Thursday, September 9, 2010

நீச்சல் வீரரின் உயிருக்குக் குறி!


அண்மைக்காலமாக தமிழகத் தலைநகரான சென்னை நகரம்... தாக்குதல் நகரமாக உருமாறி வருகிறது.. அரசியல் புள்ளிகளின் வீடுகள் மீது தாக்குதல், வி.ஐ.பி.க்களின் கார்கள் மீது தாக்குதல், நட்சத்திர ஓட்டல்கள் மீது தாக்குதல், தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் மீது தாக்குதல் என பெருகிவரும் தாக்குதல் சம்பவங்களின் பட்டியலில்... தற்போது நிகழ்ந்திருக்கும் ஒரு தாக்குதல்.... ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத் துறையையே அதிரவைத்திருக்கிறது.

காரணம்; தற்போது தாக்கப்பட்டி ருப்பவர் உலக அளவில் புகழ்பெற்றுவரும் இளம் நீச்சல் வீரரான பால கிருஷ்ணன். ஒரு மாஜி மந்திரியின் உறவினர் தரப்பு தான் இந்தத் தாக்குதலுக்கும் காரணம் என கிளம்பியிருக்கும் ஒரு உபரித் தகவல்... இந்த விவகாரத்தின் பரபரப்பை... கூடுதலாக்கியிருக்கிறது.

பாலகிருஷ்ணன் தெற்காசிய விளையாட் டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று... இந்தியாவிற்கும் தமிழகத் திற்கும் ஒருசேர பெருமை தேடித் தந்தவர். இதுதவிர தேசிய அளவிலான பல்வேறு நீச்சல் போட்டி களிலும் ஏகப்பட்ட பதக்கங்களை வாரிக்குவித்திருக்கிறார். இவரது விளை யாட்டுத் திறமையைக் கண்டு.. தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் ஒதுக்க முன்வர... நீச்சலுக்காக அதை மறுத்துவிட்டு... அண்ணா பலகலைக் கழகத்தில் பி.சி.இ. வகுப்பில் சேர்ந்தார் பாலு. அண்ணா பல்கலைக் கழகமோ அவர் நீச்சல் பயிற்சி எடுக்க ஓராண்டு சிறப்புவிடுமுறை கொடுத்து அவரை கௌரவப் படுத்தியிருக்கிறது.

அடுத்த மாதம் டெல்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும்... அதற்கு அடுத்த மாதம் சீனா வில் நடக்க இருக்கும் தெற் காசிய போட்டியிலும் பால கிருஷ்ணன் கலந்து கொள்ள தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில்தான்... 5-ந் தேதி காலை மர்ம நபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.

தலையில் 5 தையல்கள் போடப்பட்ட நிலையில் உடல்முழுதும் காயங்களோடு காட்சியளித்த பால கிருஷ்ணனை நாம் அந்தத் தனியார் மருத்துவமனையில் சந்தித்தபோது... ’’""எனக்குன்னு யாருமே எதிரிகள் இல் லை. எங்க அப்பா பத்ரிநாத்தும் அம்மா லட்சுமியும் குழந்தைகள் நல மருத்துவர்கள். அவர்கள் கொடுத்து வரும் உற்சாகத்தில்தான் நான் விளையாட்டுத்துறையில் சாதித்துவருகிறேன். எனக்கு நண்பர்களோ பொழுது போக்கோ இல்லை. நீச்சல்தான் எனக்கு வேலை. பொழுதுபோக்கு... எல்லாமே. இப்ப தீவிர நீச்சல் பயிற்சி எடுத்துவரும் நான்... காலை 5.30-க்கு வழக்கம் போல் செனாய் நகர் நீச்சல் குளத்துக்குப் போய்க்கிட்டு இருந்தேன். அப்ப... செனாய்நகர் 8-வது கிராஸில் நான் போகும்போது ரெண்டுபேர் அட்ரஸ் கேக்கறமாதிரி வழிமறிச்சாங்க. டூவீலரை நான் ஸ்லோ பண்ணியதும்.. கையில் இருந்த கிரிக்கெட் மட்டையால் என்னை கண்டபடி தாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அலறிக்கிட்டே விழுந்தேன். இதைப்பார்த்து அங்க இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடிவர... அந்த ரெண்டுபேரும் ஓடிட்டாங்க எதுக்காக யார் என்னை அடிச்சாங்கன்னே தெரிய லைங்க. நாளைக்கு வேற நம்ம முதல்வர் கையால் விருது தர்றோம்னு கோட்டைக்குக் கூப்பிட்டிருக்காங்க. எப் படி போறதுன்னு தெரியலை''’என்றார் கவலையாக. ஆனால் மறுநாள் அந்த நிலையிலும் துணை முதல்வர் ஸ்டாலின் கையால் விருதை வாங்கிக் கொண்டவர்... தாக்குதல் குறித்து அவரிடமும் புகார் மனுவைக் கொடுத்திருக்கிறார்.

பாலகிருஷ்ணனின் அப்பா டாக்டர் பத்ரிநாத்தோ ""எங்க மகனை ஒரு சாதனையாளனா உருவாக்கிக்கிட்டு இருக்கோம். எங்க பையனுக்கு இந்த வயதிலேயே பாதுகாப்புப் பிரச்சினை வருதுன்னா... எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு''‘என்றார் கலக்கமாய்.

பாலகிருஷ்ணனின் கோச்சரான சந்திரசேகரோ ""இன்னும் 20 நாளில் காமன்வெல்த் போட்டி நடக்க இருக்கு. அதுக்குள்ள பாலகிருஷ்ணனால் பூரண குண மாக முடியுமான்னு தெரியலை. காமன் வெல்த்துல பால கிருஷ்ணன் கலந்துக்கக் கூடாதுன்னு நினைக்கிற யாரோதான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கணும். ஆனா பலரும் பலவிதமா சந்தேகங்களைக் கேட்கறாங்க. பாலகிருஷ்ணனுக்கு பர்சனல் மோட்டிவ் இருக்கா... காதல் இருக்கான்னு கேட்கறாங்க. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இன்னும் சிலரோ... காமன்வெல்த் போட்டியில் கலந்துக்க இருக்கும் சக நீச்சல்வீரரான அக்னீஸ்வரன் தரப்பு செஞ்சிருக்குமான்னு கேட்கறாங்க. காரணம் அவங்க அப்பாவான ஜெயப்பிரகாஷ் என்கிற ஜெ.பி.அரசியல் பின்புலமும் சீனியர் போலீஸ் அதிகாரி களிடமும் நெருக்கம் உள்ளவர். எங்களுக்கு யார் காரணம்னு தெரியலையே''’என்றார் எரிச்சலாக.. கோச்சர் சந்திர சேகர் குறிப்பிட்ட ஜெ.பி. என்கிற ஜெயப்பிரகாஷ் பற்றி யும் விசாரித்தபோது “அவர் மாஜி அ.தி.மு.க. மந்திரி மதுசூதனனின் நெருங்கிய உறவினர். போன பீரிய டில் ரொம்ப செல்வாக்கா இருந்த வர். இப்ப அகில இந்திய நீச்சல் கழக நிர்வாகிகளில் ஒருவரா இருக்கார்’ என்றார்கள் அவரை அறிந்தவர்கள் அந்த ஜெயப்பிரகாஷிடமும் நாம் பேசினோம். அவர் மீதான விமர் சனம் குறித்து நாம் சொன்னதும், ""அந்த பாலகிருஷ்ணன் முதுகுப்பக்க மா பேக் நீச்சல் அடிக்கிறதில் சாத னை படைக்கிறவர். என் மகன் அக்னீஸ்வரன் வழக்கம்போல் குப்பு றப்படுத்து பிரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் அடிக்கிறவர். இவங்க ரெண்டுபேரும் தனித்தனி பிரிவு., அப்படியிருக்க... எதுக்கு அவரை நாங்க டிஸ்டர்ப் செய்யணும். போலீஸ் தீர விசாரிக்கும் போது... தானா உண்மை வெளில வரும்''’என்று முடித்துக்கொண்டார்.

இவர் இப்படி சொன்னாலும், போலீஸ் உயரதிகாரிகளிடம் இவ ருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதா லும் சென்னையில் உள்ள எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆட்களின் கைவரிசையா லும்தான் இந்த தாக்குதல் நடந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் பாதிக்கப் பட்டவரின் தரப்பிடம் உள்ளது.

No comments:

Post a Comment