Thursday, September 2, 2010

செந்நாய்களின் அட்டகாசம்!


அதிகாலையில், கிடைக் காம்பவுண்டுக்கு வந்து பார்த்த மாரிமுத்துவும், ஆறுமுகமும், முருகையாவும் நிலைகுலைந்து போனார்கள்.

அவர்களுடைய 8 செம்மறி ஆடுகள் செத்து, வெளிறி, விரைத்துக் கிடந்தன. செந்நாய்க் கூட்டம், இந்த ஆடுகளின் குரல் வளைகளைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து விட்டுப் போயிருந்தன.

""போச்சே... ஒரே ராத்திரியில 80 ஆயிரம் ரூபாய் உசுரு களோட ரத்தத்தை குடிச்சு.... எங்களை கடன்காரங்களாக்கி விட்டதே'' -பரிதாபமாகப் புலம்பினார்கள் மூவரும். கால்நடை மருத்துவர் வந்தார். ""ஆமாம்... செந்நாய்கள் தான் கடிச்சுக் கொன்னுடுச்சு'' -எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

""நெல்லை மாவட்டத்தில் காடுகளும் தோப்புகளும், கம்பளி மலையும் கொண்ட தென்காசியை ஒட்டிய தட்டான் குளம் கிராமத்தில்தான் இந்த அவலம்.

""பொழுது போனாலே பயம்தான். எந்தத் திக்கில் இருந்து பாய்ஞ்சு வரும்னு யாருக்கும் தெரியாது. அஞ்சாறு செந்நாய்கள் சேர்ந்து, சேர்ந்துதான் வரும். ஊசிப்பாறை மாதிரி மூஞ்சி, கோரப்பல்லு, மூணடி ஒசரம்... பார்க்கவே பயங்கரமா, அகோரமா இருக்கும். ஒரு கவ்வுக் கவ்விச்சின்னா அரைகிலோ சதையைப் பிய்ச்சு எடுத்திடும். ஆனால் அதுகளுக்கு வேண்டியது ரத்தம்தான். ஆடு, மாடு, எதுவாயிருந்தாலும் குரல்வளை யில பாஞ்சிடும்...'' -முத்துகிருஷ்ணனும், மூக்கையாவும் ராமகிருஷ்ணனும் கண்களில் பயம் மின்ன சொன்னார்கள்.

தட்டான்குளம், விந்தன்கோட்டை பகுதியில் இதுவரை 40 ஆடுகளை, 3 எருமைகளை, ஒரு பசுமாட் டை பிணமாக்கி விட்ட தாகக் கூறுகிறார்கள்.

""இந்தச் செந்நாய்க் கூட்டம் 3 மாதமாத்தான் இங்கே வருது. இதுக வர்றதுக்கு முன்னாடி எங்க ஊர் நாய்கள் உள்ளூர்க்காரர்கள் யாரையும் கடித்ததில் லை. இப்ப ஆறுமுக வடிவு, சொர்ணம் மாள், பால ஜெயந்தி, இசக்கியம்மாள், அச் சன்கொண்டான்னு எட்டுபேரை கடிச்சு விட்டன. ஒவ்வொருத்தரும் ஆறு ஊசி போட்டிருக்காவ...'' என்கிறார் மாணவி பால ஜெயந்தியின் தாயார் துரைச்சி. ""செந்நாய் களால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆடுகள் வளர்ப்போருக்கு நிவாரணம் தரணும்னு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்திருக்கிறோம். அதோடு, இந்தச் செந்நாய்க் கூட்டத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்'' என்கிறார் தட்டான்குளம் ஊராட்சித் தலைவர் சங்கரபாண்டியன்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ரத்தம் உறிஞ்சும் செந்நாய்க் கூட்டம், மனிதர் களின் குரல்வளையையும் குறி வைக்குமோ என்ற பயம் தட்டான்குளம், விந்தன் கோட் டை ஏரியாவில் பரவிக்கொண்டிருக்கிறது.

""மக்கள் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒன்று, ஊருக்குள் வரும் செந்நாய்களோடு கிராமத்து நாய்களுக்கு பழக்கம் ஏற்பட்டால் அவை களுக்கு உள்ள பழக்கம் இவைகளுக்கும் பற்றிக்கொள்ளும். பிறகு இவைகளும் ரத்தம் குடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் வெறி பிடிக்காது. பிகேவியர் சேஞ்சஸ்தான்'' என் கிறார் கால்நடை மருத்துவரான செல்வ ராஜ்.

No comments:

Post a Comment