Tuesday, September 21, 2010

சிறுமிகள் நரபலி?

பட்டாம் பூச்சியாய் சிற கடித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளின் மர்ம மரணத்தால் திகைத்து நிற்கிறது சேலம்.

சேலம் ஜாரிகொண்டலாம் பட்டியில், வழக்கமாக ரசாயன மற் றும் சாயப்பட்டறைக் கழிவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை வாய்க்காலில் ஒரு சிறுமியின் சடலம் மிதந்து வந்தது. தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. பிறப்புறுப்பில் சூட்டுக்காயம். கை, கால், முட்டிகளில் வெட் டுக்காயம். நிர்வாணமாக மிதந்து வந்த அந்தச் சிறுமிக்கு 5 வயதிருக்கும்... அங்கே ஒதுங்கிய அந்தச் சிறுமியின் சட லத்தை பார்த்த லட்சுமி பாட்டி பெருங்குரலில் அலறினார். ""அய்யோ... காயத்ரி எங்களை விட்டுட்டு போயிட்டியேடி... ஒண்ணை இந்த ஆக்கினை பண்ணுன பாவி யாருடீ...?''.

செய்தி தெரிந்து ஓடி வந்தார் காயத்ரியின் தந்தை நாகராஜ். ""நான் சாதாரண தறி ஓட்டுற கூலிங்க. டி.பி. வியாதியில கிடந்த என் சம்சாரம் 20 நாள் முன்னாடிதான் எங்களையெல்லாம் விட்டுட்டு ஒரேயடியா போய்ச் சேர்ந்தாள். நான் பெத்த செல்வம் இப்ப சாக்கடையில பொணமா ஒதுங்கிக் கெடக்கிறாள். 5 நாள் முன்னாடி வீட்டு வாசல்ல விளையாடிட்டு இருந்த காயத்ரியை திடீர்னு காணலை. எங்கெங்கேயோ தேடினோம். போலீஸ்லயும் புகார் கொடுத்தோம்... இப்படி பிணமாப் பார்ப்பேன்னு நெனைக்கலியே!'' தேம்பினார்.

காயத்ரியின் வீட்டருகே வசிப்பவர்களோ ""இது நிச்சயமா மந்திரவாதிங்க வேலைதான்... நரபலி கொடுத்துட்டானுங்க!'' என்று ஆளாளுக்கு பயமூட்டினர்.

அடுத்த ஆறாம் நாளில்... ஓமலூர் குப்பாண்டியூரில், ஒரு கிணற்றில் மிதந்தது 9 வயது சிறுமி வனிதாவின் சடலம்.

வனிதாவின் வலது கண்ணைக் காணவில்லை. காது, உதடு, கழுத்தில் காயங்கள்... வனிதா வின் தாய் சுமதியின் கதறல் குப்பாண்டி யூரையே கண்ணீரில் மிதக்க விட்டது.

""ரெண்டு மாசமா குரூப் குரூப்பா புள்ளை புடிக்கிறவனுங்க சுத்திட்டு நிக்கிறானுங்க. போன வாரம்... யாரோ முகம் தெரியாதவன் எங்க பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து கொஞ்சுனதைப் பார்த்து ரெண்டு போட்டு விரட்டினோம்.

ஏதோ ஒரு குரூப்தான் குழந்தைகளை கடத்தி நரபலி கொடுக்குது... இந்தக் குழந் தையை அப்படித்தான் நரபலி கொடுத்திருக் கானுங்க. போலீஸ்தான் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்!'' என்கிறார்கள் ஓமலூர் குப்பாண்டியூர் வாசிகள்.

ஆனால் ஓமலூர் காவல்துறையோ ""கிணற்று மீன்கள் கடித்துதான் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தீயணைப்புத்துறை, குழந்தையை மேலே கொண்டு வரப் பயன்படுத்திய பாதாள கரண்டி பட்டுத்தான் கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது!'' என்கிறது.

போலீசார் சொல்வதை ஏற்பதற்கு, இந்தக் குழந்தைகளின் பெற்றோரோ, ஏரியா மக்களோ தயாராக இல்லை.

ஏவல் பிசாசான யட்சையை வசப் படுத்துவதற்காக சிறுமிகளை நரபலி கொடுத்துவிட்டு, சாக்கடை, வாய்க்கால், கிணறு போன்ற நீர் நிலைகளில் தூக்கிப் போடுகிறார்கள். இவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதே ஏரியா மக்களின் பயம் கலந்த கோரிக்கை.

No comments:

Post a Comment