Thursday, September 9, 2010

அரசு வேலைக்கு லஞ்சம்? நாமம் போட்ட டுபாக்கூர்!


""யோவ் காசை விட்டெறிஞ்சா கவர்ன்மெண்ட் வேலை நம்ம காலடியில வந்து விழும்யா... சரி, ஒரு ரெண்டு லட்சத்தை எப்படியாவது ரெடிபண்ணு முடிச்சிடலாம். இங்க பாரு லேட் பண் ணாத... இதே போஸ்ட்டிங்கிற்கு மூன்று லட்சம் கொடுத்து வேலைக்குச் சேர ரெடியா இருக்கானுங்க சரியா? ஹும்... கவர்ன்மெண்ட் வேலைன்னா ச்சும்மாவா?'' -இப்படி கெத்தாக இளிக்கும் டுபாக்கூர் பார்ட்டிகள் அதிகம். அப்படிப்பட்ட ஒருவனிடம்... ஏமாந்துதான், மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸிடம் புகார் கொடுத்துவிட்டு புலம்பிக்கொண்டிருக் கிறார்கள் கடலூர்வாசிகள்.

ஏமாந்தவர்கள் லிஸ்ட்டிலுள்ள அறிவழகனோ... ""ஏற்கனவே அவன்கிட்ட பணம் கொடுத்துட்டு வேலைக்காக காத்திருந்த செல்வம் மூலமாத்தான் அவனை சந்திச்சேன். அப்போ "ஏம்பா உனக்குத்தான் வேலை வாங்கித் தர்றேன்னு சொன்னேன். நீ என்னடான்னா ஊர்ல இருக்கிறவன் எல்லாரையும் கூட்டி வந்து ரெக்கமண்டேஷன் பண்ற?' என்று அவன் டென்ஷன் ஆக... அடேங்கப்பா... எப்படி யாவது இவர் கையில கால்ல விழுந்து எவ்ளோ பணமா இருந்தா லும் கொடுத்து வேலையை வாங்கிடணும்னு என் மனசு துடிக்க ஆரம்பிச் சிடுச்சு. ரொம்ப கெஞ்சின பிறகுதான் ஒத்துக்கிட் டான்.

"இங்க பாருப்பா நானும் உன்னை மாதிரிதான் மாட்டு ஊசி போடுற கம்பவுண்ட ரா வேலைக்குச் சேர்ந்து... இன்னைக்கு கால்நடை மருத்துவ ஆய்வாளரா உயர்ந்து பல பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துக் கிட்டிருக்கேன்'னு அவன் சொல்ல... புல்லரிச்சுப் போயிட்டேன். அதுக்கப்புறம்தான் எங்க வீட்ல பணம் கேட்க... "புள்ள மாட்டு ஊசி டாக்டராகப் போறான்னு சொத்தையெல்லாம் வித்துக் கொடுத்த ஒரு லட்சத்தைக் கொடுத்தேன். வேலைவாங்கித் தராம... எஸ்கேப் ஆகிட்டாங்க'' என்கிறார் வேதனையுடன்.

தோட்டப்பட்டுவைச் சேர்ந்த ராமனோ... ""பணம் திரட்டுறதுக்காக என் மகள் பிறந்த நாள் விழாவை பத்திரிகை அடிச்சு கொண்டாடுனேங்க. அந்தப் பணத்தைத்தான் கம்பவுண்டர் வேலைக்குக் கொடுத்துட்டு ஏமாந்து நிற்கிறேன் ப்ச்...'' என்கிறார் சோகமாக.

""செம்மண்டலத்துல பேட்டரி கடை வெச்சிருக்கிற கோகுல்ங்கிறவன்தாங்க அந்த டுபாக்கூர் பயலோட அஸிஸ் டெண்ட். நாங்க கொடுக்கிற பணத்தையெல்லாம் டி.டி.யாக மாற்றணும்னு ஆயிரம், ரெண்டாயிரம்னு வசூல்பண்ணு வாங்க'' என்கிறார் பொய்யாமொழி டென்ஷனாக.

பரணி என்கிற சௌந்தரராஜன்தான் வேலை வாங்கித் தருவதாக குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர், ""இவன் பணம் வாங்கிட்டு சிலபேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துருக் காங்க. அதை நம்பித்தான் பலர் பணம் கொடுத்து ஏமாந்திருக்காங்க. இவனோட காதல் மனைவியும் இவனுக்கு உடந்தைதான். எங்க போனாலும் மனித உரிமை கமிஷன் மெம்பர்னும் அமைச்சரை தெரியும்னு எஸ்.பி.யை தெரியும்னும் மிரட்டிக்கிட்டு திரியுறான். இதைவிட காமெடி என்னன்னா... அவன் கால்நடை மருத்துவரே கிடையாது. எட்டாவதே தாண்டாதவன்தான்'' என்று சிரிக்கிறார்கள் பரணியைப் பற்றி அறிந்தவர்கள்.

எஸ்.பி.யிடமிருந்து ஃபார்வர்டு ஆன "ஏமாந்தவர்களின் புகார்' என்ன ஆச்சு?' என்று கேட்டோம் எஸ்.ஐ.மகேஷ்வரி யிடம். ""இனிமேதாங்க விசாரிக்கணும்'' என்று முடித்துக்கொண்டார்.

சீக்கிரம் விசாரித்தால் பரணிக்குத் துணையாக இருக்கும் அரசு அதிகாரி களும் சிக்குவார்கள்.

No comments:

Post a Comment