Wednesday, September 22, 2010

ரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்! மீண்டும் நித்யா கைது?


""ஹலோ தலைவரே... ... தப்பு செஞ்சு அம்பலப்பட்ட பிறகும், புகார் கொடுக்க ஆளில்லைங்கிறதால தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறீங்க?''

""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்ங்கிற வாசகத்தைத்தான் நினைக்கத் தோணுதுப்பா.''

""நித்யானந்தா சாமியாரின் சரச வீடியோ வெளியான பிறகும், அவர் மேலே லெனின்தர்மானந்தா மட்டும்தானே புகார் கொடுத்திருக்காருன்னும், பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது புகார் கொடுத் திருக்காங்களான்னுதான் நித்தி தரப்பு இதுவரை கொஞ்சம் தெனா வெட்டாகவே கேட்டுக்கிட்டிருந்தது. லெனின்தர்மானந்தாவின் புகாரின் பேரில் நித்தி மீதான வழக்கை சீரியஸா விசாரிச்சிக்கிட்டிருக்கும் கர்நாடக சி.ஐ.டி போலீசாருக்கு அந்த மாநில ஆளுந்தரப்பிலிருந்து ஏகப்பட்ட நெருக்கடி. வேகத்தைக் கட்டுப்படுத்தும்படி மாநில உள்துறை அமைச்சரே சொன்னாலும், சி.ஐ.டி.யின் வேகம் குறையலை. இந்த நிலைமையில்தான், நித்யானந்தாவால் பாலியல் பாதிப்புக்குள்ளான ஒரு பெண், சி.ஐ.டி போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.''

""யார் அந்தப் பெண்?''

""புகார் கொடுப்பவர்களுக்கெல்லாம் நித்தி தரப்பால் கொலை மிரட்டல் வந்துக்கிட்டிருக்கிற நிலைமையில், அந்தப் பெண்ணின் பெயரையும் முகத்தையும் நாம ஏன் அடையாளம் காட்டணும். விசாரணை தீவிரமாகும்போது எல்லா விஷயங்களும் வெளியே வந்திடப்போகுது. ஆன்மீகங்கிற பேரில் நித்யானந்தா என்னவெல்லாம் பேசி, தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார், எத்தனை முறை சீரழிச்சாருங்கிற விவரத்தை அந்தப் பெண் சொல்லியிருப்பதால், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்குது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்திருக்கிற புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீண்டும் கைதாவாராங்கிறதுதான் பரபரப்பான எதிர்பார்ப்பா இருக்கு.''

""இங்கே தமிழ்நாட்டிலும் விஜிலென்ஸ் துறை தீவிரமா செயல்பட்டு, லஞ்ச அதிகாரிகளை கையும் களவுமா பிடிக்குது. ஆனா, அவங்க மேலேயே நடவடிக்கை எடுக்க முடியாம அதிகார வர்க்கத்திலிருந்து நெருக்கடிகள் வருதாமே?''

""ஆமாங்க தலைவரே.. ...மின்சார வாரியத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியரான செல்வம்ங்கிறவரை வாரியத்தின் உள்ளடி வேலையில் ஈடுபடுபவர்களின் தூண்டுதலால் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த சஸ்பென்ஷனை ரிவோக் செய்வதற்காக அவர் சீஃப் இன்ஜினியர் சீனி வாசனை நாடினார். சீஃப் அதற்கு லஞ்சம் கேட்க, இது பற்றி விஜிலென்ஸிடம் புகார் கொடுத்தார் செல்வம். விஜிலென்ஸ் அறிவுரைப்படி செயல்பட்ட செல்வம், சீஃப் கேட்ட பணத்தோடு நேரில் போய் அவரை சந்தித்து கொடுத்தப்ப ரெடியா இருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் மடக்கிட்டாங்க.''

""கையும் களவுமா சீஃப் இன்ஜினியர் சீனிவாசன் கைதானது பெரியளவில் பேசப்பட்டது.''

""தொடர்ந்து நடந்த விசா ரணையில் சீனிவாசனுக்கு பல பேங்க் அக்கவுண்ட் இருப்பதும், கோடிக் கணக்கில் பணம் பல இடங்களில் இருப்பதும் தெரிய வந்தது. அத னால் அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைகளால் சஸ்பெண்ட்டான ஏ.இ.செல்வத்தின் சஸ்பெண்ட்டை உடனே ரிவோக் செய்திருக்கணும். அதுதான் நடைமுறை. ஆனா, மின்வாரியமோ இதுநாள்வரை செல்வத்தின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யலை. அதே நேரத்தில், சீஃப் இன்ஜினியரின் சஸ்பென்ஷனை ரிவோக் செய்யும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்குது. சஸ்பெண்ட் டான நிலையிலும் சீனிவாசனை மின்துறை அமைச்சரின் வீட்டிலும், வாரிய சேர்மன் சி.பி.சிங்குடனும் அடிக்கடி பார்க்க முடியுதுன்னு டிபார்ட்மென்ட்டில் உள்ளவங்களே சொல்றாங்க.''

""கோலிவுட் வட்டாரம் சொல்ற ஒரு தகவலைச் சொல்றேன்.. வரும் 30-ந் தேதியன்னைக்கு தன்னோட ஆதரவாளர்கள் 1000 பேரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யில் சேரப்போறாரு சினிமா தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய் தீன். சினிமா துறையில் பல நெருக்கடிகளைத் தாண்டி வந்த காஜாமொய்தீன் இப்ப அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுத்தைகள் கட்சி வேட் பாளரா இவர் களமிறங்கு வார்னு எதிர்பார்க்கப்படுது.''

""தேர்தல் நெருங்குதே... இனி கோலிவுட் ஆட்கள் அரசியலுக்குள் என்ட்ரியாகும் தகவல்களை நிறைய எதிர்பார்க்கலாம்.''

""சென்னையில் நடந்த டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரேசில் அணியை இந்திய அணி அபாரமா ஜெயித்திருக்குது. 5 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் சீனியர்களான பயஸும் பூபதியும் ஜெயிக்க முடியாமல் போனாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய இரட்டையர் ஆட்டம், இளம் வீரர்களான சோம்தேவும், போபண்ணாவும் ஆடிய சிங்கிள் ஆட்டங்களில் ஜெயித்து 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, உலக சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்குதே..''

""பெருமையான விஷயம்தாங்க தலைவரே.. முதல்வர் கலைஞர் குலுக்கல் முறையில் ஆட்டங்களை நிர்ணயித்தார். இந்த விளையாட்டுப் போட்டியை அனைத்து இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவரும் உள்துறை அமைச்சர் ப.சியின் மகனுமான கார்த்தி சிதம்பரம்தான் சென்னையில் நடத்துவதில் முன்னின்றார்.''

""ஆனால், இந்திய டென்னிஸை உலக அரங்கில் உயர்த்தி யவர்களான தமிழகத்தைச் சேர்ந்த விஜய்அமிர்தராஜையோ, ரமேஷ் கிருஷ்ணனையோ இந்த போட்டிக்கு விருந்தினராகக் கூட அவர் அழைக்கலைங்கிற வருத்தம் டென்னிஸ் ஆர்வலர்களிடம் இருக்குது. இத்தனைக்கும், டென்னிஸ் வீரர்களை உருவாக்குவதற்காக விஜய் அமிர்தராஜ் ஒரு அகாடமியே நடத்தி வருகிறார். பயஸ், பூபதி இருவர் உள்பட இன்றைய பிரபல டென்னிஸ் வீரர்கள் பலரும் இந்த அகாடமியில் பயிற்சி எடுத்தவங்கதான். அப்படிப்பட்ட அமிர்தராஜை அழைக்காத கார்த்தியின் செயல் விமர்சனத்திற்குள்ளாகியிருக்குது.''

No comments:

Post a Comment