Saturday, September 4, 2010

லஞ்சத்தைச் சொன்னால் மிரட்டல்!

""சுனாமி வீட்டுக்கு 30 ஆயிரம் கமிஷனா? ஏதோ ஆயிரம், ஐநூறு என்றால் கொடுக்க முயற்சிக்கலாம். 30 ஆயிரமெல்லாம் தர முடியாது. அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன்?'' என்றாராம் பாம்பன், மொட்டையன்பனைப் பகுதியில் வசிக்கும் மீனவர் மரியராயப்பன். இவர் இடத்துக்கு கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே உள்ளவர்கள் எல்லாரும் சுனாமி வீட்டுக்கு செலக்ட் ஆகிவிட்டார்கள். இவருக்கு மட்டும் வீடு மறுக்கப்பட்டுவிட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்க்கும் முகாமில் இருந்து நக்கீர னுக்கு தகவல் தந்தார் மரியராயப்பன். ""சுனாமி வீட்டுக்காக லஞ்சம் கேட்ட அதிகாரிகளைப் பற்றி, கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்தேன். இங்கே சுனாமி ஏ.டி.க்கு பதிலா வேலை செய்ற ஒருத்தரு, "ஏண்டா எவ்வளவு தைரியம்... எங்க அதிகாரி பத்தியே புகார் கொடுக்க வந்தியா? இனிமே சுனாமி வீடு மட்டுமில்ல... எந்தச் சலுகையுமே உனக்குக் கிடைக்க விடமாட்டேன். மரியாதையா ஓடிப்போயிடு. இல்லேன்னா ஆளைவச்சு காலிபண்ணிப்பிடுவம்'னு மிரட்டுறா ருங்க.இப்ப வெளிய வந்து நிக்கிறேன். கலெக் டர்ட்ட மனு கொடுக்கணும். உதவி செய்யுங்கள்' -பதட்டக் குரலில் சொன்னார் மரியராயப்பன்.

கலெக்டர் அலுவலகம் சென்றோம். டி.ஆர்.ஓ. பாலசுப்ரமணியனும் ஆர்.டி.ஓ. பிரபா கரனும் மற்ற அதிகாரிகளும் பொதுமக்களிட மிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

மரியராயப்பனை, ஆர்.டி.ஓ. முன்னால் நிறுத்தினோம். ""பொதுமக்கள் பயமில்லாமல் தங்களோட பிரச்சினைகளை சொல்வதற்குத் தானே இதுபோன்ற முகாம்களை நடத்துறீங்க. மனு கொடுக்க வந்த இவரை உங்க ஊழியர் ஒருவர் மிரட்டி வெளியே அனுப்பியிருக்கிறார் சார்''.

""சுனாமி ஏ.டி. உடனே இங்கே வரவும்'' -மேஜையிலிருந்த மைக்கில் அழைத்தார் ஆர்.டி.ஓ.

வெள்ளை வேட்டி சட்டை அணிந்த ஒருவர், அலட்சியத் தோரணையோடு வந்தார். ""ஏ.டி.க்காக நான் தான் வந்திருக்கேன்'' என் றார் அவர்.

""மனு கொடுக்க வந்த "பப்ளிக்'கிடம் இப்படித்தான் மரியாதை குறைவா நடப் பீங்களா?'' -கண்டிப்போடு கேட்டார் ஆர்.டி.ஓ.

""இப்படியெல்லாம் மனு எழுதக் கூடாதுன்னு அட்வைஸ் செய்தேன். மிரட்ட வில்லை'' என்றார் அலட்சியத்தோடு அந்த ஊழியர் மலைராஜ்.

பக்கத்தில் நின்ற மரிய ராயப்பன் உடனே குறுக்கிட்டு, ""என் குழந்தைங்க மேல சத்தியமா இவர் மிரட்டினாருங்க. இவங்க கேட்ட லஞ்சத் தை கொடுக்கலைன்னுதான் என்னை சுனாமி வீட்ல சேர்க்கலை'' என்றார் தழுதழுத்த குரலில்.

""நீங்க பயப்படாதீங்க. இந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு கலெக்டரிடம் சொல்றேன். உங்களுக்கு சுனாமி வீடு கிடைக்க ஏற்பாடு செய்றேன்... அந்த மனுவை என்னிடம் தாங்க'' மனுவைப் பெற்றுக்கொண்டு மரிய ராயப்பனையும் நம்மையும் அனுப்பி வைத்தார் ஆர்.டி.ஓ. பிரபாகரன்.

அங்கு நடந்த விஷயங்களை கலெக்டர் ஹரிகரன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் கலெக்டர்

No comments:

Post a Comment