Saturday, September 4, 2010

வேலை முழு நேரம்! சம்பளம் பகுதி நேரம்! -போராடும் சத்துணவு ஊழியர்கள்!


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களின் சங்கத்தைச் சேர்ந்த 27-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் டிஸ்மிஸ்ஸும் 42-க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் அரசு ஊழியர்களிடம் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

முதல்வர் கலைஞரோ, "தி.மு.க. ஆட்சியில்தான் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மூன்று முறை ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது, இவர் களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 3780-ம் அதிகபட்ச ஊதிய மாக 4694-ம் வழங்கப்படுகிறது. இவை தவிர பதவி உயர்வு, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகை கால முன்பணம், ஓய்வூதியம், பொங்கல் பரிசுத்தொகை என பல்வேறு நன்மைகள் செய்யப்பட்டு வருகிறது. தவிர பகுதிநேர ஊழியர்களான இவர்கள், முழுநேர ஊழியர்களுக்கு வழங்கப்படு கிற சம்பளத்தைக் கேட்கிறார்கள்' என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பழனிச்சாமியிடம் விசாரித்தபோது, ""தொகுப்பூதியம் பெற்றுவரும் எங்களை காலமுறை ஊதியம் பெறுபவராக மாற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் கலைஞர். ஆனால் செய்ய வில்லை. சம்பள கமிஷன் பரிந்துரைகள் வராத நிலையிலே கடந்த 27 வருடமா போராடிக்கிட்டிருக்கோம். கொஞ்சமாக சம்பளத்தை உயர்த்தினார்.

ஆறாவது ஊதியக் குழுவில், ஒரு ஊழியருக்கு குறைந்த பட்சம் அடிப்படைச் சம்பளம் 4800 என்றும் அதுவே எஸ்.எஸ். எல்.சி. பாஸ் செய்திருந்தால் அவருக்கு 5200-ம் தரவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதைத்தான் தாருங்கள் என்கிறோம். அதை மறுத்த தால்தான் போராட்டம் நடத்தினோம்.

ஓய்வூதியம் 400, 500, 600 தருவதாகச் சொல்கிறார் கலைஞர். இதே ஆட்சியில் முதியோர்களுக்கு ஓய்வூதியமே 500 தருகிறார்கள். அரசுக்கு வேலையே செய்யாத முதியவர்களுக்கு 500, அரசுக்காக ஓடாய் உழைக்கிற எங்களுக்கும் 500. இது நியாயம்தானா? இன்னொரு விஷயம்... போலீஸ் மோப்ப நாய்களுக்கு 6, 7 வருஷத்துக்குப் பிறகு ஓய்வு கொடுத்துவிடுவார்கள். அதைப் பராமரிப்பதற்காக ஒரு நாய்க்கு 1500 ரூபாய் மாதம் தருகிறது இந்த அரசு. அதாவது அந்த நாய் வாழ்வதற்காக. ஆனா, எங்களுக்கு வெறும் 500. அந்த நாயைவிட நாங்கள் கேவலமானவர்களா?

அரசு உத்தரவில்தான் நாங்கள் பகுதி நேரம் என்கிறது. ஆனா நாங்கள் காலை 9 முதல் 4 மணி வரை என ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வேலை பார்க்கிறோம். இது பகுதி நேரமா? முழு நேரமா? அதனால், ஏதேதோ காரணம் சொல்லி எங்களை வஞ்சிக்காமல் எங்களின் நியாயமான உணர்வுகளை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.

போராட்டம் நடத்தியவர்களை டிஸ்மிஸ், சஸ்பெண்ட் செய்திருப்பதை மற்ற அரசு ஊழியர் சங்கங்களே ஏற்கவில்லை. ""இதுபோன்ற நடவடிக் கையை எடுப்பது ஜெயலலிதாதான். தி.மு.க.விடம் எதிர்பார்க்கவில்லை. இந்த நட வடிக்கை எதிர்மறை பலன்களை தி.மு.க.வுக்கு கொடுக்கும்'' என்கிறார்கள் இவர்கள்.

அரசுக்கும் சத்துணவு பணியாளர்களுக்கும் இடை வெளி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

No comments:

Post a Comment