் கொடுத்ததுதான். இன்றைக்கு அப்படிப்பட்ட சூழல்கள் எதுவும் கிடையாது. கடந்த நாலரை வருடங்களில் தமிழக அரசும் மாநகராட்சியும் ஏகப்பட்ட நலத் திட்டங்களை சென்னை மக்களுக்காக நிறை வேற்றியிருக்கிறது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை முழுக்க மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள், தரைப்பாலங்கள் கட்டியிருக்கிறோம். தரமான சாலைகள், தடையின்றி குடிநீர் விநியோகம், குப்பை இல்லா நகரம், மாநகராட்சிப் பள்ளிகளில் தரம் உயர்த்தல் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் சாதித்திருக் கிறோம். மேலும், மழைக்காலங்களில் வெள்ளம் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் மக்களின் அவஸ்தைகள் நீங்கியிருக்கிறது.

இவைகள் தவிர, கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், முதியோர் ஓய்வூதியம், திருமண நிதி உதவி, விதவைகளுக் கும், வயது முதிர்ந்த நிலையிலும் திரு மணம் ஆகாத பெண்களுக்கும் வாழ்க்கைப் பாது காப்பிற்கான மாதாந் திர நிதி உதவி, வேலையில்லா பட்ட தாரிகளுக்கு உதவி... இப்படி தலைவர் கலைஞர் நிறைவேற்றியுள்ள ஏகப்பட்ட நலத் திட்டங்கள் சென்னை மக்களையும் முழுமையாக சென்றடைந்திருக் கின்றது. மொத்தத்தில்... அரசின் நலத்திட்டங்களில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு குடும்பமும் பெற்றிருக்கிறது. மேலும் தலைவர், தளபதியின் உத்தரவுக் கேற்ப காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களோடு இணைந்து பணி செய்துகொண்டிருக்கிறோம். ஆக, வரும் தேர்தலில் சென்னை தி.மு.க.வின் கோட்டை என்பதை மக்கள் நிரூபிப்பார்கள்.

உங்களின் இதே சாதனைகள்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இருந்தது. ஆனாலும், அந்த தேர்தலில் தென் சென்னையை தி.மு.க. இழந்திருக்கிறதே?

தொகுதி மறு சீரமைப்பு மாற்றங்கள் ஒரு காரணம். இது தவிர சில காரணங்கள் இருக்கிறது. அதனை வெளிப்படையாக சொல்வதற்கில்லை.

சென்னை தி.மு.க.வில் நிலவும் உள்கட்சிப் பிரச்சினைகளால் தி.மு.க.வின் 100 சதவீத வெற்றி என்பது கேள்விக்குறிதான் என்கிறார்களே?

இப்படிப்பட்ட கேள்விகளையெல் லாம் எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ...! (சிரிக்கிறார்) ஆனால், இதில் உண்மை இல்லை.

கலைஞரின் வீட்டிலும் அறிவாலயத்திலும் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்கிறாரே ஜெயலலிதா?

கலைஞர் வீட்டின் பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமாக சின்ன லேன் (சந்து) இருக்கிறது. இதைத்தான் ஆக்கிர மித்திருப்பதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஆக்கிரமிக்கப் படவில்லை. ஜெயலலிதாவே நேரில் சென்று அதனை செக் பண்ணிக் கொள்ளலாம். தான் வாழ்ந்த வரலாறுமிக்க இல்லத்தையே மக்களுக்காக எழுதி வைத்த கலைஞரா மாநகராட்சி நிலத்தை ஆக்கிர மிப்பு செய்வார்? இதெல்லாம் மண்டூகங்கள் அறியாது. அறிவாலயத்தை பொறுத்தவரை... மாநக ராட்சிக்குச் சொந்தமான ஓ.எஸ்.ஆர். லேண்ட் விதிகளின்படி பூங்காவாக பராமரிக்கப்படுகிறது.

இந்தப் பூங்காவை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வெளிப்படையான தெளிவு. பூங்காவாக பராமரிக்கப்படுகிறதா? இல்லையா? என்பதை குற்றச்சாட்டுகள் கூறும் ஜெயலலிதாவும் செங்கோட்டையனும் சேகர்பாபுவும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது தனித் தனியாகவோ வந்து பார்க்கட்டும்.

பூங்காவில் அமர்ந்து நாள் முழுக்க காற்று வாங்கிச் செல்லட்டும். யார் தடுக்கப் போகிறார்கள்? யாரும் தடுக்கமாட்டார்கள். பூங்காவுக்கு வர ஜெயலலிதா தயாரா?

No comments:

Post a Comment