Thursday, September 9, 2010

நாட்டு நடப்பு!

திண்டுக்கல் : பால் பொங்குது பால் பொங்குது!


நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் "செல்ஃப் கிச்சனை' உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் மாவட்ட கலெக்டர் வள்ளலார். 5 க்யாஸ் அடுப்புகள், தேவையான பாத்திரங்கள் உள்ள இந்த அடுப்படியை நோயாளிகளின் உறவினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை அடுப்பு பற்றவைக்க 3 ரூபாய் கட்டணம். கஞ்சி, பால், சுடுதண்ணீர் என நோயாளிகளுக்கு தேவையானதை சமைக்க வும் காய்ச்சவும் சூடு பண்ணவும் செய்யலாம். தமிழ்நாட்டில் திண் டுக்கல் மருத்துவ மனையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த "சமையல் கூடத்தை' பழனி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களிலும் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார் கலெக்டர் வள்ளலார்.

-சக்தி


வாணியம்பாடி :பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்...?


தோல் தொழிற்சாலைகளில் விஷவாயு தாக்கி தொழிலாளிகள் பலியாவது வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் சர்வசாதாரணமாகிவிட்டது. ""எந்திரங்களை வைத்து துப்புரவு செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு கவசங்களும், அதிக பட்ச அடிப்படை வசதி களையும் செய்து கொடுக்க வேண்டும்'' என்றெல்லாம் தோல் தொழிற்சாலை முதலாளிகளுக்கு கட்டாய அட்வைஸ் செய்தார் கலெக்டர் ராஜேந்திரன்.

கலெக்டரின் அட்வைஸ் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? கடந்த வாரம், வாணியம்பாடி நூருல்லா தோல் தொழிற்சாலையில் பாபு என்ற தொழிலாளி "ஷாக்' அடித்து இறந்துவிட்டார். பாபு குடும்பத்திற்கு ஒரு லட்சத்தைக் கொடுத்து, விபத்தை தற்கொலையாக்கி விட்டார்களாம்.

""திருட்டு கரண்ட் எடுக்கும்போதுதான் ஷாக்கடிச்சு பாபு செத்தார். உண்மையான காரணத்தை பகிரங்கமாக சொல்ல முடியுமா? அதோ அந்த பாபு டெம்பரரி ஒர்க்கர்தானே?'' மற்ற தொழிலாளிகள் வேதனையில் விம்மிக்கொண்டிருக்கிறார்கள்.

-து.ராஜா


தூத்துக்குடி: பட்டுச்சேலை காத்தாட...!


""புத்தம் புது பட்டுச்சேலையை இப்படிக் கசக்கிப்பிட்டாளுவளே'' -அன்றைக்கு நடந்ததை இன்றுவரை மறக்க முடியவில்லை தி.மு.க. பெண் கவுன்சிலர்களால்.

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய கட்டடத் தில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால், மேயர் கஸ்தூரி தங்கம் உட்பட தி.மு.க. பெண் கவுன்சிலர் கள் அத்தனை பேருக்கும் பட்டுச்சேலை, பட்டு ரவிக்கையும் தி.மு.க. ஆண் கவுன்சிலர்களுக்கு பட்டு வேட்டி பட்டுச் சட்டையும் மொத்த தி.மு.க. கவுன்சிலர்களுக்கு கலைஞர் படம் பொறித்த 1 பவுன் தங்க மோதிரமும் பரிசளித்து முதல் கூட் டத்திற்கு அணிந்துகொண்டு வரவேண்டுமென்று கூறியிருந்தார் மா.செ. பெரியசாமி. அன் றைக்கு அவரும் மாநகராட்சிக்கு வந்து பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந் தார். மாநகராட்சிக் கூட்டம் தொடங்கியதும் ஏதோ ஒரு பிரச்சினையை கிளப்பி, அ.தி.மு.க. வினர் வெளி நடப்பு செய்த நேரத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர்களுக்கும், அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்களுக்கும் மோதல். ""போங்கடி... சரிதான் வாங்கடி...'' என்று ஆரம்பித்து பட்டுச்சேலைகளை இழுத்துக் கசக்கும் அளவுக்கு தள்ளுமுள்ளாகி ஒரு வழியாக சமாதானமானார்கள்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த அத்தனை புதுப் பட்டுச்சேலைகளும் கசங்கித்தான் வந்தன.

No comments:

Post a Comment