Saturday, September 4, 2010

வீடு தேடி வந்த நிதி!


திடீரென அதிகாரிகளை அழைத்த வேலூர் மாவட்ட ஆட்சி யர் ராஜேந்திரன் ""கைகால் நல்லா இருப்பவர்களே வாழ்க்கையில் முன்னுக்கு வர போராடவேண்டி யிருக்கு. அப்படியிருக்க... உடல் ஊனத்தோட இருக்கும் மாற்றுத் திறனாளிகள் எவ்வளவு போராட வேண்டியிருக்கும்? அதனால் அவங்க பத்தின விபரங்களை என் டேபிளுக்குக் கொண்டுவாங்க.. அவங்களைத் தேடிப்போய் நாம உதவிபண்ணலாம்''’என்றார் ஸ்ட்ரிக்டான குரலில். இதைத் தொ டர்ந்து பைல் ரெடியாக.... 24-ந் தேதி காலை ஆட்சியர் ராஜேந்திரன் தன் விசிட்டைத் தொடங்கினார்.

அவரது கார்... முதலில் குடியாத்தம் அருகே இருக்கும் நெல்லூர்ப்பேட்டை கிராமத்தில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுமுன் நின்றது. கால் ஊனமுற்ற இளைஞர் ரமேஷ்... மாவட்ட ஆட்சியர் தன் வீட்டுமுன் வந்து நிற்பதைக் கண்டு திகைத்துப்போய்... பதறியடித்து எழ... ‘""வாழ்ந்துகாட்டுவோம் திட்டத் தின்படி உனக்கு 20 ஆயிரம் ரூபாய் சேங்ஷன் ஆகி யிருக்கு. இந்தா பணம். வாழ்த்துக்கள்''’என்றபடி பணத்தைக் கொடுத்து விடைபெற...நெகிழ்ந்து போய்விட்டார் ரமேஷ்.


அடுத்து ஆட்சியரின் கார் சேங்குன்றம் கிராமத்துக்குப் போனது. அந்தப் பெட்டிக்கடைமுன் அவரது கார்போய் நிற்க... கடைக்குள் இருந்த பார்வையற்ற சேகர்... யாரோ எவரோ என திகைத்தார். காரிலிருந்து அவரிடம் நேராக சென்ற ஆட்சியர் ""நீங்கதானே சேகர். நான் இந்த மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன். இந்தாங்க.. நீங்க எதிர்பார்த்த கடன் பணம் 20 ஆயிரம் ரூபாய். இதைவச்சி... நல்லபடியா கடையை நடத்துங்க. வாழ்த்துக்கள்''’என இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டுக் கிளம்பினார். ஊர் எல்லையில் நான்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்ப தைக் கண்டவர், அவர்களை அழைத்து...’’""ஆளுக்கு ஒரு திருக் குறள் சொல்லுங்க''’என்று ஆட்சியர் கேட்க... ஒரு சிறுமி ‘"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க' அதற்குத் தக’ என்றாள் கை களைக் கட்டிக்கொண்டு. குறள் சொன்ன மாணவிக்கு அவர் சால்வை போர்த்தியதோடு... மற்ற குழந்தைகளுக்கும் அதைப் போர்த்தி ‘நீங்களும் இதேபோல் திருக்குறள் படிக்கணும்’’ என்ற படி அங்கிருந்து கிளம்பினார்.

இதைத்தொடர்ந்து ஆட்சியரின் கார் செங்குன்றம் கிராமத்துக்குள் போய் ஒரு சின்ன குடிசை வீட்டின் முன் நின்றது. வீட்டுத் திண் ணையில் லேசான உறக்கத்தில் இருந்த மாற்றுத் திறனாளி விஜயாவை எழுப்பி...’. ""ஆடு வளர்க்க நீங்க கேட்ட கடன் 20 ஆயிரம் கொண்டுவந்திருக் கோம். வாங்கிக்கங்க. உடம்பைப் பார்த்துக்கங்கம் மா''’என்றபடி பணத்தைக் கொடுத்துவிட்டு ஆட்சி யர் புறப்பட... விஜயா கண்ணீர் பளபளக்க கை கூப்பினார். இதேபோல்...நாராயணபுரம், தட்டப் பாறை, ஏர்த்தாங்கல் கிராமங்களுக்கும் சென்று உதவிகள் வழங்கினார் ஆட்சியர் ராஜேந்திரன்.

ஆட்சியருடன் இருந்த வாழ்ந்துகாட்டு வோம் திட்ட இயக்குநர் சிவகாமியோ ""மாவட் டத்தில் இருக்கும் அத்தனை மாற்றுத் திறனாளி களுக்கும் அரசின் உதவிகள் கட்டாயம் கிடைக் கும்''’என்றார் உற்சாகமாக. இது ஒருநாள் கூத்தாக முடிந்துவிடாமல்... தொடரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment