Monday, September 20, 2010

தெரிந்தே கெடுத்த நயன்தாரா!


பிரபு தேவா - நயன்தாராவின் 'கள்ளக் காதல்', சட்ட விரோதமான கல்யாண ஏற்பாடுகள் கோடம்பாக்கத்தில் பெரும் அதிருப்தியையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திருமணம் நடக்காமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பல்வேறு அமைப்புகள் மும்முரமாக இறங்கியுள்ளன. பல்வேறு மகளிர் அமைப்புகள் ரம்லத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஒருவேளை நயன்தாராவுடன் ரம்லத் சமரசமாகப் போனாலும், சமூக விரோதமான பலதார மணத்தை ஆதரிக்கும் இந்தத் திருமணத்தை எதிர்த்து வழக்குத் தொடரத் தயாராக உள்ளன. எனவே ரமலத்தை விவாகரத்து செய்யத் தயாராகிறாராம் பிரபு தேவா.

இன்னொரு பக்கம் பிரபுதேவா - ரம்லத் திருமணம் நடந்த போது கிளம்பிய பெரும் எதிர்ப்பைச் சமாளித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த விவிஐபிகள் நயன்தாரா மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தில் ஒரு குரூப் டான்ஸராக பணியாற்றிவர்தான் ரம்லத். இவர் மீது காதல் கொண்ட பிரபு தேவா, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணத்தை அவரது பெற்றோர் சில ஆண்டுகள் வரை ஏற்கவே இல்லை. அவர்களின் புறக்கணிப்பைத் தாங்காத பிரபு தேவா, ரம்லத்தை ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டார்.

இதனால் மனம் உடைந்த ரம்லத்துக்கு ரஜினிகாந்த்தும், அவரது மனைவி லதா ரஜினியும்தான் ஆதரவு கூறி தைரியம் அளித்தனர். பிரபுதேவாவை அழைத்துப் பேசி தனிக் குடித்தனம் நடத்துமாறு அட்வைஸ் கொடுத்து தனியாக வீடு பார்த்தும் கொடுத்தனராம். மேலும் லதா ரஜினி தனது ஆஸ்ரம் பள்ளியில் ரம்லத்துக்கு ஆசிரியை வேலையையும் வழங்கி உதவினார்.

இந்த காலகட்டத்தில் இயக்குநர் பி வாசு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட சிலர் மட்டுமே அப்போது பிரபுதேவாவுக்கு ஆதரவளித்து வந்தனர். தொடர்ந்து வாய்ப்புகளையும் வழங்கினர்.

இப்படி ரஜினி போன்ற திரையுலகப் பெரியவர்ள் பிரபுதேவாவுக்கும், அவரது திருமணத்திற்கும் ஆதரவாக இருப்பதைப் பார்த்த பிறகே பிரபுதேவா குடும்பத்தினர் இறங்கி வந்து கல்யாணத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனராம்.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் வரை மறைத்து வைத்திருந்த தனது திருமண வாழ்க்கையையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் பிரபு தேவா.

இந்த சூழ்நிலையில்தான் நயன்தாரா - பிரபு தேவா காதல் வெளிச்சத்துக்கு வந்தது. விஷயம் தெரிந்ததும் பிரபுதேவாவை முதலில் கண்டித்தவர் ரஜினிதான் என்பது கோடம்பாக்கமே அறிந்த ரகசியம். அவரது அறிவுரைக்குப் பின் நயன் விஷயத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தார் பிரபு தேவா.

"ஆனால் நயன்தாரா விடுவதாக இல்லை. இப்போதும் கூட, குறிப்பிட்ட அந்த இணைய தளத்தில் பிரபு தேவா பேட்டியை வெளியிட வைத்தவர் நயன்தாராதான். இந்தப் பேட்டிக்கு முன்தினம், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு என்று செய்தி போட வைத்தார். அடுத்த நாளே, நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரபு தேவா சொன்னதாக பேட்டியையும் வர வைத்தார். காரணம், குறிப்பிட்ட அந்த செய்தியை எழுதிய நபர் நயன்தாராவுக்கு மிக நெருக்கமானவர், நயனின் சொந்த ஊர்க்காரரும் கூட," என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்போதைய நிலவரப்படி, ரம்லத் சம்மதித்தாலும், இந்தத் திருமணம் எப்படியும் பிரச்சினைக்குள்ளாகும் என்பதால், 'பரஸ்பர விவாகரத்து' பெறும் முடிவுக்கு பிரபுதேவா குடும்பத்தினர் வந்திருப்பதாகவும், இதற்கு ஈடாக பெரும் தொகை மற்றும் பணத்தை ரம்லத்துக்கு நயன்தாரா தர சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபு தேவா - நயன்தாரா - ரம்லத் விவகாரத்தில் நடக்கிற வில்லங்க விவகாரங்களைக் கேள்விப்பட்ட ரஜினி மற்றும் நண்பர்கள், பெரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment