Saturday, September 4, 2010

கோயில் ஊர்களில் எமர்ஜென்ஸி கெடுபிடி!



தமிழக மக்களின் அடிப் படை உரிமைகளை, ஆழக் குழி தோண்டிப் புதைக்கும் திருப்பணியை பரவலாக்கத் தொடங்கிவிட் டது இந்தியத் தொல்பொருள் துறை.

தொன்மையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தின் பரப்பளவில் 2 சதவிகித நிலத்திற்கு "பூட்டுப்' போடும் மத்திய அரசின் புதிய சட்டத்தைப் பற்றி செப்டம் பர் முதல் தேதி நக்கீரனில் "முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை' செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதேநாளில் குடந்தை தாரா சுரத்தில் இருந்து "குடும்ப அட்டை களையும் வாக்காளர் அட்டை களையும் திருப்பிக் கொடுக்கும்...' போராட்டத்திற்கான அறிவிப்பு வந்தது.

யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம் பரியச் சின் னங்களில் கும்பகோணம் அருகிலுள்ள தாரா சுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று.

இந்தக் கோயி லைச் சுற்றிலும் 300 மீட்டர் (சுமார் 1000 அடி) சுற்றளவிற்கு தடை செய்யப் பட்ட பகுதியாக வும், ஒழுங்குமுறைப் பகுதியாகவும் அறிவித்திருக்கிறார் கள். இந்த 1000 அடி சுற்றளவுக் குள் அமைந்துள்ள வீடுகளில் பழுது பார்க்கவோ, ஓடு மாற்றவோ, ஒயர் மாற்றவோ, பெயிண்ட் அடிக்கவோ கூடாது என்று அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

தாராசுரம் பொதுமக்களின் போராட்டக்குழுத் தலைவர் விஜய்யிடம் நடந்ததைக் கேட்டோம்.

""25 வருடத்துக்கு முன்பு, இந்தக் கோயிலைச் சுற்றி நிறைய வீடுகள் இருந்தன. அவைகளை அகற்றி, இராஜராஜன் நகர்னு ஒரு இடத்தைக் கொடுத் தாங்க. அந்த இடத்தில் வீடு வாசலைக் கட்டினோம். சிலபேர் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இப்ப திடீர்னு வந்து இங்கேயும் எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னு தடுக்கிறார்கள். பாதி கட்டியும் பாதி கட்டாமலும் கிடக்குது. ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் எல்லாம் ஒழுகும் நிலையில் இருக்கு. நாங்க எல்லாரும் பட்டா உள்ள பிளாட்டுகளைத்தான் வாங்கியிருக்கிறோம். எங்க சொந்த இடத்தில் எங்க உரிமைகளைத் தடுக்க இவர்கள் யார். உயிர் போனாலும் பரவாயில்லை. எங்க உரிமைகளை பறிகொடுக்க மாட்டோம்'' என்கிறார் விஜய்.

""அய்யா... உயிருக்கு ஆபத்து உண்டாக் கக்கூடிய தொழிற்சாலைகளை ஊருக்கு வெளியே ரொம்ப தொலைவில காட்டுக் குள்ள கட்டுவாங்க. கோயிலை எங்கே கட்டுவாங்க? ஊருக்கு நடுவில கட்டுவாங்க. கோயிலைக் கட்டிவிட்டு ஊரைக் காலிபண்ணுங்கனா என்ன அர்த்தம்? வருஷா வருஷம் திருவிழா நடத்தி, சொந்தஞ் சுருத்து களை வரவழைச்சுக் கொண்டாடி அன்ன தானம், விளம்பரம்னு செஞ்சதுனாலதானே இந்தக் கோயிலுக்கு பேரும் புகழும் வந்துச்சு. சுத்தி... கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஒண்ணும் இருக்கக்கூடாதா? அப்புறம் அது பாழடைஞ்ச கல்லறைத் தோட்டம் மாதிரி யில்ல ஆயிடும்? இந்தக் கோயிலுக்கும் ஊருக்கும் புகழ் சேர்ப்பதே இங்கே இருக் கிற சிற்பிகளும், ஓவியர்களும், பாத்திரம் செய்கிறவர்களும், நெசவாளர்களும்தானே.... எங்க வீடு வாச கடைகளுக்கு மட்டும் என் னத்துக்கு இவ்வளவு எமர்ஜென்சி கெடுபிடி?'' -கடைக்காரர் ராமபாக்கியத்தின் குமுறல்.

""மழையில வீட்டுச் சுவர் கரையுதேன்னு செங்கல்லை வச்சுக் கட்டினோம். வந்து தடுத்துப்பிட்டாக. வர்ணம் பூசப் பிடாது. சுண்ணாம்பு அடிக்கப் பிடாது. ஒட்டடை அடிக்காதேங் கிறாங்க. இந்த அநியாயத்தை எங்க போய்ச் சொல்றது?'' -இது குடும்பத் தலைவி பத்மாவின் ஆதங்கம்.

""அதிகாரிகள் செய்யும் அதிரடிக் கட்டுப் பாடுகளால் தாரா சுரம் ஊரே அழியப் போகுது. தமிழர் களை எல்லாம் விரட்டிவிட்டு கோ யிலை வெளிநாட் டுக்காரன்ட்ட கொ டுக்கப் போகிறார் களா?'' -இது மகேஷ் தமிழ்வா ணன் கேள்வி.

அரசின் தடை உத்தரவுகளை நிறை வேற்றிக்கொண்டி ருக்கும் தாராசுரம் பேரூராட்சியின் இ.ஓ.வான மோகன் தாஸிடம் இதைப் பற்றிக் கேட்டோம். ""எங்களுக்கு மேலிடத்து உத்தரவுங்க. உத்தரவை மீறினா ஒரு லட்சம் அபராதம். 2 வருஷம் சிறைனு அறிவிச்சிட் டாங்க. அதனாலதான் பாதுகாப்பு வேலையில கவனமா இருக்க வேண்டியிருக்கிறது'' என்றார் அவர்.

""தொன்மை மிகுந்த பண்பாட்டு கலைச் சின்னங்களை பாதுகாத்து எழில் குன்றாமல் வருங்காலத்திடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமைதான். கோயிலையொட்டி பல நூறடி ஆழ ஆழ்குழாய் கிணறுகள் தோண்டியதாலும், புதிய பிரமாண்ட கட்டடங்களுக்கு பல அடி ஆழ அஸ்திவாரப் பள்ளம் தோண்டியதாலும்தான் காளஹஸ்தி ராஜகோபுரம் நொறுங்கியது. திருவரங்கம் ராஜகோபுரம் வெடித்துக் கொண்டு நிற்கிறது.

இப்படிப்பட்ட ஆபத்தான காரியங்களை கோயிலையொட்டி செய்யத் தடை விதிக்கலாம். அதைவிட்டு விட்டு, முன்னூறு, நானூறடி தாண்டியுள்ள வீடுகளுக்கு மராமத்து செய்வதைக்கூட தடுத்தால் எப்படி மக்கள் வாழ முடி யும்?'' என்பதுதான் தமிழகத்தில் கோயிலைச் சுற்றியுள்ள மக்களின் கேள்வி!

No comments:

Post a Comment