Tuesday, September 21, 2010

இந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்வறிக்கை


அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து உலகின் அதிக சக்திவாய்ந்த நாடாக இந்தியா இருக்கிறது என அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

'குளோபல் கவர்னன்ஸ் 2025' என்ற பெயரில் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் குறித்த ஆய்வறிக்கையை, அமெரிக்காவின் நேஷனல் இன்டெலிஜன்ட்ஸ் கவுன்சில் மற்றும் ஐரோப்ப்பிய யூனியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் செக்யூரிட்டி ஸ்டடிஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

2010-ல் 22 சதவீத சர்வதேச அதிகாரத்துடன், அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, 16 சதவீத உலக அதிகாரத்தை சீனாவும் ஐரோப்பிய யூனியனும் கொண்டுள்ளன; இந்தியா 8 சதவீத்தை பெற்றுள்ளது. அடுத்தாக, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் 5 சதவீத அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

2025-ல் தற்போதைய தரநிலைப் பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமல் இருந்தாலும், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரம் சரிந்துவிடும்.

அதேவேளையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அதிகாரம் குறிப்பிடத்தக்க வகையில் உயரும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ல் அமெரிக்கா 18 சதவீத சர்வதேச அதிகாரத்துடனும், சீனா 16 சதவீத அதிகாரத்துடனும் இருக்கும்; ஐரோப்பிய யூனியனிடம் 14 சதவீத அதிகாரம் இருக்கும்; இந்தியா 10 சதவீத அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என அந்த ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் காலநிலை மாற்றம், எல்லை பிரச்னை, புதிய தொழில்நுட்பம் மற்றும் இயற்கை ஆதாரத்தை மேலாண்மை செய்தல் போன்ற விவகாரங்களில் சர்வதேச அளவில் பிரச்னைகள் வலுவாக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

No comments:

Post a Comment