Tuesday, September 21, 2010

ஜெயேந்திரர் உத்தரவு! மதக்கலவர டென்ஷன்!

""சாமியில்லாமல் இருந்த நம்ம மலைக்கோட்டை கோயிலுக்குள்ளே அபிராமி அம்மன் விக்கிரகத்தை வச்சு ஆராதனை பண்ணியாச்சு. எல்லாரும் தேங்காய் பழத் தோட போய் அர்ச்சனை செய்து அம்மனை கும்பிட்டு பிரசாதம் வாங்கிக்கங்க.''

14.9.10 காலையில், திண்டுக்கல் நகரம் முழுதும் இந்தத் தகவல் பரவியது. பக்தர்கள் கூட்டம், புகழ்பெற்ற மலைக்கோட்டை கோயில் நோக்கிக் கிளம்பியது.

3 அடி உயர கருங்கல்லால் ஆன படிமம். 4 கரங் களுடன் அருள்சொரியும் முகத்துடன் காட்சியளித்தாள் அபிராமியம்மன். சிலமணி நேரத்திற்கு முன்புதான் யாகம் நடத்தி, இந்த அம்மன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து விட்டுப் போயிருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர்.

கோயில் வளாகத்திலும் கோபுரத்திலும் காவிக் கொடியும், இந்து மக்கள் கட்சிக் கொடியும் பறந்துகொண்டிருந்தன.

தொல்பொருள் ஆராய்ச்சித் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டபக் கோயிலுக்குள் சிலை வைத்து வழிபாடு நடக்கும் செய்தி காவல்துறைக்கும் எட்டி யது. எஸ்.பி.தினகரன், டி.எஸ்.பி.ராமமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு வந்தனர். ""இது வழிபாட்டுத் தலமல்ல, திரும்பிச் செல்லுங்கள்'' பக்தர் களைத் தடுத்தது போலீஸ். போலீஸாரின் தடுப்பையும் மீறிக்கொண்டு புதிய அம்மனை வழிபடுவதற்காக கோஷங்களோடு செல்ல முயன்ற, இந்து முன்னணி மா.செ. ரவிபாலன் உட்பட 200 பேரை கைது செய்தது போலீஸ்.

இதற்கிடையில் திண்டுக்கல் பகுதியில் வாழும் முஸ்லிம் கள், ""நம்ம திப்பு சுல்தான் மலைக்கோட்டைக்குள் இந்து சாமியை வைத்துவிட்டார்கள். திரண்டு வாருங்கள்... நாமும் பள்ளிவாசலை உருவாக்குவோம். நம்ம கொடியை கோட்டையில் பறக்கவிடுவோம்'' உணர்ச்சிப் பெருக்கோடு கிளம்பினார்கள். திண்டுக்கல் முழுதும் மதப் பதட்டம் மையம் கொள்ளத் தொடங்கியது.

இதற்குள் திருச்சியில் இருந்து தொல் பொருள் ஆராய்ச்சித்துறையின் உதவி ஆய் வாளர் பாஸ்கரன் தலைமையில் வந்த குழு, கோயிலுக்குள் நுழைந்து அம்மன் சிலையை பெயர்த்து, சாக்கு கட்டிக் கொண்டு கிளம் பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங் களிலும் சாலை மறியல்களில் ஈடுபட்ட இந்து பக்தர்களை போலீசார் "சமாதானப்படுத்தி' விரட்டினார்கள்.

""13-ம் நூற்றாண் டில் பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேக ரப் பாண்டியனால் கட் டப்பட்டது இந்த மலைக்கோட்டை மண் டபமும் அபிராமி அம் மன் கோயிலும். அதன் பிறகு இதை ஆக்கிரமித்த திப்புசுல்தான், கோயிலில் இருந்த சிலையை கீழே கொண்டு வந்து வைத்துவிட்டான். மீண்டும் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை. 6 மாதம் முன்பு மலைக்கோட்டைக்கு வந்த காஞ்சி சங்கராச் சாரியாரும், இராம கோபாலனும், "மீண்டும் அபிராமி அம்மனை' மலைக்கோட்டை கோயிலில் வைக்க வேண்டுமென்று எங்க ளுக்கு உத்தரவிட்டார்கள். அதனாலதான் வைத்தோம்'' என்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினரும், இந்து முன்னணியினரும்.

""இனி இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் போலீஸ் பாதுகாப்பு போடப் படும்'' என்றார் தொல்பொருள் ஆராய்ச்சி உதவி ஆணையாளர் பாஸ்கரன்.

No comments:

Post a Comment