Thursday, September 9, 2010

விஜயகாந்த் போட்ட நிபந்தனை! நிராகரித்த ஜெயலலிதா! ""முட்டாள்தனம்...'' ரஜினி கோபம் யார் மீது?



""ஹலோ தலைவரே... ... கூட்டணி அமைப்பது பற்றி சிவகாசியில் விஜயகாந்த் சீறியிருப்பதைப் பார்த் திருப்பீங்க..''

""கொடநாட்டில் இருக்கும் ஜெ, அ.தி.மு.க.வின் கூட்டணி வியூகம் பற்றி ஒரு முடிவெடுக்காம இறங்கமாட் டாருன்னு ர.ர.க்கள் நம்பிக்கை யோடு இருப்பதைப் பற்றி நாமதான் பேசினோம். இப்ப விஜயகாந்த் திடுதிப்புன்னு 30, 40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்கமாட்டேன்னு சொல்லியிருக்காரே.. அ.தி.மு.க சைடில் என்ன நினைக்கிறாங்க?''

""2006 சட்டமன்ற தேர்தலில் தன் கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளையும் விடுதலை சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகளையும் ஒதுக்கிக் கொடுத்த ஜெ., அ.தி.மு.க.வை 188 தொகுதிகளில் நிறுத்தினார். அதனாலதான் ஆட்சியைப் பிடிக்க முடிய லைன்னாலும் 60 சீட்டுகளோடு பலமான எதிர்க்கட்சியா அ.தி.மு.க. நிற்க முடிந்தது. இப்ப அ.தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இல்லை. ஆனா போன முறை 13 தொகுதியில் போட்டியிட்ட சி.பி.எம்.மும், 10 தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ஐ.யும் இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் இருக்குது. அதோடு மூவேந்தர் முன்னணிக் கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை யும் அ.தி.மு.க. அணி பக்கம் நிற்குது. இவங் களுக்கும் திருப்திகரமா சீட் ஒதுக்கணும். இந்த நிலையில், விஜயகாந்த் தங்கள் பக்கம் வந்தால், தே.மு.தி.க.வுக்கு எத்தனை சீட்டுகளை ஒதுக்கு வதுங்கிறது பற்றியெல்லாம் கொடநாட்டில் கணக்குப் போட்டுக்கிட்டிருந் தாங்க.''

""அ.தி.மு.க.வும் மெஜாரிட்டி சீட்டுகளை ஜெயிக்கிற மாதிரி நின்றால்தானே, தேர்தலுக்குப் பிறகு பிக்கல் பிடுங்கல் இல்லாமல் முடிவெடுக்கமுடியும்?''

""அதுதான் ஜெ.வோட கணக்கு. அ.தி.மு.க தரப்பிலிருந்து ஒரு மூவர் அணியும் தே.மு.தி.க. தரப்பிலிருந்து ஒரு மூவர் அணியும் கூட்டணி தொடர்பா தொடர்ந்து பேசிக்கிட்டிருக்குது. 60 சீட்டுங்கிறதில் தே.மு.தி.க. பிடிவாதமா நின்னாலும், 50 சீட் வரைக்கும் கொடுக்க லாம்னு அ.தி.மு.க. தரப்பில் முதலில் யோசிக்கப் பட்டது.ம.தி.மு.கவுக்கு போனமுறை மாதிரியே 35 கொடுத் தாலும், இடதுசாரிகளோட எண்ணிக்கையை குறைக்க முடியாது.''

""இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரிசமமா சீட் கேட்பாங்களே..''

""போனமுறை தி.மு.க. கூட்டணியில் அப்படித்தான் கேட்டாங்க. சி.பி.எம்.முக்கு 13 தொகுதிகளும் சி.பி.ஐ.க்கு 10 + 1 ராஜ்யசபா சீட்டுன்னு ஒப்பந்தம் போடப்பட்டது. அதேமாதிரி அ.தி.மு.கவும் இப்ப தந்தாகணும். மூவேந்தர் முன்னணிக் கழகம், புதிய தமிழகம், ம.ம.க. எல் லாத்துக்கும் சேர்த்து குறைந்தபட்சம் 10 சீட்டாவது கொடுக் கணும். அப்படி கணக்குப் பார்த்தா 50+35+13+10+10ன்னு 118 சீட் வந்திடுது. அதாவது, மெஜாரிட்டிக்குத் தேவையான சீட் அளவுக்கு கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்க வேண்டியிருக்குது. அ.தி. மு.க.வுக்கு 116 சீட்டுகள்தான் மிஞ்சும். அத்தனையிலும் ஜெயித் தாலும் மெஜாரிட்டி கிடைக்காது. ஜெ.வைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. 140 இடங்களுக்கு குறையாமல் போட்டி யிட்டு 125 இடங்களையாவது ஜெயிச்சி, தனித்து ஆட்சியமைக்கணும்னு கணக்குப் போடுறார்.''

""அ.தி.மு.க.வுக்கு 140, தே.மு.தி.க.வுக்கு 50, ம.தி. மு.க.வுக்கு 35, சி.பி.எம். 13, சி.பி.ஐ.10, மற்ற கட்சிகளுக்கு 10-ன்னு பங்கு வச்சா 258 சீட்டு கணக்கு வருதே.. தமிழ்நாட்டில் இருப்பதே 234 தொகுதிதானே?''

""வேணும்னா வைகோவுக்கு 10 சீட்டைக் குறைச்சுக்கலாம்னு அ.தி.மு.க தலைமை ஆலோசனை செய்திருக்குது. இதை வைகோ ஏத்துக்குவாரான்னும் பேச்சு அடி பட்டிருக்குது. சகோதரியுடனான கூட்டணி தர்மம்னு அவர் 10 சீட்டை விட்டுக்கொடுத்தாலும் கணக்குப்படி 248 சீட் வருது. விஜயகாந்த் கட்சிக்கு 40 சீட்டுன்னு முடிவானால் 238 சீட்டு கணக்கு வரும். 4 சீட்டை மற்ற கட்சிகளிட மிருந்து ஆளுக்கொன்றாக குறைத்து விட்டால், ஜெ. கணக்குப்படி அ.தி.மு.க 140 இடங்களில் நிற்க லாம். இதைத்தான், தே.மு.தி.க.வின் மூவரணியிடம் பேசிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. வின் மூவரணியிடம் சொல்லி, இது பற்றி பேசி ஒரு முடிவுக்கு வாங்கன்னு ஜெ. சொல்லி யிருக்கிறார்.''

""இந்தக் கணக்குக்கு தே.மு.தி.க.வின் பதில் என்னவாம்?''

""தே.மு.தி.க. தரப்பு 60 சீட்டிலிருந்து கீழே இறங்கவே யில்லையாம். அது மட்டு மில்லீங்க தலைவரே.. .. மேற்குவங்க பாணியில் மந்திரிசபை அமைக்கப்படும்னும், மந்திரிசபையில் தே.மு.தி.க.வுக்கு பங்கு உண்டுன்னும் உறுதிமொழி கொடுத்து, இருதரப்பின் கையெழுத்துடன் கூடிய ஒப்பந்தம் போட்டுக்க ணும்னு சொல்லியிருக்காங்க. அதோடு, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஜெ.வும் விஜயகாந்த்தும் ஒன் டூ ஒன் உட்காரணும்னும் வலியுறுத்தியதோடு, தே.மு. தி.க.வுடன் கூட்டணி அமைக்கிறோம்னு அ.தி.மு.க. வெளிப்படையா அறிவிக்கணும்னும் சொல்லி யிருக்காங்க.''

""அ.தி.மு.க. தலைமைக்கு தே.மு.தி.க. இத்தனை நிபந்தனைகள் போட்டால் சரிப்படுமா?''

""அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தும் மூவரணியே, இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டா, எங்க தலைமைக்குப் பிடிக்காது. இருந்தாலும் உங்க நிபந்தனைகளைச் சொல்கிறோம்னாங்களாம். கொடநாட்டில் இருக்கிற ஜெ.கிட்டேயும் இந்தப் பேச்சுவார்த்தை விவரங்களை அ.தி.மு.க. தரப்பு சொல்லயிருக்குது. அதைக் கேட்டதும் டென்ஷனான ஜெ., 60 சீட்டெல்லாம் கொடுக்க முடியாது. 40தான். அதற்கு மேல முடியாது. அப்புறம், மேற்கு வங்க பாணியெல்லாம் தமிழ்நாட்டுக்கு சரிப்படாது. என் பாணி தனி. அதன்படிதான் சீட் ஷேரிங்-மந்திரிசபை எல்லாம் இருக்கும்னு சொல்லிடுங்கன்னுட்டாராம். இந்தத் தகவல் விஜயகாந்த்துக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கு. இதையடுத்துதான், 30 சீட்டுக்கும் 40 சீட்டுக்கும் நான் கூட்டணி அமைக்க முடியாதுன்னு சிவகாசியில் அவர் சீறித் தள்ளிட்டாரு.''

""அப்படின்னா அவரோட தேர்தல் வியூகம் என்ன?''

""தே.மு.தி.க. தனித்தே நிற்பது, இல்லேன்னா.. தனி அணி அமைத்து நிற்பதுங்கிறதுதான் விஜயகாந்த்தோட இப்போதைய ப்ளான். தனி அணி அமைத்தால் தே.மு.தி.க. மட்டுமே 30 சீட்டு களை ஜெயிக்க முடியும்னு விஜயகாந்த் நம்புறார். அதோடு, தான்தான் சி.எம். கேன்டிடேட்ங்கிற தகுதியையும் யார்கிட்டேயும் பலி கொடுக்க வேண்டியதில்லைன்னு சொல்றார். செப்டம்பர் 14-ந் தேதியோடு தே.மு.தி.க 5 வருடத்தை நிறைவு செய்யுது. அதற்காக ஒரு மாநாடு நடத்தலாம்ங் கிறது அவரோட ஐடியா. நாட்கள் குறைவா இருப்பதால, அக்டோபர் மாதம் உளுந்தூர்பேட் டையில் மாநாடு நடத்த முடிவு பண்ணியிருக் கிறார் விஜயகாந்த். இந்த மாநாட்டுக்கு பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டி, தன் தலைமை யில் அணி அமைக்க மற்ற கட்சிகளுக்கு சிக்னல் காட்டுவதுன்னு தீர்மானிச்சிருக்காராம். மாநாட்டு ஸ்பாட்டா உளுந்தூர் பேட்டையை ஏன் தேர்ந்தெடுக்கணும்னு தே.மு.தி.க வட்டா ரத்தில் விசாரித்தேங்க தலைவரே.. .. இந்த முறை விருத்தாசலத்திலிருந்து ஸ்கிப் ஆகி, உளுந்தூர் பேட்டையில் போட்டியிடுவதுங்கிற திட்டத்தில் இருக்காராம். அதற்கு முன்னோட்டம்தான் இந்த மாநாடாம்.''

""எப்படியெல்லாம் கணக்குப் போடு றாங்கப்பா...''

""ஜெ.வும் கொடநாட்டில் தொடர்ந்து கணக்குப் போட்டுக்கிட்டுத்தான் இருக்காரு. 15-ந் தேதி சென்னைக்குத் திரும்ப திட்டமிட்டிருக்கும் ஜெ, 18ந் தேதி சைதை துரைசாமி வீட்டுத் திருமண வரவேற்பில் கலந்துக்கிறார். 21-ந் தேதி மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துக்குவதுன்னு முடிவு செய்திருக்கும் ஜெ, செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பூத் கமிட்டிகளை முழுமையா அமைச்சிடணும்னு கட்சியினருக்கு உத்தரவு போட்டிருக்காராம்.''

""எதிர்க்கட்சிகளெல்லாம் தேர்தல் கணக்கில் தீவிரமா இருக்கிறப்ப முதல்வரோ, திருமண விழாக்கள், திரைப்பட விழாக்கள்னு பிஸியா கலந்துக்கிட்டிருக்காரே?''

""அதிலெல்லாம் கலந்துக்கிட்டு வாழ்த்துரை வழங்கினாலும், திருச்சிப் பொதுக்கூட்டத்தில் அவர் கவனம் தீவிரமாகத்தான் இருக்குது. பழுத்த அரசியல் தலைவராச்சே.. அரசியலையும் மற்ற விழாக் களையும் பகுத்துப் பிரித்து செயல்படுவார். கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் திருமணத்தை நடத்திவைத்துப் பேசும் போது, வைரமுத்து நீண்ட நேரம் நன்றி யுரை ஆற்றியதை சூசகமா சுட்டிக்காட்டி, தன்னை அதிக நேரம் மேடையில் உட்கார வைக்கவேண்டாம்னு பத்திரிகைகளில் எழுதப்படுவதையும் ஆனால் தன்னிடத்தில் உள்ள உரிமையின் காரணமாக வைரமுத்து நன்றியுரை என்ற பெயரால் விளக்கவுரை ஆற்றியிருக்கிறார்னு சொல்லிட்டு, எங்க ளுக்கிடையிலான அண்ணன்-தம்பி உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. அவ்வளவு கெட்டியான உறவுன்னு பலத்த கைதட்டலுக்கிடைய அறிவித்தார்.''





""வைரமுத்து வீட்டு திருமணவிழாவில் ரஜினியின் பேச்சு பரபரப்பை உண்டாக் கிடிச்சாமே?''

""ஆமாங்க தலைவரே.. கல்யாண விழாவில் எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். இதை என் அனுபவத்திலிருந்து புரிந்துகொண்டேன்னு வைரமுத்து வீட்டு கல்யாணத்தில் ரஜினி பேசினார். அதற்கு இரண்டு நாள் முன்னாடிதான்அவரோட இரண்டாவது மகள் திருமணம் கோலாகலமா நடந்து முடிந்திருந்தது. அதற்கு ரசிகர்களை நேரில் வரவேணாம்னு அவர் அறிக்கை விட்டி ருந்ததால், தங்களை அவர் புறக்கணிப்பதா ஆங்காங்கே ரசிகர்களிடமிருந்து குமுறல் வெளிப்பட்டது. அவங்களை மனதில் வச்சித்தான் ரஜினி இப்படி பேசினார்னு பலரும் நினைச்சாங்க. ரஜினி தன்னோட ரசிகர்களுக்கு புது பொண்ணு-மாப்பிள் ளையை அறிமுகப்படுத்தி ஸ்பெஷல் விருந்து வைக்க ஏற்பாடு செய்வதா அறிவிச்சிட்டாரு. வைரமுத்து வீட்டுக் கல்யாணத்தில் அவர் தன் ரசிகர்களை மனதில் வச்சி அப்படி பேசலையாம். அது வேறொருவருக்கான தகவலாம்.''

""யாருக்கு?''

""ரஜினி வீட்டுக் கல்யாணத்துக்கு கலைஞர், ஸ்டாலின், அழகிரி, வைகோ, ப.சிதம்பரம், அன்புமணின்னு கட்சி எல்லைகளைக் கடந்து பல பேரும் நேரில் வந்து வாழ்த்தினாங்க. சினிமா துறையிலிருந்து கமல், சிரஞ்சீவி, ஜெயப்ரதா, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யாராய்னு கோலிவுட் பாலிவுட் பிரபலங் களெல்லாம் வந்தாங்க. டி.வி. சேனல்களில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இத்தனை சிறப்புகள் இருந்தும், தன் குடும்பத்தினரோடு நேரில் போய் பத்திரிகை கொடுத்தும் ஜெயலலிதா இந்த கல்யா ணத்துக்கு வரலைங்கிறதில் ரஜினி தரப்புக்கு வருத்த மாம். கல்யாணம் பற்றிய சிறப்பு செய்திகளை ஒளிபரப்பிய ஆங்கில சேனல்களில், ஜெ வரவில்லைன்னு பிரேக்கிங் நியூஸ் போட்டு, அதை நேஷனல் இஷ்யூவாக்கிட்டாங்க. பட்டுவேட்டியில் கருப்புமை ஒட்டியதுபோல, எல்லாவிதத்திலும் பாராட்டுப் பெற்ற தன் மகள் திருமண-வரவேற்பு விழாவில் ஜெ.வின் ஆப்சென்ட் ஒரு இஷ்யூவானதில் ரஜினி கொஞ்சம் அப்செட்தான். அவங்க கொடநாட்டில் இருந்தாலும், அவங்க சார்பில் கட்சி சீனியர்களை அனுப்பி யிருக்கலாமே.. நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்த தற்கு இவ்வளவுதானா மரியாதைன்னு ரஜினி வட்டாரம் வருத்தப்படுது. ஜெ.வின் ஆப்சென்ட்டை மனதில் வைத்துதான், கல்யாணத்தில் எல்லோரையும் திருப்திபடுத்த நினைப்பது முட்டாள்தனம்னு ரஜினி பேசினாராம்.''

""பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு ரொம்ப சீரியஸாகவே ஒரு விஷயத்தை பேசிக்கிட்டிருக்காராம். அந்த செய்தியோடுதான் நான் லைனில் இருக்கேன். அ.தி. மு.க., தே.மு.தி.க., பா.ம.க. கட்சி களோடு பா.ஜ.க.வும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து சட்ட மன்றத் தேர்தலை சந்தித்தால், தேசிய அளவில் இந்தக் கூட்டணி முக்கியத்துவம் பெறும்ங்கிறதுதான் வெங்கையா நாயுடு பேசிக்கொண்டிருக் கும் விஷயம். சம்பந் தப்பட்ட கட்சியின் முக்கிய பிரமுகர் களிடம் இதைப் பற்றித்தான் பேசிக் கிட்டிருக்காராம்.''

No comments:

Post a Comment