Thursday, September 16, 2010


இளங்கோவன் இப்போதைக்குஅடங்கு வதாகத் தெரியவில்லை. கூட்டணியைப்

பற்றி யாரும் பேசக் கூடாது என்று குலாம்நபி ஆசாத் சொன்னதற்குப் பிறகாவது இளங்கோவன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அதற்குப் பிறகு இளங்கோவன் இன்னும் கூடுதலாகத்தான் பாய்ந்து வருகிறார். 'அப்படியானால் இளங்கோவனை இயக்குவது யார்?' என்ற சந்தேகம் தி.மு.க. தரப்பினருக்கு இயல்பாகவே எழத் துவங்கியுள்ளது.

தி.மு.க-வையும் கருணாநிதியையும் இளங்கோவன் விமர்சிப்பது புதிதல்ல. 'கருணாநிதிதான் எதையும் ஊதி ஊதிப் பெரிதாக்கிவிடுவாரே?'' என்று காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் இளங்கோவன் சொல்லி யதை 'தலைவரின் சாதியைக் குறிப் பிட்டுப் பேசிவிட்டார்' என்று அக்கட்சியின் மேலிடத்துக்குப் புகார் செய்தது தி.மு.க. அதைத் தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கே போய் வருத்தம் தெரிவிக்க வைக்கப்பட்டார் இளங்கோவன். அதைப்போலத்தான் இந்த முறையும் இளங்கோவனை காங்கிரஸ் தலைமை கண்டித்து அனுப்பிவைத்து, தலைவரிடம் வருத்தம் தெரிவிக்கவைக்கும் என்று தி.மு.க. தரப்பு எதிர்பார்த்ததாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதில் அறிவாலய புருவங்கள் நெறிபட்டு நிற்கின்றன!




வருத்தம் தெரிவிக்கா விட்டாலும் போகிறது... மீண்டும் மீண்டும் தாக்கிப் பேசாமலாவது இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில், 'இளங்கோவனை காங்கிரஸ் மேலிடத்தில் உள்ள சிலரே வேண்டுமென்று பேசத் தூண்டுகிறார்கள். இது விஜயகாந்த்துடன் பேசி வைத்துக்கொண்டு அரங்கேற்றப்படும் நாடகம்' என்று தமிழக அமைச்சர்கள் மட்டத்தில் ஒரு சந்தேகம் கிளம்பி உள்ளது. ''இளங்கோவனைத் தூண்டிவிட்டுப் பேசவைப்பதும், அதன் மூலமாக தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுப்பதும், அதனால் கிடைக்கும் அரசியல் லாபத்தை அறுவடை செய்வதும் இவர்களது நோக்கம் போலிருக்கிறது!'' என்கிறார் தி.மு.க. பிரமுகர் ஒருவர்.

இளங்கோவன் கடந்த 11-ம் தேதி தூத்துக்குடி அருகே ஒரு மாந்தோட்டத்தில் ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சில ரகசிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய அணியை அமைப்போம், காங்கிரஸ் ஆட்சியை உருவாக்குபோம் என்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் பேசினர்.

''நாமெல்லாம் ஒண்ணு கூடிப் பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. காங்கிரஸ் ஆட்சி அமையும்ன்னு எனக்கு ரொம்பவும் நம்பிக்கை இருக்கிறது. தனித்து நின்றால் நம்முடன் வருவதற்கு நிறையக் கட்சியினர் தயாராக இருக்கிறார்கள். மூன்றாவதுஅணி தேர்தலில் களம் இறங்க வேண்டும் அப்போதுதான் நாம் ஆட்சி அமைக்க முடியும். அந்த வாய்ப்பை விட்டுவிட்டால், இப்போது உள்ள சூழ்நிலையில் தே.மு.தி.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி அமைத்துக் கொண்டால் எத்தனை லட்சம் கொடுத்தாலும் தி.மு.க-கூட்டணி ஜெயிக்கவே முடியாது!'' என்றும் இளங்கோவன் அப்போது சொன்னாராம்!

இளங்கோவனின் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ''எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேசி வரும் இளங்கோவன், தனது விருப்பத்துக்கு மாறாக தி.மு.க. கூட்டணி தொடர்ந்தால் தனியாகப் பிரிந்து போய் புதுக் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தில் இருக்கிறார். அவரே ஓர் அணியில் ஐக்கியமாகி ஓரளவு எம்.எல்.ஏ-க்களுடன் வெற்றி பெற்று வந்தால், 'இணைப்பு விழா' நடத்தி மறுபடி சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி மறுக்காது அல்லவா? காங்கிரஸில் விலகுவதும் சேர்வதும் இயல்பான விஷயங்கள்தானே! அதுவும் தேர்தலுக்கு முன்னதாக உடைவதும் தேர்தல் முடிந்ததும் சேர்த்துக்கொள்வதும் சர்வசாதாரணமாக நடக்கும். பிரிந்து போய் விஜயகாந்த்துடன் கூட்டணி போட்டு, தி.மு.க-வுக்கு எதிரான காங்கிரஸ§க்கு ஆதரவான ஓட்டுகளை அறுவடை செய்ய இளங்கோவன் தயாராகிறார் போலிருக்கிறது'' என்று ஒரு கோணம் பார்க்கிறார் இந்த பிரமுகர்.

தி.மு.க-வின் இந்த மில்லியன் டாலர் சந்தேகத்தில் துளியாவது அர்த்தம் இருக்குமா என்பது காங்கிரஸ் மேலிடத்தின் 'மூவ்'களைப் பொறுத்தே வெளியில் தெரியும்!

No comments:

Post a Comment