Thursday, September 9, 2010

போலி டாக்டர் சர்டிஃபிகேட்!

பாதுகாப்பாய் மது அருந்திட(!) வேண் டுமா? பாதுகாப்பாய் புகை பிடித்திட(!) வேண்டுமா? உயர் ரத்த அழுத்த நோயுடன் உற்சாகமாய்(!) வாழ வேண்டுமா? நாங்கள் கொ டுக்கும் மூலிகை மருந்தை 33 நாட்கள் சாப்பிட் டாலே போதும். விலை 990 ரூபாய் மட்டுமே!

உடனே அணுகவும்... சித்த மருத்துவப் பேராற் றல் டாக்டர் ஏ.இ.ரமேஷ் ஆர்.எஸ்.எம்.பி., இன்னும் எக்கச்சக்கமான பட்டங் கள் (ஆனா... என்ன படிப்புன்னுதான் சரியா புரியல!)

இந்தக் கட்டுரையை முழுமை யாகப் படித்து முடிப்பதற்குள்ளேயே "யார் அந்த பேராற்றல் டாக்டர்?' என்ற ஆச்சரியத்தில் அவரை சந்தித்து மருந்து வாங்க ஓடிவிடுவீர்கள் என்பதால் தான் மருத்துவமனையின் பெயரையும்... முகவரியையும் ஆரம்பத்தில் குறிப்பிடவில்லை.

அதற்குக் காரணம்... இவர் ஒரு போலி மருத்துவர் என்று நமக்கு கிடைத்த தகவல்தான். அட... இந்த மாதிரி போலி மருத்துவர்கள்தான் தமிழ்நாடு முழுக்க எக்கச்சக்கமான பேர் மக்களை ஏமாற்றிக்கிட்டு திரியுறாங்களே என்கிறீர்களா? ஆனால், இந்த டாக்டர்(?) ரமேஷிடம் தமிழ்நாடு சித்த மருத்துவக் கவுன்சில் வழங்கிய அரசு பதிவு பெற்ற சான்றிதழ் இருப்பதுதான்... ஷாக்!

எப்படி? ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள சந்தேகத்துக் குள்ளான ஸ்ரீபாரதி சித்த மருத்துவ மனையின் டாக்டர்(?) ரமேஷிடமே கொக்கி போட்டோம்.

""46 வயசாகுது எனக்கு. 1998 ஏப்ரல் 18-ந் தேதி சென்னையில இருக்கிற சித்த மருத்துவ மன்றத்தில் பதிவுபண்ணி இந்த ஆர்.எஸ்.எம்.பி. டாக்டர் சர்டிஃபி கேட்டை வாங்கினேன்'' என்றவரிடம்...

"1997 நவம்பர் 30-ந் தேதியே ஆர்.எஸ்.எம்.பி. எனப்படும் "ரெஜிஸ்ட்ரேஷன் சித்தா மெடிக்கல் பிராக்டிஷனர்' சர்டிஃபிகேட் கொடுப்பதை அரசாங்கம் நிறுத்திடுச்சே... அப்படியே ஆர்.எஸ்.எம்.பி. சர்டிஃபிகேட் வாங்கினவங்களுக்கு 56 வயது தாண்டியிருக்கணுமே' என்று நாம் கிடுக்கிப்பிடி போட்ட போது...

""ஹலோ... ஈரோடு சித்த மருத்துவ சங்கத்துல இருக்கிற சீனியர் டாக்டர்தான் எனக்கு சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தாரு. தமிழ்நாடு முழுக்க இந்த மாதிரி சர்டிஃபிகேட்டை வாங்கி வெச்சிருக்காங்க பலரும்.

ஹைகோர்ட்டே எங்களை எல்லாம் அலோபதி ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்னு(?) அனுமதி கொடுத்துருச்சு. நீங்க என்னமோ எங்களை போலி டாக்டர் ரேஞ்ச்சுக்கு டீல் பண்றீங்க?'' -கெத்தாக அவர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர வைத்தன.

அப்படீன்னா... அரசு சித்த மருத்துவக் கவுன்சிலின் பதிவுச் சான்றிதழ் இவருக்கு எப்படிக் கிடைத்தது? இது போன்று எத்தனை பேர் அரசு சான்றிதழை வைத்துக்கொண்டு பொதுமக்களையும், போலீசையும் ஏமாற்றி "அல்வா' கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்? என்று ஆராய்ந்தபோதுதான் போலி மார்க்ஷீட் விவகாரத்தைப் போலவே பல அதிர்ச்சித் தகவல்கள் பூதாகரமாக கிளம்பிக்கொண்டிருக்கிறது.

சித்த மருத்துவத் துறையிலுள்ள உயர் அதிகாரி ஒருவரோ... ""கடந்த 13 வருஷங்களா பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் ஆர்.எஸ்.எம்.பி. "பி' க்ளாஸ் சர்டிஃபிகேட் மோசடி நடந்துக்கிட்டிருக்கு. இதனால அஞ்சாவது படிச்சவங்ககூட ரூபாய் 30,000-ல் இருந்து 50,000 ரூபாய்வரை கொடுத்து சித்த மருத்துவ கவுன்சிலின் சர்டிஃபிகேட்டை வாங்கி டாக்டர் ஆகிடுறாங்க.
இதனால மக்கள் உயிருக்குத்தான் ஆபத்து. அதுவும் ஆர்.எஸ்.எம்.பி. எனப்படும் பரம்பரை சித்த மருத்துவர்கள் தமிழ்நாடு முழுக்க மொத்தமே 2245-க்கும் கீழ்தான் இருப்பாங்க. ஆனா இது மாதிரி போலி சர்டிஃபிகேட்டை வெச்சிருக்கிறவங்க ஈரோடு, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், சென்னைன்னு தமிழ்நாடு முழுக்க 3,000-க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர்கள்னு சொல்லிக்கிட்டு மக்களிடம் சீட்டிங் பண்ணிக்கிட்டிருக்காங்க'' என்று அதிர்ச்சி கிளப்பியவரிடம்... "யார் இந்த போலி சர்டிஃபிகேட்டுகளை தயாரித்து விற்பது?' என்று கேட்டபோது... அவர் சொன்ன தகவல் நம் நெஞ்சையே பிளக்க வைத்தது.

""அதான் போலி டாக்டர் ரமேஷே பாதி உண்மையை கக்கிவிட்டாரே. தமிழ்நாடு முழுக்க இருக்கிற சித்த மருத்துவ சங்கத்திலுள்ள சீனியர் டாக்டர்கள்தான் போலி சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்களாக செயல்பட்டுக்கொண்டிக்கிறார்கள். இதை தயாரித்துக் கொடுப்பதே சித்த மருத்துவ கவுன்சிலிலுள்ள சில உயரதிகாரிகள்தான்'' என்று இன்னொரு குண் டையும் வீசுகிறார்.

புரோக்கர்கள் யார்? யார்? என்று தோண்டித் துருவியபோது... ஈரோட்டில் அக்பரின் பெயர்கொண்ட சித்த வைத்தியர், முருக கடவுள் பெயர் கொண்டவர், பொள்ளாச்சியில் "தேவ' என்று ஆரம்பிக்கும் கிறிஸ்துவ பெயர் கொண்டவர், திருச்சியில் "பையா' என்று முடியும் பெயர் கொண்டவர், தஞ்சா வூரில் மூர்த்தி என முடியும் பெயர் கொண்டவர், சேலத்தில் "கிங்' என பெயர் கொண்டவர் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

தமிழ் மருத்துவக் கழகத்தின் தலைவர் மைக்கேல் ஜெயராஜோ, ""எம்.எஸ்.ஸி. அனாடமி, எம்.எஸ்.ஸி. பிஸியாலஜி, எம்.எஸ்.ஸி. பார்மா அண்ட் பயோ படிச்சவங்களே டாக்டர்னு போட்டுக்கிட்டு அலோபதி சிகிச்சை அளிக்க முடியாது. ஆனா, இதையெல்லாம் நாங்களும் படிச்சிருக் கோம்னு சொல்லிக்கிட்டு அலோபதி சிகிச்சை கொடுக்கிற பட்டதாரி சித்த மருத்துவர்களால் சித்த மருத்துவம் அழிஞ்சிதான் போகும். மேலும் இதனால் அலோபதி மருந்துக் கம்பெனி களுக்குத்தான் லாபம். அதனால்தான் இதை எதிர்த்து வழக்குத் தொடுக் கப்போகிறோம். மேலும் "நாங்களும் அரசு பதிவு பெற்ற மருத்துவர் கள்தான்'னு பரம்பரை மருத்துவர்களும் அலோபதி சிகிச்சை செய்ய ஆரம்பிச் சிட்டா, மக்களின் நிலைமை என்ன ஆகுறுது? -இப்படி சிந்திச்சுக்கிட்டி ருக்கிற நேரத்துல இதிலேயே போலி சர்டிஃபிகேட் வாங்கி வெச்சிருக்கிற கில்லாடி போலி டாக்டர்களை தமிழக அரசு கடுமையாக தண்டிக்கணும் இல்லையென்றால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்கிறார் கொந்தளிப்பாக.

ஒருங்கிணைந்த சித்த மருத்துவ பேரவையின் தலைவர் டாக்டர் மூலிகை மணி வேங்கடேசனோ, "" "ஏ' க்ளாஸ் பட்டதாரி சித்த மருத்துவர்கள் 3449 பேர், "பி' க்ளாஸ் பரம்பரை சித்த மருத்துவர்கள் 2245-க்குக் கீழ். அட்டவணை பட்டியலில் இடம் பெற்றுள்ள என்லிஸ்ட் மென்ட் மருத்துவர்கள் 2411 பேருக்குக் கீழ் என கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர்தான் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தப் பதிவில் இல்லாத சித்த மருத்துவ சர்டிஃபிகேட்டை யார் காண்பித்தாலும் அவர் போலி சித்த மருத்துவர்தான். அதுவும் பரம்பரை சித்த மருத்துவ சர்டிஃபிகேட் வாங்குவதில்தான் மோசடி நடந்து கொண்டிருக்கிறது. நான் சித்த மருத்துவ கவுன்சிலின் துணைத் தலைவராக இருந்தபோது... இயக்குநராக இருந்த லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ்.-ன் கையெழுத்து சீலை போலியாக பயன்படுத்தித்தான் இந்த போலி சர்டிஃபிகேட் விநியோகிக்கப்படு கிறது. சிக்கிய ரமேஷையும் புரோக்கர்களாக செயல்படுபவர்களையும் தீவிர விசாரணை செய்தாலே பழைய ஒரிஜினல் சர்டிஃபிகேட்டில் போலியாக பெயர், ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் டைப் செய்து விற்கும் அரசு அதிகாரிகள் பலர் சிக்குவார்கள். இதற்கு ஒரே வழி பரம்பரை சித்த மருத்துவர்கள் நல வாரியம் அமைத்து பரம்பரை வைத்தியர் களுக்கு நன்கு பயிற்சி அளித்து கண்காணிக்க வேண்டும்'' என்கிறார்.

இந்த போலி மருத்துவ சர்டிஃபிகேட் குறித்து முன்னாள் இந்திய மருத்துவ கவுன்சிலின் இயக்குநரும் மாநில திட்டக்கமிஷன் ஆலோசகருமான மூத்த அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ்.ஸிடமே பேசினோம்.

""என்னது... என் கையெழுத்தை வைத்தே போலி சர்டிஃபிகேட் விற்பனை செய்கிறார்களா?'' என்று ஷாக் ஆனவர், உடனடியாக சித்த மருத்துவ கவுன்சில் அதிகாரிகளிடம் விசாரணையைத் தொடங்கி விட்டார்.

இந்திய மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் யாராக இருந்தாலும் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு, மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க...

போலி சித்த மருத்துவ சர்டிஃபிகேட் விவகாரமும் ஒருபக்கம் சுகாதாரத்துறைக்கு தலைவலியை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment