Sunday, September 19, 2010

எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ரஜினி ரசிகர்கள்!


எந்திரன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் கோயில்களில் வேண்டுதல், அன்னதானம், நற்பணிகள் என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்திரன் ட்ரைலரையே யானை மீது ஊர்வலமாகக் கொண்டுபோய் கொண்டாடியவர்கள் ரசிகர்கள். இந்த நிலையில், இந்தக் கொண்டாட்டங்களையெல்லாம் மிஞ்சிவிட்டது வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் ரசிகர்கள் மேற்கொண்ட 'முழங்கால் நடைப் பயணம்'.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தலைவர் சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் திரைப்படம் உலகளாவிய மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்று வேண்டியபடி சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் 1305 படிகளில் முட்டி போட்டபடி நடந்தனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று (18-9-10) காலை நடந்த இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான ரசிகர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

பின்னர் மலைக் கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயருக்கு மண்டல அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தினர் ரசிகர்கள். படத்துக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியைக் கழிக்க சிறப்பு பூஜையும் நடத்தினர்.

இதுகுறித்து சோளிங்கர் என் ரவி கூறுகையில், "உலக சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் எந்திரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தலைவரின் வெற்றி மகுடத்தில் கோஹினூர் வைரமாக மின்ன வேண்டும் என்பதற்காக நாங்கள் நடத்திய சிறப்பு பூஜை இது...." என்றார்.

No comments:

Post a Comment