Saturday, September 4, 2010

டம்மியாக்கப்பட்ட வெங்கடேசன்!




2009 எம்.பி. தேர்தலில் வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் என்று அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற கட்சித் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு அதிகாரம் பொருந்தியவராக இருந்த டாக்டர் வெங்கடேஷ், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் பூத் கமிட்டிகளில் இளைஞர் பாசறை உறுப்பினர்களை பயன்படுத்துவது குறித்த கூட் டத்திற்கு கூட அழைக்கப்படாத நிலைக்கு முக்கியத்துவம் இழந்திருக்கிறார். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது தொடங்கிய வெங்க டேஷின் செல்வாக்கு சரிவு இப்போது மேலும் அதலபாதாளத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள்.

காஞ்சிபுரம் பாசறை பொறுப்பாளர் கொடுத்த விளம்பரம் ஒன்றில் அந்த மாவட்டத் துக்கான பொறுப்பாளர் மைத்ரேயன் பெயரை வேண்டுமென்றே சிறிதாக போட்டு, வெங்க டேஷின் பெயரை பெரிதாக போட்டதில் ஆரம்பித் தது இந்த சரிவு. அந்த சமயத்தில் ஜெ. கூப்பிட்டு கண்டித்தபோது கூட வெங்கடேஷ் கலங்கவில்லை. சில நாட்களில் இதை சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் வெங்கடேஷின் திடீர் வளர்ச்சியால் வெறுப்பில் இருந்த டி.டி.வி. தினகரன், மகாதேவன், திவாகர் என சசிகலா குடும்ப பிரபலங்களும் அவருக்கு எதிராக தொடர்ந்து வேலை பார்த்ததின் விளைவு தான் இப்போதைய பெரும் சரிவு' என்கிறார் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள மாநில நிர்வாகி ஒருவர்.

கோவை, திருச்சி என்று ஜெ. நடத்திய பொதுக் கூட்டங்களின் போதும்கூட மேடையில் பின் வரிசை யில்தான் அமர்ந்திருந்தார். சசிகலா பிறந்தநாளின் போது கார்டனுக்கு சென்றபோது எப்படி யும் ஜெ.வை சந்தித்து பேசிவிடலாம் என்று நினைத்தார் வெங்கடேஷ். ஆனால் அப்போதும் ஜெ.வை தனியே சந்தித்து தன் தரப்பை விளக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. சென்ற வாரத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்களை ஜெ. சந்தித்தபோதும் வெங்கடேஷூக்கு அழைப்பில்லை. அந்த கூட்டத்தில், வரும் தேர் தலுக்காக அமைக்கப்படும் பூத் கமிட்டிகளில் இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி வலியுறுத்தினார் ஜெ. ஆனால் இளைஞர் பாசறை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மாநிலச் செயலாளருக்கு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் வெங்கடேஷின் அதிகாரத்தை அதிகாரப் பூர்வமாக குறைக்கும் விதமாக 3 இணைச் செயலாளர்கள் மற்றும் ஒரு துணைச் செய லாளர் பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று வெங்கடேஷின் தொடர் சரிவு பற்றி சொன்ன போயஸ் தோட்ட பணியாளர்கள் மேலும் தொடர்ந்தார்கள்.

கடந்த திங்களன்று மாலை பொள் ளாச்சி ஜெயராமன், கோகுல இந்திரா, நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர் வாகிகளுடன் கலைராஜன் எம். எல்.ஏ., தூத்துக்குடி சரவணப்பெரு மாள், வக்கீல் ராஜலட்சுமி உள் ளிட்டவர்களையும் வரவழைத்திருந் தார். அவர்களோடு பேசியபோது, ""தேர்தலுக்கு முன்பாக இளைஞர் பாசறையை மேலும் பலமாக்க வேண் டும். பூத் கமிட்டிகளில் அவர்களை அதிகமாக போட்டு தேர்தலுக்கு தயார்படுத்துங்கள். மாநிலம் முழுவதும் இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட் டங்களை நடத்துங்கள்'' என்றெல்லாம் பேசி யிருக்கிறார். மாநில நிர்வாகியாக இருக்கும் டாக்டர் வெங்க டேஷ் பற்றி எது வுமே குறிப்பிட வில்லையாம். பொது வாக இணை, துணை பொறுப்பாளர்களை நியமிக்கும்போது... மாநில நிர்வாகியுடன் கலந்து பேசுங்கள் என்று சொல்லும் ஜெ. இந்த முறை அப்படி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இணைச்செயலாளர்களில் ஒருவரான தி.நகர் எம்.எல்.ஏ. கலைராஜன், டி.டி.வி. தினகரனுடைய தீவிரமான ஆதரவாளர். வெங்கடேஷ் டீமிற்கு எதிராக வெளிப்படை யாகவே மோதி வந்தவர். அப்படிப்பட்டவருக்கு இளைஞர் பாசறை கொடுக்கப்பட்டி ருக்கிறது.

இளைஞர் பாசறை கூட் டங்களை ஒருங்கிணைக்க கோகுல இந்திராவுக்கும் உத்தரவிட்டி ருக்கிறார் ஜெ. இவரும் டி.டி.வி.யின் தீவிர ஆதர வாளர்தான். இன்னொரு இணைச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் வக்கீல் ராஜ லட்சுமிக்கு சொந்த ஊர் மன்னார்குடி என்றாலும் சென்னையிலேயே செட்டில் ஆனவர். சாதி அடிப்படையில் மைத்ரேயன் எம்.பி.யோடு இணைந்து செயல்படக் கூடியவர்.

இளம்பெண்கள் பாசறையை தனியே பிரித்து அதற்கு மாநிலச் செயலாளராக வக்கீல் ராஜலட்சுமியை நியமிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தூத்துக்குடி சரவணப்பெருமாள் குறுகிய காலத்தில் ஜெ.வின் நேரடி நம்பிக்கையைப் பெற்ற வர், திறமையானவர் என்கிற எண்ணமும் ஜெ.வுக்கு இருக்கிறது. அதேபோல ஜெ.வின் பார்வையில் பட்டு ஒரேநாளில் வெளிச்சத்துக்கு வந்தவர் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோவை விஷ்ணு பிரபு. கோவை பொதுக்கூட்டத்தின்போது அவரின் சுறுசுறுப்பை பார்த்து அவரைப் பற்றி விசாரித்திருக்கிறார். இப்போது மாநில பொறுப்பை கொடுத்துவிட்டார். இந்த டீம்தான் இனி இளைஞர் பாசறையை கவனிக்கும். இதை மீறி டாக்டர் வெஙக்டேஷ் தனியாக எதுவும் செய்துவிட முடியாது’என்று முடித்தார் கள்.

இந்த நிலையில் வியாழன் அன்று சென்னையில் நடந்த இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகளும், ஆலோசகர்களாக இருக்கும் கோகுல இந்திரா, நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மட்டுமே கலந்துகொண்டனர். மாநிலச் செய லாளரான டாக்டர் வெங்கடேஷூக்கு தெரிவிக்கப்படாமலேயே கூட்டம் நடந்திருக்கிறது.

சமீபத்திய இந்த அதிரடிகள் குறித்து டாக்டர் வெங்கடேஷ் தரப்பில் பேசினோம். ""அவர் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. ஆனால் அவரை எதிரியாக நினைப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து வேலை செய் கிறார்கள்.

ஆனாலும் அவர் வழக்கம்போல இளைஞர் பாசறையை வளர்ப்பதற்கான பணிகளில் இருக்கிறார். கடந்த வாரம்கூட மதுரை பகுதிகளில் கட்சிக்காரர்களின் திருமண நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டார்''’என்றார்கள். ஆனால் டாக்ட ருக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு சில நண்பர்களோ, ""இத்தனை அவமானங்களை சந்திக்க வேண்டுமா என்கிற ஆதங்கம் அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் தனது பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என்பது பற்றி அடிக்கடி பேச ஆரம்பித்துவிட்டார்''’என்கிறார்கள்.

தேர்தல் நெருங்கும்போதெல்லாம் சசிகலா குடும்ப உறுப்பினர்களை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார் ஜெ. அதுபோலதான் இப்போது டாக்டரை ஒதுக்கி வைத்திருக் கிறார். தேர்தலுக்கு பிறகு மீண்டும் சேர்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் டாக்டருக்கு நெருக்கமான எம்.பி. ஒருவர்.

No comments:

Post a Comment