Thursday, September 9, 2010

கட்டாய குடும்பக் கட்டுப்பாடு...

குடும்பக் கட்டுப்பாடு ஆபரே ஷன் இப்போது வேண்டாம் என்று சொன்னதற்காக, பச்சை உடம்புக் காரியை, ஆஸ்பத்திரியில் இருந்து பிடரியை பிடித்து வெளிய தள்ளலாமா?

இராமநாதபுரம் அரசு மருத்துவ மனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபடத் தயாராகிவிட்டன பொது நல அமைப்புகள். சோத்தூரணியில், தன் பிறந்த வீட்டில் இருந்த எட்டிவயல் குமுதப் பிரியங்காவைப் போய்ப் பார்த்தோம். முதல் குழந்தை பெண் குழந்தை. 2 வயதாகிறது. இப்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

""இடுப்பு வலி எடுத்ததும்தான் ராம நாதபுரம் பெரியாஸ்பத்திரிக்கு போனோம். ஓசியில புள்ளைப் பெத்துகிற வந்துவிட் டாள்னு அப்பவே அசிங்க அசிங்கமா நர்சுக்க பேசுனாக. எனக்கு வலி தாங்க முடி யலை. அவுக என்னனா இப்பப் பொறக் காது இன்னம் 15 நாள் கழிச்சு வானு சொல்லி விரட்டப் பாத்தாக. கெஞ்சிக் கூத்தாடினேன். அப்புறம் பொது வார்டுல சேத்தாக. அன்னைக்கே ஆம்புளைப் புள்ளை... நல்லபடியா... சுகப்பிரசவமாச்சு.

மறுநாள்... குடும்பக் கட்டுப்பாடு பண் ணிக்க சொன்னாக. ரொம்ப பலகீனமா இருக்கு. அஞ்சாறு மாசம் கழிச்சு கட் டாயம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். சரினு போன வுக... மறுநாள் வந்து சூப் ரண்ட் டாக்டர் சொல்லிப்பிட் டாக. ஃபாரமெல்லாம் ஃபுல்லப் பண்ணியாச்சு கட்டாயம் ஆபரேஷன்னு ஒத்தக் கால்ல நிக்கிறாக... நான் முடியாதுனு சொன்ன தும்... எல்லா நர்சுகளும் ஒண்ணா சேர்ந்துக்கினு... எங்க பேச்சை கேக்காத வளுக்கு இங்கே என்ன வேலை? புள்ளைய தூக் கிட்டு போடினு பெட்ல இருந்து இழுத்து புள்ளை யத் தூக்கி கையில குடுத்து, வெளிய கொண்டாந்து விட்டுட்டாக. எம் புருஷன் இப்ப வந்துருவாக... வந்ததும் போறேன்னு கெஞ்சுனேன். மனசு இரங்காம வெளிய தள்ளிப்பிட்டாக. ஆட்டோ புடிச்சு இங்கே வந்தேன்!'' -கோபமும் வேதனையு மாகச் சொன்னார் பிரியங்கா.

""என் மகளுக்கு மட்டும்தான் இப்படி நடந்திருக்குனு நினைக்க வேணாம். குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்க மறுத்த பல பெண்களை இப்படி வெளிய புடிச்சு, தள்ளிருக்காங்க!'' என்றார் பிரியங்காவின் தந்தை விஜயகுமார்.

கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு இப்போதும் நடக் கிறதா? ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக் கண்காணிப் பாளர் டாக்டர் இபுறாகீம் அலியை சந்தித்தோம்.

""ரெண்டு குழந்தை பெற்ற பெண்ணிடம், கு.க. செய்யச் சொல்லி அட்வைஸ் செய்வோம். அரசு பாலிஸியே அதுதானே... ஆனால், இதற்காக யாரையும் ஃபோர்ஸ் பண்ண மாட்டோம். இதற்காக சொல்லாமல் போய்விட்டு, இப்போது புகார் செய்கிறாரா? இருந்தாலும் நர்ஸ்களிடம் நான் விசாரிக்கிறேன். தப்பாக நடந்து கொண்டிருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கிறேன்!'' என்றார் டாக்டர் இபுறாகீம் அலி.

குமுதப் பிரியங்காவின் குற்றச்சாட்டுகளை கலெக்டர் ஹரிகரன் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அக்கறை யோடு கேட்ட அவர், ""அந்தப் பெண் முதலில், கு.க. செய்து கொள்ளச் சம்மதித்திருக்கும். பிறகு குடும்பத்தினர் அவர் மனதை மாற்றியிருக்கிறார்கள். இதுதான் நடந்திருக்கும். சாதாரணமாக நார்மல் டெலிவரி நடந்தால் 2 நாள்தான் மருத்துவமனையில் வைத்துக் கொள்வார்கள். நர்ஸ்கள் கட்டாயப்படுத்தி அவரை வெளியேற்றி இருந்தால் அது மனித நேயமற்ற செயல்தான்... நான் ரிப்போர்ட் கேட்டிருக்கிறேன். வரட்டும்!'' என்றார் மாவட்ட ஆட்சியர்.

No comments:

Post a Comment