Thursday, September 2, 2010

இளங்கோவனுக்கு நோட்டீஸ்! சிதம்பரம் போட்ட தடை!




""ஹலோ தலைவரே... பட்டமளிப்பு விழா நேரத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மாலைராஜாவால் தாக்கப் பட்டார்னு பரபரப்பான நெல்லை அண்ணா பல் கலைக்கழகத் துணைவேந்தர் திடீர்னு எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.வை தன் மனைவி யோடு சந்தித்திருப்பதைப் பார்த்தீங்களா?''

""மரியாதை நிமித்தமான சந்திப்புன்னு சொல்றாரே துணைவேந்தர் காளியப்பன்!''

""தலைவரே.. அவரோட பதவிக்காலம் செப்டம்பர் 17-ந் தேதியோடு முடிவடையுது. மாலைராஜா தன்னை தாக்க வந்தப்ப பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி இயக்குநர் தடுக்க வந்ததாகவும், அவரை எம்.எல்.ஏ தாக்கிய தாகவும், இதுசம்பந்தமா புகார் கொடுத்தும் நட வடிக்கை இல்லைங்கிறதும் தான் துணைவேந்தரோட குற்றச்சாட்டு. அதோடு, நடந்த சம்பவங்களையெல் லாம் விளக்கி துறை அமைச்ச ருக்கும் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார் துணைவேந்தர். அதற்கும் செகரட்டரி லெவலிலிருந்து கூட விசாரிப்பு இல்லையாம். இந்த நிலையில்தான், கடந்த 10 நாளா மாலைராஜா தரப்பிலிருந்து துணை வேந்தர் காளியப்பனுக்கு மிரட்டல் வந்துக்கிட்டி ருக்குதாம். ரிடையர் டுக்குப் பிறகு பதவி நீட்டிப்பு இல்லாத நிலையில் பாதுகாப்பு தேடிய துணைவேந்தர், ஜெ.வை சந்தித்திருக்கிறார்.''

""எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொன்னாராம்?''

""சொல்ல வேண்டியதையெல்லாம் தேர்தல் நேரத்தில் சொல்லுங்கன்னு சொன்ன ஜெ, தலித்துக்கு எதிரா தி.மு.க அரசின் நடவடிக்கை இருக்குங்கிற வகையில் நீங்க பேசணும்னு துணை வேந்தர்கிட்டே சொல்லியிருக்கிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கரையும் இதேபோல ஜெ.வை சந்திக்க வைக்க முயற்சிகள் நடக்குது. இதுவரை உமாசங்கர் பிடி கொடுக்கலை.''

""சி.சுப்ரமணியம் நூற்றாண்டு விழாவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அழைக்காததாலும், அவரது ஆதரவாளர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்ததாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கருப்புக்கொடி காட்டப்போறதா மொடக்குறிச்சி எம்.எல்.ஏ பழனிச்சாமி சொல்லியிருக்காரே?''

""இளங்கோவன் பக்கம் இருக்கிற ஒரே எம்.எல்.ஏ அவர் தான். மத்தவங்களெல்லாம் நிலைமையை பார்த்துட்டு விலகிட்டாங்க. அவரோட கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பற்றி டெல்லி மேலிடத்துக்கு தங்கபாலு தெரிவிச்சப்ப, கலைஞரை விமர்சனம் செய்ததால.. இளங்கோவனுக்கே ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்ப குலாம்நபி ஆசாத் ரெடியாயிட்டாரு. ப.சிதம்பரம்தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லி நிறுத்திட்டாருன்னு டெல்லியில் உள்ளவங்க சொல்லியிருக்காங்க. கோவையில் நடந்த சி.எஸ். நூற்றாண்டு விழாவில் ப.சி பேசுறப்ப, உலகம் முழுக்க இனி கூட் டணி ஆட்சிதான். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. தனிக் கட்சியை நம்பி மக்கள் வாக்களிக்க விரும்பலைன்னு பேசினார். ப.சியின் இந்தப் பேச்சையும், இளங்கோவனைக் காப்பாற்றும் விதத்தில் அவர் செயல்பட்டதையும் சந்தேகத்தோடு பார்க்குறாங்க.''

""அ.தி.மு.க தரப்பு தகவல்கள்?''

""உடல்நலன் தேறுவதற்கான சிகிச்சைகளை எடுப்பதற்காக மறுபடியும் கொடநாடு போய் ஓய்வெடுக்க முடிவு செய்துவிட்டார் ஜெ. அதனால, மதுரையில் நடக்கவிருந்த கண்டனப் பொதுக்கூட்டமும் கேன்ச லாகுது. ஏற்கனவே மதுரையில் நடக்கவிருந்த கட்சிக்காரர் கள் வீட்டுத் திருமணங்களையும் சென்னையிலே நடத் திட்டாரு ஜெயலலிதா. இப்ப கண்டனப் பொதுக்கூட்ட மும் இல்லைங்கிறதால அழகிரி தரப்பு ரொம்ப உற்சாகமா இருப்பதா மதுரை ர.ர.க்களே சொல்றாங்க.''

""கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரையிலும் அரசியல் பரபரப்பை உண்டாக்க ரெடியாக இருந்த ர.ர.க்களுக்கு ஜெ.வின் கொடநாடு ஓய்வு அப்செட்டான செய்தியா இருக்குமே?''





""அவங்களை இன்னொரு செய்தியும் அப்செட் டாக்கியிருக்கு. 30 பேர் எம்.எல்.ஏ ஆவதற்கும் 10 பேர் எம்.பி ஆவதற்குமா நான் தே.மு.தி.க.வை நடத்துறேன்னு விஜயகாந்த் தன் கட்சி நிர்வாகிகளிடம் கேட்குறாருன்னு நாம ஏற்கனவே பேசியிருக்கோம் ஞாபகமிருக்குங்களா.. அதை திண்டிவனத்தில் விஜயகாந்த் வெளிப்படையாகவே பேசிட்டாரு. எம்.ஜி.ஆருக்குப் பிறகு யாருமே நல்லாட்சி கொடுக்கலைன்னு ஜெ.வையும் சேர்த்து விமர்சித்த விஜயகாந்த், மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து ஆட்சியமைப்பேன்னு சொல்லியிருக்காரு. அதாவது, தான்தான் சி.எம்.ங்கிறதில் அவர் உறுதியா இருக்காரு. கூட்டணியை எதிர்பார்த்திருந்த ர.ரக்களை விஜயகாந்த்தின் இந்தப் பேச்சு அப்செட்டாக்கியிருக்குது.''

""டாக்டர் வெங்கடேஷும் அப்செட்டில் இருக்காராமே?''

""கட்சித் தலைமை தன்னைத் தொடர்ந்து ஓரங்கட்டுவதால் அ.தி.மு.க.வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் யோசனையில் இருந்தார் டாக்டர் வெங்கடேஷ். இந்த நிலையில், 30-ந்தேதி கொடநாடு புறப்படும் முன், கட்சி நிர்வாகிகளோடு கார்டனில் ஆலோசனை நடத்திய ஜெ., டாக்டரின் பவரைக் குறைத்து டம்மியாக்கும் விதத்தில் பாசறைக்கு இணைச் செயலாளர்களாக சரவணபெருமாள், கலை ராஜன், வக்கீல் ராஜலெட்சுமி ஆகியோரை நியமித்தார். ஒரு துணைச் செயலாளரும் நியமிக்கப்பட்டிருக் கிறார். அத்தோடு நயினார் நாகேந்திரனையும் கோகுல இந்திராவையும் டூர் போகச் சொல்லி, பூத் கமிட்டிகளில் பாசறை ஆட்களை போடச் சொல்லியிருக்கிறார் ஜெ. இதுதொடர்பாக நடந்த எந்த ஆலோ சனையிலும் டாக்டர் வெங்கடே ஷுக்கு அழைப்பு இல்லாததால் அவர் தன்னுடைய ராஜினாமா முடிவில் தீவிரமாக இருக்காராம்.''

""சட்டமேலவை அமைப்பது பற்றி தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க.வையும் காங்கிர சையும் தவிர மற்ற கட்சிகளெல்லாம் இப்போதைக்கு மேலவைத் தேர் தலை நடத்துவதில் ஆர்வம் காட் டலை. அ.தி.மு.க சார்பில் கலந்துக் கிட்ட ஓ.பன்னீர் சிரிச்சுக்கிட்டே, நீங்க அவசர அவசரமா தேர்தல் நடத் தினா, அடுத்ததா நாங்க ஆட்சிக்கு வந்ததும் அவசர அவசரமா ரத்து பண்ணிடுவோம்னு சொன்னார்.''

""அறிவாலயத்திற்கு வந்துபோகும் கரைவேட்டி பிரமுகர்கள் பலரும் மேலவை எலெக்ஷன் பற்றி என்ன பேசிக்கிறாங்கன்னு நான் சொல்றேன். எம்.எல்.ஏ எலெக்ஷனுக்கு பிறகே எம்.எல்.சி. தேர்தலை நடத்தலாம்னு சொல்றாங்க. அதாவது, தொகுதியில் கெட்ட பெயரோடு இருக்கும் சிட்டிங் மந்திரிகள், எம்.எல். ஏக்களுக்கு வரும் எலெக்ஷனில் சீட் கொடுக்காமல், உங்க ஏரியாவில் அதிக தொகுதிகளில் நம்ம கட்சியை ஜெயிக்க வையுங்க. அப்புறம் எம்.எல்.சி.யாக்கி மந்திரியாக்குறோம்னு சொன்னா, விறு விறுன்னு தேர்தல் வேலை நடக்கும்னு பேசிக்கிறாங்க.''

No comments:

Post a Comment